மேலும் அறிய

Thodarnthu Karpom: படிப்பை நிறுத்திய, பள்ளி செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தொடக்கம்; ஒரு மாதம் நடக்கிறது..

படிப்பை நிறுத்திய, பள்ளி செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், ஒரு மாதம் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

படிப்பை நிறுத்திய, பள்ளி செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், ஒரு மாதம் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாகப் பள்ளிக்கல்வித் திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

’’ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வியின்‌ கீழ்‌, 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து மீள பள்ளிக்கு வரவழைப்பதற்கான செயல்பாடுகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றுத்‌ திறனுடைய குழந்தைகள்‌ மற்றும்‌ இடம்‌ பெயர்ந்து வரும்‌ தொழிலாளர்களின்‌ குழந்தைகள்‌ உட்பட அனைவருமே இதில் அடக்கம். 

பள்ளியில்‌ சேர்க்கப்படாத அல்லது பள்ளிக்கு வராத குழந்தைகள்‌, பள்ளிக்கு வெளியே இருக்கும்‌ குழந்தைகளாகக்‌ கருதப்படுகின்றனர்‌. அத்தகைய குழந்தைகளை அடையாளம்‌ கண்டு தரமான கல்வியை வழங்குவது இடைநிற்றலுக்கான முக்கிய அளவுகோல்‌ ஆகும்‌.

அதைப் போன்று ஆண்டு இறுதி தேர்வில்‌ தேர்ச்சி பெறாத மற்றும்‌ வருகை புரியாத மாணவர்கள்‌ பள்ளிக் கல்வியினை பாதியில்‌ கைவிடும்‌ மாணவர்கள்‌ இனம்‌ கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளையும்‌ சிறப்புப்‌ பயிற்சிகளையும்‌ வழங்கி, தொடர்ந்து பள்ளிக்கல்வியினை தொடரச் செய்வதும்‌ 0யயின்‌ திட்டகூறுகளில்‌ ஒன்றாகும்‌. இதனைக் கருத்தில்‌ கொண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி “தொடர்ந்து கற்போம்‌” என்ற ஒரு முன்னோடி திட்டத்தினை வடிவமைத்து அதனை அரசுப்‌ பள்ளிகளில்‌ செயல்படுத்த திட்ட ஏற்பளிப்புக்‌ குழு ஒப்புதல்‌ வழங்கியுள்ளது .

அதன்படி, தொடர்ந்து கற்போம்‌” என்ற முன்னோடி திட்டமானது 2023- 24ஆம்‌ கல்வியாண்டில்‌ அனைத்து மாவட்டங்களில்‌ செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்‌ மூலம்‌ மாவட்டங்களில்‌ பள்ளி அளவில்‌ 10ஆம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெறாத மற்றும்‌ வருகை புரியாத மாணவர்களுக்கு அந்தந்த உயர்நிலை /  மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களைக்‌ கொண்டு கற்பிக்கப்படும். 

இந்தத் திட்டம்‌ ஜூன்‌ 01 முதல்‌ 30 வரை 30 நாட்கள்‌ திங்கள்‌ முதல்‌ சனி வரை காலை 9 மணி முதல்‌ மாலை 05:00 மணி வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள்‌ நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

செயல்பாட்டின்‌ முக்கிய நோக்கம்

பொதுத்தேர்வில்‌ தேர்ச்சி பெறாத மற்றும்‌ தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களை கண்டறிந்து அவர்களைத்‌ துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கச்‌ செய்வது, தொடர்ந்து பயிற்சி வகுப்புகளில்‌ மாணவர்கள்‌ பங்குபெறச்‌ செய்வது மற்றும்‌ விண்ணப்பித்த மாணவர்கள்‌ அனைவரும்‌ தேர்வு எழுதி கல்வியினை தொடரச்‌ செய்வதை உறுதி செய்தலாகும்‌.

திட்டத்தின்‌ செயல்பாட்டிற்கான வழிமுறைகள்‌.

* திங்கள்‌ முதல்‌ வெள்ளி வரை துணைத்‌ தேர்விற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும்‌ தினமும்‌ காலை 09:0௦ மணி முதல்‌ 01:00 மணி வரை பாடங்களை படிக்க பயிற்சி அளிக்க வேண்டும்‌. மதியம்‌ 2 மணி முதல்‌ மாலை 05:00 மணி வரை காலையில்‌ பயின்றதை திருப்புதல்‌ செய்ய பயிற்சி வழங்குவதையும்‌ உறுதி செய்தல்‌ வேண்டும்‌.

* சனிக்கிழமைகளில்‌ காலை 09:00 மணி முதல்‌ 01.00 மணி வரை வாராந்திர (4 வாரங்கள்‌) தேர்வும்‌, மதியம்‌ 02:00 மணி முதல்‌ மாலை 04:00 மணி வரை வழிகாட்டலும் அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக கல்வியாளர்கள்‌. பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌, முன்னாள்‌ மாணவர்கள் மற்றும்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழு கருத்தாளர்களைக்‌ கொண்டு ஊக்கமூட்டுதல்‌ மற்றும்‌ வழிகாட்டுதல்‌ , கருத்துரைகள்‌ மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்தல்‌ வேண்டும்‌.

* ஒவ்வொரு பள்ளிகளிலும்‌ இத்திட்டம்‌ எவ்வாறு செயல்படும்‌ வேண்டும் என்பதை, தலைமையாசிரியர்கள்‌ ஆசிரியர்களுடன்‌ கலந்தாலோசித்து கால அட்டவணை தயாரித்து திட்டமிடுவதை கண்காணித்தல்‌ வேண்டும்‌.

* குறைந்தபட்ச கற்றல்‌ கையேடுகளைப்‌ பயன்படுத்தி வாராந்திர தேர்வுகள்‌ நடைபெறுவதை கள அலுவலர்கள்‌ உறுதி செய்தல்‌ வேண்டும்‌.

* இத்திட்டத்தின்‌ மூலம்‌ பயன்பெற உள்ள மாணவர்களின்‌ வருகை மற்றும்‌ அவர்களது வாராந்திர தேர்வுகளின்‌ மதிப்பெண்கள்‌ ஆகிய EMIS தளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டு அனைத்து நிலைகளிலும்‌ கண்காணிக்கப்பட உள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget