மேலும் அறிய

TN 12th Exam 2025: தமிழ்நாட்டிலேயே முதல்முறை; கணினி மூலம் பிளஸ் 2 பொதுத்தேர்வு; அமைச்சர் அன்பில் அதிரடி அறிவிப்பு!

இவர் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பொது தேர்வினை கணினி வழியில் எழுதும் முதல் மாணவராக விளங்குவார்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் முதல் முறையாக பார்வைக் குறைபாடு கொண்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் கணினி வழியாகத் தேர்வு எழுத உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வகுப்பு வாரியாக பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

’’எந்த விதத்திலும் தவறுகள் இல்லாமல் Error Free தேர்வுகளாக நடக்க வேண்டும் எனவும் போக்குவரத்து மின்சாரம் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லாமல் தேர்வுகள் நடைபெற வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

25.57 லட்சம் மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு

10, 11, 12 பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வுகளின்போது கேள்வித்தாள் எப்போது பள்ளிகளுக்கு வர வேண்டும்? தேர்வு முடிவுகள் எப்போது வெளியிட வேண்டும்? உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை தமிழகம் முழுவதும் 9,13,036 மாணவர்கள் எழுத உள்ளனர், 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8,21,057 மாணவர்களும், 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை 8,23,261 மாணவர்கள் என 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 மாணவர்கள் எழுத உள்ளனர்.

எவ்வளவு தேர்வு மையங்கள்?

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 12 ஆயிரத்து 480 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கு 4,113 மையங்கள் அமைக்கப்பட உள்ளன்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 7,518 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் எழுத உள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வை 7,557 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கு 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணிகளில் 48,426 கண்காணிப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 43,446 கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். பதினோராம் வகுப்புப் பொதுத் தேர்விற்கு 44,236 கண்காணிப்பாளர்கள் தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

பறக்கும் படைகள் அமைப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கண்காணிக்க 4,858 பறக்கும் படையினர் ஈடுபட உள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை கண்காணிக்க 4,470 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் பூவிருந்தவல்லி பார்வைத் திறன் குறைபாடு கொண்டோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர், வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள 12 ஆம் வகுப்பு பொது தேர்வினை கணினி வழியில் எழுத விருப்பம் தெரிவித்திருந்தார். அவரின் விருப்பத்தை ஏற்று வாசிப்பாளர் உதவியுடன் கணினி வழியில் அவர் தேர்வெழுதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கணினி வழியில் தேர்வெழுதும் முதல் மாணவர்

இவர் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பொது தேர்வினை கணினி வழியில் எழுதும் முதல் மாணவராக விளங்குவார். வருங்காலங்களில் பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாமாகவே தேர்வினை எழுத இந்த நிகழ்வு முன் மாதிரியாக விளங்கும்’’.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
IND vs NZ: கோலி மாஸ்.. கே.எல்.ராகுல் கிளாஸ். 2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!
IND vs NZ: கோலி மாஸ்.. கே.எல்.ராகுல் கிளாஸ். 2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!
Pongal 2026: காலியாகும் சென்னை.. இரண்டே நாளில் 2.50 லட்சம் பேர் ஜுட்! ஹவுஸ்ஃபுல்லாக போகும் பஸ், ரயில்!
Pongal 2026: காலியாகும் சென்னை.. இரண்டே நாளில் 2.50 லட்சம் பேர் ஜுட்! ஹவுஸ்ஃபுல்லாக போகும் பஸ், ரயில்!
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
ABP Premium

வீடியோ

Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
IND vs NZ: கோலி மாஸ்.. கே.எல்.ராகுல் கிளாஸ். 2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!
IND vs NZ: கோலி மாஸ்.. கே.எல்.ராகுல் கிளாஸ். 2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!
Pongal 2026: காலியாகும் சென்னை.. இரண்டே நாளில் 2.50 லட்சம் பேர் ஜுட்! ஹவுஸ்ஃபுல்லாக போகும் பஸ், ரயில்!
Pongal 2026: காலியாகும் சென்னை.. இரண்டே நாளில் 2.50 லட்சம் பேர் ஜுட்! ஹவுஸ்ஃபுல்லாக போகும் பஸ், ரயில்!
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
Madurai ; வைகோவின் 'சமத்துவ நடைபயணம்': துரை வைகோ கண் கலங்க, பாஜகவை எச்சரித்த வைகோ!
Madurai ; வைகோவின் 'சமத்துவ நடைபயணம்': துரை வைகோ கண் கலங்க, பாஜகவை எச்சரித்த வைகோ!
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
Virat Kohli: மகள் பிறந்த நாளில் சதத்தை தவறவிட்ட கோலி... நொறுங்கிய ரசிகர்கள் இதயம்!
Virat Kohli: மகள் பிறந்த நாளில் சதத்தை தவறவிட்ட கோலி... நொறுங்கிய ரசிகர்கள் இதயம்!
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
Embed widget