மேலும் அறிய

Rajinikanth: “ராமர் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் வருவேன், நான் பாக்கியசாலி” - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

Ayodhya Ram Mandir: ராமர் கோவில் திறப்பு விழாவிற்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது அனுபவத்தை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஊடகங்களில் இடம் பெற்றுள்ள தலைப்புச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு தொடர்பானதாகத்தான் உள்ளது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்ததும்தான். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது. 

இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார்  எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 

ராமர் கோவில் திறப்பு விழாவின் தொடக்கம் முதல் கடைசி வரை இருந்த நடிகர் ரஜினிகாந்த், அயோத்தியில் இருந்து மாலை 6 மணி சுமாருக்கு புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ இந்த வரலாற்று தருணத்தில் நான் பங்கேற்றது எனது பாக்கியமாக கருதுகின்றேன். இனி ஒவ்வொரு ஆண்டும் நான் தவறாமல் இங்கு வருவேன். இன்று இங்கு நடந்தது ஒரு இதிகாச நிகழ்வு” எனவும் பேசியுள்ளார். 

ராமர் கோவில் குறித்த முக்கிய தகவல்கள்

அயோத்தி ராமர் கோயில் மொத்தம் 1800 கோடி ரூபாய் செலவில் 2.7 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. கோயில் கட்டப்பட்ட பகுதி 57,400 சதுர அடிகளைக் கொண்டுள்ளது. இது கட்டிடக்கலை முயற்சியின் பிரமாண்டத்தையும், அளவையும் பிரதிபலிக்கிறது.

கோயிலானது மொத்தமாக 360 அடி நீளமும் 235 அடி அகலமும் கொண்டிருக்க, அதன் சிகரத்தையும் சேர்த்து 161 அடியை உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கணிசமான அமைப்பு மூன்று தளங்களில் பரவியுள்ளது, ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டுள்ளது. போதிய அளவிலான இடவசதி வழங்கப்பட்டு இருப்பது, அங்கு பல்வேறு செயல்பாடு மற்றும் சடங்குகள் நடைபெற வழிவகை செய்கிறது. 

கோயிலின் அடித்தளம் கணிசமான எண்ணிக்கையிலான தூண்களால் ஆதரிக்கப்படுகிறது. தரை தளத்தில் 160 தூண்கள் உள்ளன. முதல் தளம் 132 தூண்களாலும், இரண்டாவது தளம், சிக்கலான வடிவமைப்பு மற்றும் விவரங்களைக் காண்பிக்கும், 74 தூண்களாலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இவை கோயிலின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மை மற்றும் அழகியலுக்கு பங்களிக்கிறது.

கோயிலுக்கு கீழே 2000 அடி ஆழத்தில் ஒரு டைம் கேப்ஸ்யூல் புதைக்கப்பட்டுள்ளது. அதில் ராமர் கோயில் மற்றும் ராமர் பற்றிய தகவல்கள் பொறிக்கப்பட்ட செப்பு தகடு உள்ளது. வருங்கால சந்ததியினருக்கு கோயிலின் விவரங்களை கடத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத முக்கியத்துவத்திற்கு அப்பால், ராமர் கோயில் ஒரு கலாசார மையமாக கருதப்படுகிறது. கல்வி இடங்கள் மற்றும் தியானத்திற்கான பகுதிகளைச் சேர்ப்பது ஆன்மீக, கலாச்சார மற்றும் கல்வி நோக்கங்களை வளர்ப்பதில் கோயிலின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணியில் எஃகு அல்லது இரும்பு முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு ஒரு தனித்துவமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. பாரம்பரிய கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பன்சி பஹர்பூர் இளஞ்சிவப்பு மணற்கற்கள் பிரதான கோயில் அமைப்பைக் கொண்டுள்ளது. கிரானைட் கற்கள் அஸ்திவாரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இது கோயிலுக்கு நீடித்த அடித்தளத்தை வழங்குகிறது. கிரானைட்டின் பயன்பாடு, கோயிலின் ஒட்டுமொத்த ஆயுளுக்கு பங்களிப்பதோடு,  கட்டமைப்பில் வலிமையையும் சேர்க்கிறது. 

கட்டுமானமானது "ராம் ஷிலாஸ்" என்று அழைக்கப்படும் சிறப்பு செங்கற்களை உள்ளடக்கியது, அவற்றில் "ஸ்ரீ ராம்" என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கற்கள் ராமர் சேது பாலம் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கற்களை பறைசாற்றும் விதமாக பயன்படுத்தப்பட்டுள்ளன

நேபாளத்தின் கண்டகி ஆற்றில் காணப்படும் புனித புதைபடிவமான ஷாலிகிராம் பாறை ராமர் கோயில் கட்டுமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில் போற்றப்படும், ஷாலிகிராம் விஷ்ணுவின் அடையாளமாகக் கருதப்படுகிறது, இது கோயிலுக்கு ஆன்மீக பரிமாணத்தை சேர்க்கிறது.

2587 மத வழிபாட்டுத் தலங்களின் புனித மண்ணைக் கொண்டு ராமர் கோயிலின் அடித்தளம் கட்டப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவிற்கு தாய்லாந்தின் அயுத்யா நகரில் இருந்தும் மண் அனுப்பப்பட்டுள்ளது. கூடுதலாக, தாய்லாந்தில் உள்ள சாவ் பிரயா, லோப் பூரி மற்றும் பா சாக் ஆகிய மூன்று நதிகளில் இருந்தும் தண்ணீர் அனுப்பப்பட்டுள்ளது.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
Embed widget