மேலும் அறிய

தஞ்சையில் அதிர்ச்சி! 5 ஆண்டுகளில் 170 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு: பெற்றோர்களே உஷார்!

நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களை எளிய முறையில் தவிர்க்க முடியும். தஞ்சை மாவட்டத்தில் தீ விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விடவும் நீர் நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள்தான் அதிகம்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 170 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்புப் படை உதவி மாவட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

நீர்நிலைகளை நோக்கி பொதுமக்கள்

கல்லணையில் இருந்து கடந்த மாதம் ஜூன் 15ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகள், குளங்கள், கிணறுகள் நிரம்பி நீர்நிலைகள் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. கோடை காலம் முடிந்த பிறகும் தஞ்சையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் விடுமுறை தினங்களில் நீர்நிலைகளை தேடி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.


தஞ்சையில் அதிர்ச்சி! 5 ஆண்டுகளில் 170 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு: பெற்றோர்களே உஷார்!

நீச்சல் தெரிந்தவர்களுக்கு நீர்நிலைகளில் தண்ணீர் வந்தால் கொண்டாட்டம் தான். ஆனால் நீச்சல் தெரியாதவர்கள் உற்சாகம் ஊற்றெடுத்து நீருக்குள் இறங்கி குளிக்கின்றனர். ஆழமான பகுதிக்கு சென்று ஆபத்தில் சிக்கி உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதனால்தான் ஆறுகளில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. அதனால் பொதுமக்கள் யாரும் ஆறுகளில் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் இதை உதாசீனப்படுத்துகின்றனர். முக்கியமாக வாலிபர்கள் ஆறுகளில் குளித்து தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளது.

இதுகுறித்து தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் முருகேசன் கூறியதாவது:

தீ விபத்துகள் எதிர்பாராமல் நிகழ்வது. ஆனால் நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களை எளிய முறையில் தவிர்க்க முடியும். தஞ்சை மாவட்டத்தில் தீ விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விடவும் நீர் நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள்தான் அதிகம்.

நீர்நிலைகளில் நீச்சல் தெரியாமல் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி, கல்லூரிகளில் தீயணப்புத்துறை சார்பில் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குழந்தைகளுக்கு கட்டாயம் நீச்சல் கற்று கொடுக்க வேண்டும். நீச்சல் தெரியாமல் நீர் நிலைகளில் இறங்கி பறிபோன உயிர்கள் ஏராளம்.

வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும் போது நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். குளம், கிணறுகள், கல்குவாரிகள் அமைத்த இடங்களில் உள்ள கல்குட்டைகள் மிகவும் ஆபத்தானவை. விளையாட செல்லும் சிறுவர்கள் அங்கு தேங்கி நிற்கும் நீரின் அழகை பார்த்த ஆனந்தத்தில் அதில் இறங்கி குளிக்கும் போது ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

170 பேர் உயிரிழப்பு

விடுமுறை நாட்களில் குழந்தைகள் எங்கே விளையாட செல்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகளில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து குழந்தைகளிடம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார். 

தஞ்சையில் கடந்த 5 ஆண்டுகளில் நீர் நிலைகளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்களால் 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதே போல கும்பகோணத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். திருக்காட்டுப்பள்ளியில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். பாபநாசத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். திருவிடைமருதூரில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். ஒரத்தநாட்டில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். பேராவூரணியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். திருவையாறில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஒட்டுமொத்தத்தில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நீர்நிலைகளில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் தீயணைப்பு படை வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 நாட்களில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் ஆறுகளில் மூழ்கி 2 பேரும், குளத்தில் மூழ்கி 3 சிறுவர்களும் இறந்த சோகமும் நடந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
Top 10 News Headlines: SIR இன்றே கடைசி நாள், திமுக இளைஞரணி மாநாடு, விடைபெற்றார் ஜான் சீனா - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: SIR இன்றே கடைசி நாள், திமுக இளைஞரணி மாநாடு, விடைபெற்றார் ஜான் சீனா - 11 மணி வரை இன்று
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Embed widget