மேலும் அறிய

CUET இளங்கலைத் தேர்வுகளை திடீரென ஒத்திவைத்த என்டிஏ; என்ன காரணம்?

இரண்டாம் கட்ட CUET இளங்கலைத் தேர்வுகளை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை திடீரென ஒத்திவைத்துள்ளது.

இரண்டாம் கட்ட CUET இளங்கலைத் தேர்வுகளை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை திடீரென ஒத்திவைத்துள்ளது. நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படுகிறது. 

ஜூலை மாதத்தில் முதல்கட்டத் தேர்வு

இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. ஜூலை மாதத்தில் இந்தத் தேர்வு நடைபெற்றது. குறிப்பாக 15.07.2022, 16.07.2022, 19.07.2022, 20.07.2022 மற்றும் 04.08.2022, 05.08.2022, 06.08.2022, 07.08.2022, 08.08.2022, 10.08.2022 ஆகிய தேதிகளில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு நடைபெற்றது.


CUET இளங்கலைத் தேர்வுகளை திடீரென ஒத்திவைத்த என்டிஏ; என்ன காரணம்?

இரண்டாம் கட்ட CUET இளங்கலைத் தேர்வு 

2-ம் கட்டத் தேர்வு நேற்று (ஆகஸ்ட் 4)  நாடு முழுவதும் 259 நகரங்களில் 489 தேர்வு மையங்களில் நடைபெற்றது. எனினும் கேரள மாநிலத்தில் கன மழை காரணமாகத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளிலும் CUET இளங்கலைத் தேர்வு நடைபெறுகிறது. 

இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 4) நடைபெற்ற முதல் ஷிஃப்ட் தேர்வில் குளறுபடி ஏற்பட்டதாகத் தேர்வர்களிடம் இருந்து கணிசமான புகார்கள் எழுந்தன. இதையைடுத்துத் தேர்வுகளை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக என்டிஏ அறிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம், அசாம், புதுடெல்லி, அம்பாலா, பொக்காரோ, கிரித், ஜாம்ஷெட்பூர், லே, அவுரங்காபாத், வார்தா, கோராபுத், காரைக்கால், ஜோத்பூர், அகர்தலா, நொய்டா, வாரணாசி மற்றும் ஹூக்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற முதல் ஷிஃப்ட் தேர்வுகள் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை கோயம்புத்தூர், திண்டுக்கல், திருவாரூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய இடங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் ஷிஃப்ட்டில் நடைபெற்ற CUET (UG) – 2022 தேர்வில்  நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் காரணங்களுக்காக சில தேர்வு மையங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.

அதேநாளில் இரண்டாவது ஷிஃப்டில் நடைபெற்ற தேர்வுகளிலும் குளறுபடி நடந்துள்ளது. அதற்கான கேள்வித் தாள்கள் 2.30 மணிக்கு பதில் 5 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் 3 மணிக்குத் தொடங்க வேண்டிய தேர்வு 5.25 மணிக்குத் தொடங்கியுள்ளது. 

இதையடுத்து இந்தத் தேர்வும் ரத்து செய்யப்பட்டு, ஆகஸ்ட் 12 முதல் 14 வரையிலான தேதிகளில் தேர்வு நடத்தப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
Neet Exam 2026: என்று தணியும் இந்த அச்சம்? நீட் பயத்தால் 4 நாட்களில் 4 மாணவர்கள் தற்கொலை!
Neet Exam 2026: என்று தணியும் இந்த அச்சம்? நீட் பயத்தால் 4 நாட்களில் 4 மாணவர்கள் தற்கொலை!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Embed widget