மேலும் அறிய

Gautham Karthik : சுதந்திர காலகட்டத்திற்கு கடத்திச்செல்லும் கௌதம் கார்த்திக்... '1947- ஆகஸ்ட் 16' படம் கைக்கொடுக்குமா?

பொன்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் சுதந்திர போராட்ட காலகட்ட நிகழ்வுகளை கண்முன்னே கொண்டு வர தயாரான 1947- ஆகஸ்ட் 16 படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். அதனை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான கஜினி, ரமணா என மிகவும் ஸ்ட்ராங்கான கதையம்சம் கொண்ட திரைப்படங்களாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். படம் இயக்குவதை தொடர்ந்து 'ஏ.ஆர் முருகதாஸ் புரோடக்ஷன்ஸ்'  என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வந்தார். அப்படி அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியான திரைப்படங்களான 'மான் கராத்தே, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற பல படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தன. 

 

Gautham Karthik : சுதந்திர காலகட்டத்திற்கு கடத்திச்செல்லும் கௌதம் கார்த்திக்... '1947- ஆகஸ்ட் 16' படம் கைக்கொடுக்குமா?
அந்த வகையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தனது நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'. அவருடன் இணைந்து ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் செளத்ரி இப்படத்தை தயாரித்துள்ளனர். ஏ.ஆர். முருதாஸ் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர் பொன்குமார். கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் '1947- ஆகஸ்ட் 16' திரைப்படத்தை இயக்குகிறார் என்.எஸ். பொன்குமார். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரேவதி புதுமுக நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.  

சீன் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான "கோட்டிக்கார பயலே' பாடல் வெளியாகி ரசிகர்களை வரவேற்பை பெற்றது. அதற்கு முன்னர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது. 

அந்த வகையில் '1947- ஆகஸ்ட் 16' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது படக்குழு. வரும் ஏப்ரல் 7ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது எனும் தகவலை படத்தின் கதாநாயகன் கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வெளியிட்டிருந்தார். இந்த செய்தி கௌதம் கார்த்திக் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'பத்து தல' திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கௌதம் கார்த்திக். இப்படம் வரும் மார்ச் 30ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   திருமணத்திற்கு பிறகு கௌதம் கார்த்திக் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது அவருக்கு கைக்கொடுக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Embed widget