மேலும் அறிய

TN 10th Exam 2023: 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வு எழுதியவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்..!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தேர்வுத்துறை தீர்வளித்துள்ளதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தேர்வுத்துறை தீர்வளித்துள்ளதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 

தமிழ்நாட்டில் 10,11,12 ஆம் வகுப்பு  பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் நிலையில், முதலில்  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இதேபோல் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதன் பின்னர் ஏப்ரல் 6 ஆம் தேதி 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 20 ஆம் தேதி நிறைவடைந்தது. 

இந்த தேர்வை தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் மாணவர்கள், தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 பேர் எழுதினர். இதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4,025 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஆங்கில வினாத்தாளில் குழப்பம் 

இப்படியான நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி ஆங்கில மொழித்தாளுக்கான தேர்வு நடைபெற்றது. இதனை ஆர்வமுடன் எழுதச் சென்ற மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதில் ஒரு மதிப்பெண் பிரிவில் கேள்வி எண் 4,5,6 ஆகியவை குழப்பமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். வழக்கமாக  இந்த கேள்விகள் ANTONYMS என குறிப்பிடப்படும் நிலையில், கேள்வித் தாளில் அப்படியான் வார்த்தை இல்லாததால் தேர்வு எழுதியவர்கள் குழம்பி போயினர், 

இதனால் 4, 5, 6 வினாக்களுக்கு பதில் எழுத முயற்சித்த அனைவருக்கும் 3 மதிப்பெண்கள் வழங்கப்படும் என மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 2 மதிப்பெண்கள் பிரிவில் கேள்வி எண் 28க்கும் பதில் எழுத முயற்சித்திருந்தால் முழு மதிப்பெண் வழங்கலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 

விடைத்தாள் திருத்தும் பணி

இதற்கிடையில் 10 வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் மாநிலம் முழுவதும் தொடங்குகிறது. இதற்காக 80க்கும் மேற்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு 60 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த பணியொல் ஈடுபட உள்ளனர். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: TN 10th Exam 2023: 10ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு கேள்விகளில் பிழைகள்; கூடுதல் மதிப்பெண்கள் வழங்க ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

தலைப்பு செய்திகள்

Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
இந்திய ரயில்வேயில் 560 பாரா மெடிக்கல் பணியிடங்கள்: தொடங்கிய விண்ணப்பப் பதிவு! ஊதியம், தகுதி?
இந்திய ரயில்வேயில் 560 பாரா மெடிக்கல் பணியிடங்கள்: தொடங்கிய விண்ணப்பப் பதிவு! ஊதியம், தகுதி?
ஐஐடி சென்னையில் ஏஐ ஸ்டுடியோ தொடக்கம்: இனி ஏஐ ஆராய்ச்சிகள் ஸ்டார்ட் அப்களாக மாறும்!
ஐஐடி சென்னையில் ஏஐ ஸ்டுடியோ தொடக்கம்: இனி ஏஐ ஆராய்ச்சிகள் ஸ்டார்ட் அப்களாக மாறும்!
Quarterly Exam Holiday : மாணவர்களே ரெடியா? காலாண்டு தேர்வுக்கு இத்தனை நாள் தொடர் விடுமுறையா.? இதோ சூப்பர் தகவல்
மாணவர்களே ரெடியா? காலாண்டு தேர்வுக்கு இத்தனை நாள் தொடர் விடுமுறையா.? இதோ சூப்பர் தகவல்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
தமிழகத்தில் நாளை கனமழை: நீலகிரி, கோவை உட்பட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை கனமழை: நீலகிரி, கோவை உட்பட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
இந்திய ரயில்வேயில் 560 பாரா மெடிக்கல் பணியிடங்கள்: தொடங்கிய விண்ணப்பப் பதிவு! ஊதியம், தகுதி?
இந்திய ரயில்வேயில் 560 பாரா மெடிக்கல் பணியிடங்கள்: தொடங்கிய விண்ணப்பப் பதிவு! ஊதியம், தகுதி?
Honda Shine 125 on EMI: ரூ.10,000 தான் முன்பணம்.! இந்தியாவின் சேல்ஸ் டாப்பர் ஹோண்டா ஷைன் 125 பைக் வாங்க EMI எவ்வளவு வரும்.?
ரூ.10,000 தான் முன்பணம்.! இந்தியாவின் சேல்ஸ் டாப்பர் ஹோண்டா ஷைன் 125 பைக் வாங்க EMI எவ்வளவு வரும்.?
ஐஐடி சென்னையில் ஏஐ ஸ்டுடியோ தொடக்கம்: இனி ஏஐ ஆராய்ச்சிகள் ஸ்டார்ட் அப்களாக மாறும்!
ஐஐடி சென்னையில் ஏஐ ஸ்டுடியோ தொடக்கம்: இனி ஏஐ ஆராய்ச்சிகள் ஸ்டார்ட் அப்களாக மாறும்!
கட்டி முடிக்கப்பட்ட சிலைக்கு டெண்டர்.! 45 லட்சம் முறைகேடு.? TVK அரசு மீது புகார்- அறப்போர் பரபரப்பு ஆதாரம்
கட்டி முடிக்கப்பட்ட சிலைக்கு டெண்டர்.! 45 லட்சம் முறைகேடு.? TVK அரசு மீது புகார்- அறப்போர் பரபரப்பு ஆதாரம்
Embed widget