மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 12 ஆயிரத்து  502 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் .

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு இறுதிப்பருவத்தை எட்டியுள்ள நிலையில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.  இதனை மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் எழுதி வருகின்றனர். முன்னதாக 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வுகள் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

இதன்பின்னர் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கிய  11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று (ஏப்ரல் 5) ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி, ஏப்ரல் 20 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில் 4,66,765 மாணவர்களும், 4,55,960 மாணவிகளும் என மொத்தம் 9,22,725 பேர் எழுதுகின்றனர். இதேபோல் புதுச்சேரியில் 7,911 மாணவர்களும், மாணவிகள் 7,655 பேரும் என மொத்தம் 15, 566 பேர் எழுதுகின்றனர். அதேசமயம் தனித்தேர்வர்கள் பிரிவில் மாணவர்கள் 26,352 பேரும், மாணவிகள் 11, 441 பேரும், 5 திருநங்கைகள் என மொத்தம் 37,798 பேர் தேர்வு எழுதுகின்றனர்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

மேலும் 264  சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் 13,151 பேரும் எழுதுகின்றனர். மொத்தமாக நடப்பாண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,76,089 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 4,025 மையங்களில் 12,639 தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் அதிகளவில் மாணவர்கள் வராத நிலையில் அதற்காக கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அந்த மாதிரி ஆப்சென்ட் நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க தேர்வு மையங்களை கண்காணிக்கும் படை, முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இயங்கும் பறக்கும் படை என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

அதேபோல் வினாத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்லவும், விடைத்தாள் சேகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லவும் உரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. 10 மணிக்கு புகைப்படம், பதிவெண்,  பாடம் முதலான விவரங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள்கள் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு அறையில் வழங்கப்படும். இவற்றை சரிபார்த்த பின் 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வுகள் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 6360 மாணவர்களும், 6142 மாணவியர்களும் சேர்த்து மொத்தமாக 12,502 தேர்வர்கள் எழுத உள்ளனர். மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக மாவட்டத்தில் 50 பொதுத் தேர்வு மையங்களும் 3 தனித் தேர்வர்களுக்கான மையங்கள் என 53 பொதுத்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதுவதை கண்காணித்திட  810 அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் 77 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 


மயிலாடுதுறை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

மேலும், சொல்வதை எழுதுபவர் (Scribe) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 138 மாணவ, மாணவியர்களுக்கும் தேர்வு எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்கள் அனைத்தும் தூய்மை செய்யப்பட்டு, தடையில்லா மின்சாரம் வழங்கவும்,  குடிநீர் வசதிகள் உள்ளிட்டவைகள் தகுந்த முறையில் வழங்கிட  மாவட்ட ஆட்சியர் ஆலோசனையின் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளனவா? என்றும் மாணவர்கள் தேர்வு எழுதுவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
Breaking News TAMIL LIVE: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கும் நடிகர் விஜய்..!
Breaking News TAMIL LIVE: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கும் நடிகர் விஜய்..!
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
TN 10th Result 2024: 497 மதிப்பெண்கள்... 7 பள்ளிகள் மாவட்ட அளவில் முதலிடம்... 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மயிலாடுதுறை
497 மதிப்பெண்கள்... 7 பள்ளிகள் மாவட்ட அளவில் முதலிடம்... 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மயிலாடுதுறை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar cases : ”சவுக்கு பரபரப்பு வாக்குமூலம் கையை உடைத்தது உண்மை”வழக்கறிஞர் அதிர்ச்சி தகவல்KPK Jayakumar Death : காங். ஜெயக்குமார் மரணம்தோட்டத்தில் கைப்பற்றிய கேன்? வலுக்கும் சந்தேகங்கள்Salem Gold Thattu Vadai Set : வாவ் என்ன ருசி என்ன ருசிதங்கத்தில் தட்டுவடை? சேலத்தில் குவியும் மக்கள்Savukku Shankar cases : ”கஞ்சா வழக்கு பொய்! ஆவணங்கள் எங்கட்ட இருக்கு” சவுக்கு வழக்கறிஞர் ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
Breaking News TAMIL LIVE: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கும் நடிகர் விஜய்..!
Breaking News TAMIL LIVE: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கும் நடிகர் விஜய்..!
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
TN 10th Result 2024: 497 மதிப்பெண்கள்... 7 பள்ளிகள் மாவட்ட அளவில் முதலிடம்... 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மயிலாடுதுறை
497 மதிப்பெண்கள்... 7 பள்ளிகள் மாவட்ட அளவில் முதலிடம்... 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மயிலாடுதுறை
ஒரே பெயரில் அதிக மின் இணைப்பு வச்சிருக்கீங்களா? அரசின் அதிரடி முடிவு- வலுக்கும் கண்டனம்!
ஒரே பெயரில் அதிக மின் இணைப்பு வச்சிருக்கீங்களா? அரசின் அதிரடி முடிவு- வலுக்கும் கண்டனம்!
10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பில் 75,521 பேர் தோல்வி: துணைத்தேர்வுக்கு நாளையே விண்ணப்பிங்க! விபரம் இதோ!
10ஆம் வகுப்பில் 75,521 பேர் தோல்வி: துணைத்தேர்வுக்கு நாளையே விண்ணப்பிங்க! விபரம் இதோ!
TN 10th Result Centums:கணிதத்தில் கலக்கிய மாணவர்கள் - எவ்வளவு பேர் எந்த பாடத்தில் சதம்? பாடவாரியாக லிஸ்ட் இதோ!
கணிதத்தில் கலக்கிய மாணவர்கள் - எவ்வளவு பேர் எந்த பாடத்தில் சதம்? பாடவாரியாக லிஸ்ட் இதோ!
22 Years Of Dhanush: திறமையில் குபேரா! 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிப்பு அசுரன் தனுஷ்!
22 Years Of Dhanush: திறமையில் குபேரா! 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிப்பு அசுரன் தனுஷ்!
Embed widget