மேலும் அறிய

Crime: ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தூக்கி வீசப்பட்ட கொடூரம்... மும்பையில் ஷாக்!

மும்பையில் ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: மும்பையில் ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் கொடூரங்கள்: 

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலைக்கு செல்லும் இடங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அப்படி தான் தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, மும்பையில் ஓடும் ரயில் பெண்ணுக்கு பாலியில் தொந்தரவு செய்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட, மத்திய பிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்த  பெண்ணை, 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொந்தரவு கொடுத்து நிர்வாணமாக தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ஓடும் ரயில் பாலியல் தொந்தரவு:

அமிர்தசரஸில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற விரைவு ரயிலின் பொதுப்பெட்டியில் பெண் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். அவருடன் அவரது மகனும் உடன் இருந்தார். பொதுவாகவே விரைவு ரயிலின் பொதுப்பெட்டியில் கூட்டம் அலைமோதிக் கொண்டு தான் இருக்கும். இதனால் அந்த பெண், தனது மகனுடன் சீட்டில் இடம் இல்லாமல் நின்றுக் கொண்டிருந்தார். இந்த ரயில் இரவு 8.27 மணியளவில் தாதர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, சில பயணிகள் கீழே இறங்கினர். அப்போது, பெண்கள் பெட்டியில் ஏறிய நபர்,  32 வயதான பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் அவருடன் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்த, அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, அவர் கையில் வைத்திருந்த பையை கொள்ளையடிக்க முயன்றார். இதனை தடுத்த அந்த பெண்ணின் மகனை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர், அந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு அவரிடம் இருந்த பையை கொள்ளையடித்து சென்றுள்ளார். 

மருத்துவமனையில் அனுமதி:

இதனை அறிந்த போலீசார் அந்த பெண்ணையும், அவரது மகனையும் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து, போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபரை கைது செய்துள்ளனர். அவர் மனோஜ் என்று அடையாம் காணப்பட்டுள்ளது. இவர், புனேவில் காவலாளியாக பணிபுரிந்த வந்துள்ளார். ஆனால் சமீபத்தில் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டதால் தனது சொந்த ஊரான மும்பைக்கு சென்றார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, மும்பையில் ஓடும் ரயிலில், தேர்வு எழுதச் சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுபோன்று, ரயிலில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Embed widget