மேலும் அறிய

NCF Draft: ஆண்டுக்கு 2 முறை பிளஸ் 2 தேர்வு, செமஸ்டர் முறை: மத்திய அரசின் புது திட்டம்

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்தவும் செமஸ்டர் முறையை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான முன் வரைவை வெளியிட்டுள்ளது.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்தவும் செமஸ்டர் முறையை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான முன் வரைவை வெளியிட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கை:

மத்தியக் கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட வடிவமைப்பின் முன் வரைவை வெளியிட்டுள்ளது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் பங்குகொண்டு, கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய கல்விக் கொள்கையை இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு 2020ஆம் ஆண்டு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் படிப்படியாக கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தேசிய பாடத்திட்ட வடிவமைப்பின் முன் வரைவை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தொடக்க நிலை பள்ளி மாணவர்களுக்கு 2ஆம் வகுப்பு வரை எழுத்துத் தேர்வு தேவையில்லை என்று புதிய கல்விக்கொள்கையின் முன் வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஆண்டுக்கு 2 முறை சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வை நடத்தவும் செமஸ்டர் முறையை அறிமுகம் செய்யவும் முன் வரைவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

பாடங்களை இணைத்துப் படிக்கலாம்

சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பைப் பொறுத்தவரை தற்போது குறைந்தபட்சம் 5 பாடங்களையும் அதிகபட்சம் 6 பாடங்களையும் படித்துத் தேர்வு எழுத வேண்டும். அதேபோல இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களைப் படிக்கும் மாணவரால், அதே நேரத்தில் வரலாறு அல்லது அரசியல் அறிவியலைப் படிக்க முடியாது. ஆனால் தற்போது பரிந்துரை செய்யப்பட்ட முறையின்படி, கலை, மானுடவியல் மற்றும் அறிவியல் பாடங்களை இணைத்துப் படிக்கலாம். 

அதிக கொள்குறி வகை வினாக்கள் 

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2024ஆம் ஆண்டு தேர்வின்போது அதிக அளவிலான கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்படும். இந்த வகையில் 40 சதவீதக் கேள்விகள் அமைந்திருக்கும். அதேபோல குறைந்த அல்லது நீளமான பதில்களை எழுதத் தேவையான விரித்து எழுதும் வகை வினாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆண்டுக்கு இரு முறை தேர்வு வைப்பதன் மூலம், மாணவர்கள் படித்து முடித்து அடுத்த தேர்வுக்குத் தயார் ஆகலாம். இதன்மூலம் மாணவர்கள் மீதான சுமையும் அழுத்தமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2ஆம் வகுப்பு வரை எழுத்துத் தேர்வு தேவையில்லை

அதேபோல தொடக்க நிலை பள்ளி மாணவர்களுக்கு 2ஆம் வகுப்பு வரை எழுத்துத் தேர்வு தேவையில்லை என்று புதிய கல்விக்கொள்கையின் முன் வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளைகளுக்குத் தொடக்க நிலை தேசிய பாடத்திட்ட வடிவமைப்பை(NCF for foundational stage - NCF FS) மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்விக்கான அடுத்த தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு தயார் செய்யப்பட்டு வருகிறது. 

தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு கடந்த ஆண்டுகளில் 1975, 1988, 2000 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் 4 முறை திருத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் 5ஆவது முறையாக தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு மாற்றபட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK
தவெகவில் செங்கோட்டையன்?விஜய் வழங்கும் முக்கிய பதவி!OPERATION கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Tata Sierra:  இதுதான் உச்சகட்டம் - சியாரா SUV டாப் வேரியண்டில் இவ்ளோ அம்சங்களா? கொட்டிக் கொடுக்கும் டாடா
Tata Sierra: இதுதான் உச்சகட்டம் - சியாரா SUV டாப் வேரியண்டில் இவ்ளோ அம்சங்களா? கொட்டிக் கொடுக்கும் டாடா
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Embed widget