மேலும் அறிய

விவாகரத்து பெறாமல் கணவன் திடீர் திருமணம்.. குழந்தையுடன் தர்ணாவில் அமர்ந்த இளம்பெண்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வேறொரு திருமணம் செய்துகொண்ட கணவரை மீட்டு தரக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புக்கத்துறை பகுதியைச் சார்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் கீதா. இவருக்கும் மதுராந்தகம் ஒத்தவாடை வன்னியர்  தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 8-வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் கணவர் முத்துக்குமார், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

விவாகரத்து பெறாமல் கணவன் திடீர் திருமணம்.. குழந்தையுடன் தர்ணாவில் அமர்ந்த இளம்பெண்
 
 இதுகுறித்து தகவல் அறிந்து மனைவி அவரிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காததால் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு அளித்துள்ளார். மேலும் புகாரை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அவரை மீண்டும் மேல்மருவத்தூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். கீதா இரண்டாவது முறையாக அனைத்து மகளிர் காவல் காவல்நிலையத்திற்கு சென்று கேட்டபோதும் முறையாக பதில் அளிக்காததை கண்டித்து கீதா தனது 4 வயது பெண் குழந்தையுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
 

விவாகரத்து பெறாமல் கணவன் திடீர் திருமணம்.. குழந்தையுடன் தர்ணாவில் அமர்ந்த இளம்பெண்
 
 
தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கீதாவை அங்கிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கீதா கூறுகையில், இருவரும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டும் திடீரென்று என் கணவர் தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாகக் கூறுகிறார்கள் உடனடியாக எனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். பெண் ஒருவர் கணவனை மீட்டுத் தரக் கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

‛அவரை என்னனு நெனச்சீங்க...’ வார்னருக்காக வரிந்து கட்டி களமிறங்கிய மனைவி

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்

வீடியோ

TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
Sierra QWD Vs RWD: டாடா சியரா EV வாங்கப் போறீங்களா.? QWD-ஆ.? RWD-ஆ.? உங்க பணத்துக்கு மதிப்பான சிறந்த மாடல் எது.? ஒப்பீடு
டாடா சியரா EV வாங்கப் போறீங்களா.? QWD-ஆ.? RWD-ஆ.? உங்க பணத்துக்கு மதிப்பான சிறந்த மாடல் எது.? ஒப்பீடு
Director Mohan G: தமிழகம் முழுக்க நாடக காதல்.. உடனே பெற்றோருக்கு உதவி பண்ணுங்க.. கொந்தளித்த மோகன் ஜி!
Director Mohan G: தமிழகம் முழுக்க நாடக காதல்.. உடனே பெற்றோருக்கு உதவி பண்ணுங்க.. கொந்தளித்த மோகன் ஜி!
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Embed widget