மேலும் அறிய

பாதிக்கும் மேலான ஆசிரியர் இடங்கள் காலி; நிதி இல்லாமல் தடுமாறும் பல்கலை.கள்- வெளியான அதிர்ச்சித் தகவல்!

சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பெருமளவிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளதாக ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களின் வீண்செலவுகளை குறைப்பது, வருவாயை அதிகரிப்பது ஆகியவை குறித்தும், பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் சிறப்புத் திட்டம் ஒன்றை வகுத்து வழங்குவதற்காக கல்வியாளர்கள் அடங்கிய வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை  

’’தமிழ்நாட்டின் புகழ்பெற்ற, பழமையான பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தில் மொத்தம் உள்ள 536 ஆசிரியர் பணியிடங்களில் 350 இடங்கள் பல ஆண்டுகளாக காலியாக இருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பெருமளவிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக புதிய பேராசிரியர்கள் எவரும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. அதே நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் 4 முதல் 6 ஆசிரியர்கள் ஓய்வு பெற்று வருவதால், மொத்தமுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 536இல் இருந்து கிட்டத்தட்ட 200 ஆக குறைந்து விட்டது. இரு துறைகளில் ஒரே ஒரு பேராசிரியர் கூட இல்லை என்பதால், பிற துறைகளின் பேராசிரியர்களைக் கொண்டு பாடங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், பேராசிரியர்கள் பற்றாக்குறையை போக்க 140&க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களால் நிலையான பேராசிரியர்களுக்கு இணையான தரத்துடன் கற்பிக்க முடியவில்லை என்று மாணவர்களும், கல்வியாளர்களும் கூறுவதாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

மிக அதிக எண்ணிக்கையில் ஆசிரியர் பணியிடங்கள் காலி

சென்னைப் பல்கலைக்கழகம் மட்டும்தான் என்றில்லாமல், உயர்கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 13 பல்கலைக்கழகங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் பேராசிரியர்களின் எண்ணிக்கை ஓரளவு மனநிறைவு அளிக்கும் வகையில் உள்ளது. மதுரை காமராசர், திருச்சி பாரதிதாசன், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார், கோவை பாரதியார், சேலம் பெரியார் உள்ளிட்ட பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் மிக அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களில் உத்தேசமாக 3500 பேராசிரியர் பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகத்தான் உள்ளன. இது பல்கலைக்கழகங்களின் கல்வி, ஆராய்ச்சியை கடுமையாக பாதிக்கும்.
ஆனால், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நிலையில், பல்கலைக்கழகங்கள் இல்லை என்பதுதான் உண்மை. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் காலியாக உள்ள 1500க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டால், புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்குக் கூட பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் நிதி இல்லை என்ற மோசமான நிலைதான் நிலவுகிறது.

சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஊதியம் தருவதற்கு கூட நிதியில்லை. அரசு நிதியுதவி செய்தால் மட்டுமே அந்தப் பல்கலைக்கழகங்களில் ஊதியம் வழங்க முடியும் என்ற நிலை பல ஆண்டுகளாக உள்ளது. மீதமுள்ளவற்றில் பெரும்பான்மையான பல்கலை.களில்   ஏற்கனவே வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள வைப்புத் தொகைகளை எடுத்துதான் ஊதியம் மற்றும் பிற செலவுகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது.

ஊதியம் வழங்குவதற்கு கூட நிதி இல்லை

இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் 10 பல்கலைக்கழகங்களில் ஊதியம் வழங்குவதற்கு கூட நிதி இல்லை என்ற நிலைதான் நிலவும். அண்ணா பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களின் செலவை விட வருவாய் அதிகம் என்பதால், அப்பல்கலைக்கழகங்கள் மட்டும்தான் இன்னும் சில ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்க முடியும்.

பல்கலைக்கழகங்களின் இந்த நிலைக்கு அரசு ஒரு காரணம் என்றால், பல்கலைக்கழகங்கள் இன்னொரு காரணம் ஆகும். பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை தமிழக அரசு போதிய அளவில் ஒதுக்கீடு செய்யவில்லை. இன்னொருபுறம் பல்கலைக்கழகங்கள் அவற்றுக்கு தேவையான வருவாயை  ஈட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்கலைக்கழகங்கள் சிறந்த ஆராய்ச்சி மையங்களாகத் திகழ வேண்டும்; புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும்; அதன் மூலம் வருவாய் ஈட்டி பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும். ஆனால், தமிழகப் பல்கலைக்கழகங்கள் அந்த அளவுக்கு மேம்படவில்லை.

