மேலும் அறிய

JEE Main 2022: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்; எப்படி?

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வின் இரண்டாவது அமர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க, நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வின் இரண்டாவது அமர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க, நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. ஜே.இ.இ. தேர்வு ஆண்டுதோறும் நான்கு  கட்டங்களாகத் தேசியத் தேர்வுகள் முகமையால் தேர்வு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

ALSO READ | Engineering College Rank List: எந்தக் கல்லூரி டாப்? - 481 பொறியியல் கல்லூரி தரவரிசையை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்

இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்தத் தேர்வின் முதல் அமர்வு (session 1) ஜூன் 20 முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று (ஜூலை 11) வெளியாகின. பி.ஆர்க். தாள் 2-ன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில், ஜேஇஇ மெயின் தேர்வின் இரண்டாவது அமர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் ஜூலை 12ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு மையங்கள், ஹால் டிக்கெட் பதிவிறக்கம், தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் ஆகிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜேஇஇ மெயின் தேர்வின் 2ஆவது அமர்வுக்குத் தேர்வர்கள் இரண்டு விதமாக விண்ணப்பிக்கலாம். 

ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் அமர்வை எழுதிய தேர்வர்கள் விண்ணப்பிக்க
---------------------------------------------------------------

* https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளப் பக்கத்துக்குச் செல்லவும்.

* அமர்வு 1-ல் அளித்த விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். 

* அதில் 2ஆவது அமர்வுக்கான தாள், தேர்வு எழுதும் மொழி, நகரம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

* அத்துடன் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தவும். 

* ஜேஇஇ மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

* அதில் தேர்வர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் ரகசியக் குறியீட்டு எண் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.

* 2022ஆம் ஆண்டுக்கான ஜூன் ஜேஇஇ மெயின் தேர்வு தாள் 1-ன் முடிவுகள் திரையில் தோன்றும். 

* ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

புதிய விண்ணப்பப் பதிவுகளுக்கு
---------------------------

* https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளப் பக்கத்துக்குச் செல்லவும்.

* விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் புதிதாக உருவாக்க வேண்டும். 

* விண்ணப்பப் படிவத்தை கவனத்துடன் பூர்த்தி செய்யவேண்டும். 

* தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். 

* ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மோடியின் திறம்பட்ட தலைமை: 7.8% பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியா சாதனை - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மோடியின் திறம்பட்ட தலைமை: 7.8% பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியா சாதனை - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பி.டெக் 2-ம் ஆண்டு சேர்க்கை: செப்.18-ல் சென்டாக் சிறப்புக் கலந்தாய்வு... யாரெல்லாம் பங்கேற்கலாம்? வெளியான முழு விவரம் !
பி.டெக் 2-ம் ஆண்டு சேர்க்கை: செப்.18-ல் சென்டாக் சிறப்புக் கலந்தாய்வு... யாரெல்லாம் பங்கேற்கலாம்? வெளியான முழு விவரம் !
மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை! 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை! 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
அக்டோபர் 31-க்குள் வாங்கலைனா கைவிட்டுப் போகும்... 10, 12-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இதுதான் கடைசி சான்ஸ்! 
அக்டோபர் 31-க்குள் வாங்கலைனா கைவிட்டுப் போகும்... 10, 12-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இதுதான் கடைசி சான்ஸ்! 

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Raid: அடுத்த டார்கெட்..! திமுகவின் அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை - ரூ.100 கோடி விவகாரம்
அடுத்த டார்கெட்..! திமுகவின் அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை - ரூ.100 கோடி விவகாரம்
TN Bypoll: இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம்? தொகுதிக்கு எத்தனை பேர்?
இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம் என்ன? தொகுதிக்கு எத்தனை பேர்?
TN Weather News: இன்று கனமழை பொளக்கும்,16 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை பொளக்கும்,16 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
தமிழகத்தில் நாளை கனமழை: நீலகிரி, கோவை உட்பட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை கனமழை: நீலகிரி, கோவை உட்பட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
இந்திய ரயில்வேயில் 560 பாரா மெடிக்கல் பணியிடங்கள்: தொடங்கிய விண்ணப்பப் பதிவு! ஊதியம், தகுதி?
இந்திய ரயில்வேயில் 560 பாரா மெடிக்கல் பணியிடங்கள்: தொடங்கிய விண்ணப்பப் பதிவு! ஊதியம், தகுதி?
Embed widget