மேலும் அறிய

தஞ்சையில் அதிர்ச்சி! 5 ஆண்டுகளில் 170 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு: பெற்றோர்களே உஷார்!

நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களை எளிய முறையில் தவிர்க்க முடியும். தஞ்சை மாவட்டத்தில் தீ விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விடவும் நீர் நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள்தான் அதிகம்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 170 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்புப் படை உதவி மாவட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

நீர்நிலைகளை நோக்கி பொதுமக்கள்

கல்லணையில் இருந்து கடந்த மாதம் ஜூன் 15ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகள், குளங்கள், கிணறுகள் நிரம்பி நீர்நிலைகள் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. கோடை காலம் முடிந்த பிறகும் தஞ்சையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் விடுமுறை தினங்களில் நீர்நிலைகளை தேடி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.


தஞ்சையில் அதிர்ச்சி! 5 ஆண்டுகளில் 170 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு: பெற்றோர்களே உஷார்!

நீச்சல் தெரிந்தவர்களுக்கு நீர்நிலைகளில் தண்ணீர் வந்தால் கொண்டாட்டம் தான். ஆனால் நீச்சல் தெரியாதவர்கள் உற்சாகம் ஊற்றெடுத்து நீருக்குள் இறங்கி குளிக்கின்றனர். ஆழமான பகுதிக்கு சென்று ஆபத்தில் சிக்கி உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதனால்தான் ஆறுகளில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. அதனால் பொதுமக்கள் யாரும் ஆறுகளில் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் இதை உதாசீனப்படுத்துகின்றனர். முக்கியமாக வாலிபர்கள் ஆறுகளில் குளித்து தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளது.

இதுகுறித்து தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் முருகேசன் கூறியதாவது:

தீ விபத்துகள் எதிர்பாராமல் நிகழ்வது. ஆனால் நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களை எளிய முறையில் தவிர்க்க முடியும். தஞ்சை மாவட்டத்தில் தீ விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விடவும் நீர் நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள்தான் அதிகம்.

நீர்நிலைகளில் நீச்சல் தெரியாமல் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி, கல்லூரிகளில் தீயணப்புத்துறை சார்பில் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குழந்தைகளுக்கு கட்டாயம் நீச்சல் கற்று கொடுக்க வேண்டும். நீச்சல் தெரியாமல் நீர் நிலைகளில் இறங்கி பறிபோன உயிர்கள் ஏராளம்.

வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும் போது நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். குளம், கிணறுகள், கல்குவாரிகள் அமைத்த இடங்களில் உள்ள கல்குட்டைகள் மிகவும் ஆபத்தானவை. விளையாட செல்லும் சிறுவர்கள் அங்கு தேங்கி நிற்கும் நீரின் அழகை பார்த்த ஆனந்தத்தில் அதில் இறங்கி குளிக்கும் போது ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

170 பேர் உயிரிழப்பு

விடுமுறை நாட்களில் குழந்தைகள் எங்கே விளையாட செல்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகளில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து குழந்தைகளிடம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார். 

தஞ்சையில் கடந்த 5 ஆண்டுகளில் நீர் நிலைகளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்களால் 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதே போல கும்பகோணத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். திருக்காட்டுப்பள்ளியில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். பாபநாசத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். திருவிடைமருதூரில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். ஒரத்தநாட்டில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். பேராவூரணியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். திருவையாறில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஒட்டுமொத்தத்தில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நீர்நிலைகளில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் தீயணைப்பு படை வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 நாட்களில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் ஆறுகளில் மூழ்கி 2 பேரும், குளத்தில் மூழ்கி 3 சிறுவர்களும் இறந்த சோகமும் நடந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Embed widget