மேலும் அறிய

Vikaravandi by election: விக்கிரவாண்டியில் பென்னாகரம் ஃபார்முலா: அதிமுக வாக்குகளை தட்டிதூக்க அன்புமணியின் அதிரடி வியூகம்

அதிமுக இத்தேர்தலில் போட்டியிடவில்லை, இந்த நிலையில் அதிமுகவினர் மறைமுகமாக பாமகவிற்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்கத் துணைத் தலைவர் சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிட இருப்பதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர். அதிமுக இத்தேர்தலில் போட்டியிடவில்லை என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தற்போது விக்கிரவாண்டியில்  மும்முனைப் போட்டி உறுதியாகி உள்ளது.

இத்தேர்தலில் வன்னியர்களின் வாக்குகள் மற்றும் பிற சமூக வாக்குகளைப் பெறுவதற்காக இத்தொகுதியில் உள்ள 103 ஊராட்சிகளில் பாமகவினர் முகாமிட்டு, திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும் பாமக தனி குழு அமைத்து திட்டமிட்டுள்ளது. மாநில, மாவட்ட அளவில் உள்ள அனைத்து நிர்வாகிகளின் தலைமையில் கிராமம் தோறும் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு தேர்தல் பணியாற்ற உள்ளனர்.

தினமும் காணொளி காட்சிவாயிலாக மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கிராம அளவிலான தேர்தல் பணிக் குழுக்களிடம் பேசுவார்கள். மேலும் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் விரைவில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். இத்தேர்தல் மற்றொரு பென்னாகரம் இடைத்தேர்தல் போல் இருக்கும். திமுக நினைப்பது போல இது சாதாரண தேர்தலாக அமையாது என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2010-ம் அண்டு நடைபெற்ற பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 77,637 வாக்குகளும், பாமக வேட்பாளர் தமிழ்க் குமரன் 41,285 வாக்குகளும் பெற்றனர். அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் உட்பட 29 வேட்பாளர்கள் டெபாசிட் தொகை இழந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுக வாக்கு யாருக்கு ?

கடந்த 2008-ம் உருவான விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி 78 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றது. 2016-ம் ஆண்டு தேர்தலில், திமுக-விடம் அதிமுக தோல்வி அடைந்தாலும், கிட்டத்தட்ட 57 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. ஆனால், 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த அதிமுக, 1 லட்சத்து 13 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அபார வெற்றிப் பெற்றது. ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில், இத் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்தாலும், 84 ஆயிரத்து சொச்சம் வாக்குகள் பெற்று, திமுக-வின் புகழேந்திக்கு கடும் போட்டியைத் தந்தது. எனவே, இந்த தொகுதியில், அதிமுக வாக்கு வங்கி என்பது குறிப்பிடத்தக்க அளவு இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பாமகவிற்கு அதிமுக ஆதரவு ?

இந்தத் தொகுதியில் உள்ள அதிமுக வாக்குவங்கி, எந்தக் கட்சிக்கு போகப்போகிறது, ஆளும் திமுக-விற்கா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக-விற்கா, அல்லது நாம் தமிழருக்கா, அல்லது சுயேச்சைகளுக்கா அல்லது நோட்டாவிற்கா என்பதான் மிகப்பெரிய கேள்வி. பொதுவான கணிப்பில், தொடர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கே வாக்களித்தவர்கள், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. இந்த வாக்குகள், பாமக மற்றும் நாம் தமிழர் போன்றவர்களுக்குச் செல்ல அதிகம் வாய்ப்பு இருக்கிறது, மேலும் அதிமுகவினர் மறைமுகமாக பாமகவிற்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பாமக

வேப்பாளர் நேற்றியதினம் பாமக அறிவித்த நிலையில், இன்று அதிகாலையே வேட்பாளர் சி. அன்புமணி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். மேலும் விக்கிரவாண்டி 2016ல் தனித்து களம்கண்ட பொழுது அன்புமணி சுமார் 41,428 வாக்குகளை பெற்றார். பதிவான வாக்குகளில் இது 23.29 சதவீதமாகும். எனவே பெருவாரியான வாக்குகளை அன்புமணி பெற்றதால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
TN By-Election: திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijaya Baskar Gutkha case : தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்
தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Embed widget