மேலும் அறிய

IIT Madras: பெருங்கடலில் CO2 -ஐ சேமிக்கலாம்; சூழலியலுக்கு தீங்கில்லை - ஐஐடி சென்னை அசத்தல் கண்டுபிடிப்பு

கடலில் 500 மீட்டர் ஆழத்திற்கு அடியில் திட ஹைட்ரேட் வடிவில் கார்பன் டை ஆக்சைடை நிரந்தரமாக சேமித்து வைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், தொழிலகங்களின் கார்பன் நீக்கத்திற்கு  இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா ஆகியவை வலிமையான கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சிகளாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இப்பெருங்கடல்கள் பல நூறு ஜிகா டன்கள் அளவுக்கு கார்பன் டை ஆக்சைடை சேமித்து வைக்கக் கூடியவை. ஆண்டுக்கணக்கில் இந்நாட்டில் வெளியேற்றப்படும் கிரீன் ஹவுஸ் வாயுக்களுக்கு சமமானதாகும்.

ஐஐடி சென்னை ஆராய்ச்சியாளர்கள், இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா ஆகியவை அதிகளவில் கார்பன்டை ஆக்சைடை (CO2) சேமித்து வைப்பதற்கான சாத்தியமான சேமிப்பகங்களைக் கண்டறிந்துள்ளனர். ‘கார்பன் டை ஆக்சைடை நீக்குதல்’என்றழைக்கப்படும் இந்த செயல்முறை தொழிலகங்களின் கார்பன் நீக்கத்திற்கு உதவும் கிரீன்ஹவுஸ் வாயுக்கான சேமிப்புத் தேக்கமாக இக்கடல்கள் செயல்படுகின்றன.

கடலில் 500 மீட்டர் ஆழத்திற்கு அடியில் திட ஹைட்ரேட் வடிவில் கார்பன் டை ஆக்சைடை நிரந்தரமாக சேமித்து வைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். திரவ கார்பன் டை ஆக்சைடாக சேமித்து வைப்பதால் தொழிலகத் தொகுப்புகள் கார்பன் நடுநிலை வகிக்க முடியும் என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சூழலியலுக்கு தீங்கு இல்லாமல்…

கடல் சூழலியலுக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவிக்காமல் கார்பனைக் கட்டுப்படுத்த கடல்களின் முழுத் திறன் பயன்படுத்தப்படுவதுடன், மிகப் பெரிய அளவில் கார்பன் டை ஆக்சைடு சேமிப்பகமாகவும் இருப்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கப் பெற்ற முக்கிய கண்டுபிடிப்பாகும்.  தேசிய கார்பன் கட்டுப்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்ற இலக்குகளை இந்தியா அடைவதற்கு இந்த ஆராய்ச்சி உதவும் வகையில் அமைந்துள்ளது.

சேமிக்கப்படும் கார்பன்டை ஆக்சைடு ‘வாயு நீரேறி’ (gas hydrates) எனப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பனி போன்ற பொருளை உருவாக்க முடியும். 500 மீட்டர் ஆழத்திற்கு கீழே கடல்சார் நிலைமைகளைப் பொறுத்து ஏறத்தாழ 150- 170 கனமீட்டர் கார்பன் டை ஆக்சைடை ஒரு கன மீட்டர் வாயு ஹைட்ரேட் பிரிக்க முடியும்.

பூஜ்ய உமிழ்வு இலக்கை எட்டலாம்

எனவே வாயு ஹைட்ரேட் அடிப்படையிலான சேமிப்பு என்பது இந்தியாவின் தொழிலகத் தொகுப்புகளில் கரிமநீக்கம் செய்யும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. கடலுக்கு அடியில் உள்ள வண்டல்களில் பெரிய அளவிலான வரிசைப்படுத்தலை உருவாக்குவதால், இந்தியாவின் நிகர பூஜ்ய உமிழ்வு இலக்குகளை எட்ட விஞ்ஞான சமூகத்திற்கு இந்த ஆராய்ச்சி உதவும்.