மாறாக, பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அளவுக்கு அதிகமான அதிகாரம் மற்றும் அண்மைக்காலங்களில் பல்கலைக்கழக நிர்வாகங்களில் மாநில அரசால் தலையிட முடியாத நிலை காரணமாக பல்கலைக்கழகங்களின் செலவுகள் கடுமையாக அதிகரித்து விட்டன. இந்தக் குறைகள் அனைத்தையும் சரி செய்யாமல், பல்கலைக்கழகங்களை சீரமைப்பது என்பது பெருங்கனவாகவே இருக்கும்.

வல்லுனர் குழு அமைக்க வேண்டும்

இப்போது தடுமாறிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் நிரந்தரமாக முடங்கும் நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. அதன் முதல் கட்டமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்குமான பொதுப்பல்கலைக்கழக சட்டத்தை இயற்றி, அவற்றின் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் வீண் செலவுகளை குறைப்பது, வருவாயை அதிகரிப்பது ஆகியவை குறித்தும், பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் சிறப்புத் திட்டம் ஒன்றை வகுத்து வழங்குவதற்காக கல்வியாளர்கள் அடங்கிய வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும். குறித்த காலத்தில் வல்லுனர் குழுவின் அறிக்கையைப் பெற்று, அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவதன் மூலம் பல்கலைக்கழகங்களை தமிழக அரசு மேம்படுத்த வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காரைக்கால் சனிப்பெயர்ச்சி: விடுமுறை அறிவிப்பு! தேர்வுகள் இருக்குமா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! - முழு விபரம்
காரைக்கால் சனிப்பெயர்ச்சி: விடுமுறை அறிவிப்பு! தேர்வுகள் இருக்குமா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! - முழு விபரம்
கணிதம் இனி கரும்பாக இனிக்கும்; ஏஐ மூலம் ஈஸியாக தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆவது எப்படி?
கணிதம் இனி கரும்பாக இனிக்கும்; ஏஐ மூலம் ஈஸியாக தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆவது எப்படி?
NEET UG 2026: நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! முக்கிய தேதிகள், கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
NEET UG 2026: நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! முக்கிய தேதிகள், கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
Anbumani; வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்: தவிக்கும் மாணவர்கள்- அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி கேள்வி
Anbumani; வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்: தவிக்கும் மாணவர்கள்- அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி கேள்வி
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran on Hormuz: அப்பாடா.! இந்தியாவுக்கு நிம்மதி; பெட்ரோல், டீசல் பிரச்னை வராதுன்னு நம்பலாம்; ஈரானின் முக்கிய அறிவிப்பு
அப்பாடா.! இந்தியாவுக்கு நிம்மதி; பெட்ரோல், டீசல் பிரச்னை வராதுன்னு நம்பலாம்; ஈரானின் முக்கிய அறிவிப்பு
Governor RN Ravi: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்... என்ன காரணம்.. புதிய ஆளுநர் இவர் தான்!
Governor RN Ravi: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்... என்ன காரணம்.. புதிய ஆளுநர் இவர் தான்!
TVK Vijay: த்ரிஷா சர்ச்சை.. ஒப்புக்கொள்கிறாரா விஜய்? - தவெக தொண்டர்கள் குழப்பம்!
TVK Vijay: த்ரிஷா சர்ச்சை.. ஒப்புக்கொள்கிறாரா விஜய்? - தவெக தொண்டர்கள் குழப்பம்!
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Sani Peyarchi 2026: இன்று சனிப்பெயர்ச்சி! யாருக்கு ஜென்ம சனி? எந்த ராசிக்கு பாத சனி? விரய சனி எவருக்கு?
Sani Peyarchi 2026: இன்று சனிப்பெயர்ச்சி! யாருக்கு ஜென்ம சனி? எந்த ராசிக்கு பாத சனி? விரய சனி எவருக்கு?
Sani Peyarchi 2026 Palangal: மேஷம் முதல் மீனம் வரை.. சனிப்பெயர்ச்சி யாருக்கு சாதகம்? - பலன்கள் இதோ!
Sani Peyarchi 2026 Palangal: மேஷம் முதல் மீனம் வரை.. சனிப்பெயர்ச்சி யாருக்கு சாதகம்? - பலன்கள் இதோ!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
IND vs ENG Semi Final: இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
Embed widget