Nursing Course : சென்னை மாநகராட்சி அறிவிப்பான, உதவி செவிலியர் படிப்பில் சேர வேண்டுமா?- அப்போ இதைப் படிங்க
தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சி படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கிய பிறகே பொறியியல் படிப்புகள் மற்றும் மருத்துவ படிப்புகள் தொடங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், மருத்துவ படிப்புகளான செவிலியர், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பல இடங்களிலும் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“ பெருநகரச் சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2021-2022ம் ஆண்டிற்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுடன் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

உதவி செவிலியர் பயிற்சிக்கு (12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்). தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இயக்குனர், தொ.நோ.ம.மனை எண். 187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை -600081-ல் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலக வேலை நாட்களில் 17.11.2021 முதல் 22.11.2020 ( காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை) விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 23.11.2021 மாலை 4 மணிக்குள் அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. தகுதியும், விருப்பமும் உள்ள மாணவிகள் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.” இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : தொற்று நோய்களுக்கு சிகிச்சை தர விரைவில் புதிய மருத்துவமனை; புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
கல்வி நிலையங்கள் பலவும் கொரோனா பேரிடருக்கு பின்பு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது. இருப்பினும், மருத்துவ கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல இயங்கி வருகிறது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கு வழக்கமாகவே மாணவிகள் ஆர்வத்துடன் காணப்படுவார்கள். சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் வழங்கப்படும் மருத்துவ கல்விக்கு ஆண்டுதோறும் மாணவிகள் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர்.
விவாகரத்து பெறாமல் கணவன் திடீர் திருமணம்.. குழந்தையுடன் தர்ணாவில் அமர்ந்த இளம்பெண்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்





