ஐஐடி மெட்ராஸ் ரசாயனப் பொறியியல் துறை பேராசிரியர் ஜிதேநதிர சங்வாய், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறிஞர் (பிரதமரின் ஆராய்ச்சிக் கூட்டுப் பணி) யோகேந்திர குமார் மிஸ்ரா ஆகியோரின் தலைமையில் இதற்கான ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்றன.

https://pubs.acs.org/doi/10.1021/acs.energyfuels.3c02311, https://doi.org/10.1021/acs.energyfuels.3c00581https://doi.org/10.1021/acs.energyfuels.3c02311 மற்றும் https://www.sciencedirect.com/science/article/pii/S0016236124001364?via%3Dihub உள்ளிட்ட பல்வேறு மதிப்பு வாய்ந்த இதழ்களில் இக்கண்டுபிடிப்புகள் ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிடப்பட்டன.

இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ்-ன் வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் ஜிதேந்திர சங்காவ், “மீத்தேன் ஹைட்ரேட்டுகள் பல மில்லியன் ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாமல் கடலில் இருக்கின்றன. கார்பன் டை ஆக்சைடை விட மீத்தேன் அதிக ஆற்றல் மிக்க பசுமை இல்ல வாயுவாகும். இதனைக் கருத்தில் கொண்டுதான் கார்பன் டை ஆக்சைடை கடலில் சேமிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் பரிசீலித்தனர். 2,800 மீட்டருக்கும் அதிக ஆழத்தில் கடல்நீரை விட கார்பன் டை ஆக்சைடு அடர்த்தி மிகுந்து காணப்படுவதையும், இதனால் கார்பன் டை ஆக்சைடு வெளியேற கூடுதல் ஈர்ப்புத் தடையை உருவாக்குவதையும் எங்களது ஆய்வு கண்டறிந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

பாதுகாப்பாக பிரித்தல் வேண்டும்

பேராசிரியர் ஜிதேந்திர சங்வாய் மேலும் கூறும்போது, “புதைபடிவ எரிபொருட்களை முழுமையாக மாற்ற நம்பகமான எரிசக்தி மூலத்தை நாம் கண்டுபிடிக்கும் வரை, அதனை சார்ந்திருப்பது எதிர்காலத்திலும் தொடரும். எனவே நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய கார்பன் டை ஆக்சைடை எடுப்பதும், அதனை வரிசைப்படுத்துவதும் அவசியமிக்க முன்னோடிப் பணிகளாகும். மூலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடு கைப்பற்றப்பட்டபின், அதை பாதுகாப்பாக பிரித்தல் வேண்டும். பெருங்கடல்களில் கார்பன் டை ஆக்சைடு வரிசைப்படுத்தல் இந்தியாவிற்கு பயனுள்ளதாக அமையும். பெருங்கடல்கள் மற்றும் கடல் வண்டல்களில் பிரிப்பதை விட வங்காள விரிகுடாவில் மட்டும் பல நூறு ஜிகா டன் கார்பன் டை ஆக்சைடை பிரிக்க முடியும். இது இந்தியாவில் பல ஆண்டுகளாக வெளியாகும் ஒட்டுமொத்த பசுமை இல்ல வாயுக்கு சமமானதாகும். ஐரோப்பாவில் உள்ள சில நாடுகள் (எகா நார்வே, டென்மார்க்) வட கடலில் கார்பன் டை ஆக்சைடு சேமிப்பகப் பணியில் ஈடுபட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

கார்பன் டை ஆக்சைடு நிரந்தரமாக வாயு ஹைட்ரேட்டாக சேமிக்கப்பட்டவுடன், கடல் வண்டல்களில் உள்ள ஈர்ப்பு மற்றும் ஹைட்ரேட்டின் ஊடுருவல் தடை காரணமாக வளிமண்டலத்தில் எவ்வித வெளியேற்றத்தையும் அனுமதிக்காது.

ஆராய்ச்சியின் முக்கிய கண்டுபிடிப்புகள்

Ø      2,800 மீட்டர் கடல் ஆழத்திற்கு கீழே கார்பன் டை ஆக்சைடு திரவம் கடல்நீரை விட அடர்த்தியானது.

