மேலும் அறிய

TN 12th Exam 2025: தமிழ்நாட்டிலேயே முதல்முறை; கணினி மூலம் பிளஸ் 2 பொதுத்தேர்வு; அமைச்சர் அன்பில் அதிரடி அறிவிப்பு!

இவர் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பொது தேர்வினை கணினி வழியில் எழுதும் முதல் மாணவராக விளங்குவார்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் முதல் முறையாக பார்வைக் குறைபாடு கொண்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் கணினி வழியாகத் தேர்வு எழுத உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வகுப்பு வாரியாக பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

’’எந்த விதத்திலும் தவறுகள் இல்லாமல் Error Free தேர்வுகளாக நடக்க வேண்டும் எனவும் போக்குவரத்து மின்சாரம் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லாமல் தேர்வுகள் நடைபெற வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

25.57 லட்சம் மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு

10, 11, 12 பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வுகளின்போது கேள்வித்தாள் எப்போது பள்ளிகளுக்கு வர வேண்டும்? தேர்வு முடிவுகள் எப்போது வெளியிட வேண்டும்? உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை தமிழகம் முழுவதும் 9,13,036 மாணவர்கள் எழுத உள்ளனர், 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8,21,057 மாணவர்களும், 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை 8,23,261 மாணவர்கள் என 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 மாணவர்கள் எழுத உள்ளனர்.

எவ்வளவு தேர்வு மையங்கள்?

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 12 ஆயிரத்து 480 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கு 4,113 மையங்கள் அமைக்கப்பட உள்ளன்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 7,518 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் எழுத உள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வை 7,557 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கு 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணிகளில் 48,426 கண்காணிப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 43,446 கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். பதினோராம் வகுப்புப் பொதுத் தேர்விற்கு 44,236 கண்காணிப்பாளர்கள் தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

பறக்கும் படைகள் அமைப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கண்காணிக்க 4,858 பறக்கும் படையினர் ஈடுபட உள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை கண்காணிக்க 4,470 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் பூவிருந்தவல்லி பார்வைத் திறன் குறைபாடு கொண்டோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர், வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள 12 ஆம் வகுப்பு பொது தேர்வினை கணினி வழியில் எழுத விருப்பம் தெரிவித்திருந்தார். அவரின் விருப்பத்தை ஏற்று வாசிப்பாளர் உதவியுடன் கணினி வழியில் அவர் தேர்வெழுதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கணினி வழியில் தேர்வெழுதும் முதல் மாணவர்

இவர் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பொது தேர்வினை கணினி வழியில் எழுதும் முதல் மாணவராக விளங்குவார். வருங்காலங்களில் பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாமாகவே தேர்வினை எழுத இந்த நிகழ்வு முன் மாதிரியாக விளங்கும்’’.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
கியூட், பொதுத்தேர்வுகள்.. லட்சக்கணக்கான மாணவர் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை- பெரும் ஆபத்து!
கியூட், பொதுத்தேர்வுகள்.. லட்சக்கணக்கான மாணவர் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை- பெரும் ஆபத்து!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Embed widget