Ø      இவ்வாறு 2800 மீட்டர் கடல் ஆழத்திற்கும் கீழே கார்பன் டை ஆக்சைடு திரவத்தை, திட ஹைட்ரேட் வடிவில் நிரந்தரமாக சேமிக்க முடியும்.

Ø      கடல் வண்டல்களின் ஈர்ப்பு மற்றும் ஊடுருவக்கூடிய தடையின் காரணமாக வளிமண்டலத்தில் எந்தவிதமான வெளியேற்றத்தையும் இது அனுமதிக்காது.

Ø      கடலுக்கு அடியில் உள்ள களிமண் படிவுகள் வாயு ஹைட்ரேட்டுகளின் இயந்திர மற்றும் வெப்ப நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது. கார்பன் டை ஆக்சைடு நீண்டகால சேமிப்புத் திறனுக்கு உதவிகரமாக உள்ளது.

அதிக களிமண் செறிவுகளில் ஹைட்ரேட் உருவாக்கம் மிகவும் வலிமையாகவும் நிலையானதாகவும் இருப்பதை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். கடல்நீரில் களிமண் சேர்ப்பதன் மூலம் கடல்நீரில் ஹைட்ரேட் உருவாக்கத்தின் இயக்கவியலை மேம்படுத்துகிறது. டெட்ரா ஹைட்ரோ ஃபியூரான (THF) போன்ற சில ஊக்கிகள் ஹைட்ரேட் இயக்கத்தை களிமண்ணுடன் ஒருங்கிணைந்த முறையில் மேம்படுத்துகின்றன. கடலுக்கு அடியில் உள்ள வண்டல்களில் பெருமளவில் கார்பன் டை ஆக்சைடை சேமிக்க இது உதவும்.

களிமண் செறிவு, சேர்க்கைகளின் பண்புகள், கடலின் ஆழம் குறித்த அளவீடுகள் போன்ற தகவலைப் படிப்பது கடலுக்கு அடியில் உள்ள படிவுகளில் கார்பன் டை ஆக்சைடை சேமிப்பதற்கான சிறந்த வழியைக் கண்டறிய உதவிகரமாக இருக்கும்.

களிமண்ணின் செறிவு, சேர்க்கைகளின் பண்புகள் மற்றும் கடலின் உள்ளூர் குளியல் அளவீட்டுத் தகவல்களைப் படிப்பது, கடலுக்கு அடியில் உள்ள படிவுகளில் CO2 ஐச் சேமிப்பதற்கான சிறந்த வழியைக் கண்டறிய உதவும்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழ் கஷ்டம்னு சொல்றவங்களுக்கு இதோ சான்று; 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் படைத்த அசாத்திய சாதனை; மார்க் எவ்வளவு தெரியுமா?
தமிழ் கஷ்டம்னு சொல்றவங்களுக்கு இதோ சான்று; 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் படைத்த அசாத்திய சாதனை; மார்க் எவ்வளவு தெரியுமா?
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
வசதிகள் இல்லைனா என்ன.. வெறித்தனம் இருந்தா போதும்! 10வது தேர்வில் மிரட்டிய கூலித்தொழிலாளி மகள்; தளபதியின் வழியில் கல்விக்கு உதவிய தவெகவினர்..!
வசதிகள் இல்லைனா என்ன.. வெறித்தனம் இருந்தா போதும்! 10வது தேர்வில் மிரட்டிய கூலித்தொழிலாளி மகள்; தளபதியின் வழியில் கல்விக்கு உதவிய தவெகவினர்..!
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் செல்லும் பள்ளி வாகனம் பாதுகாப்பானது தானா? மயிலாடுதுறை கலெக்டரின் அதிரடி 'ஆன் தி ஸ்பாட்' செக்கப்!
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் செல்லும் பள்ளி வாகனம் பாதுகாப்பானது தானா? மயிலாடுதுறை கலெக்டரின் அதிரடி 'ஆன் தி ஸ்பாட்' செக்கப்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
Embed widget