மேலும் அறிய

குழந்தை இல்லாததால் சண்டை.. மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்!

திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில், வாரிசு வேண்டும் என வினோத் இன்னொரு திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்திருந்தார். இதனால் அவரது மனைவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற கொடூர சம்பவத்தில் குழந்தை இல்லாத காரணத்தால் மனைவியின் கழுத்தை அறுத்து கணவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

அம்மாநிலத்தில் உள்ள மொராதாபாத்தின் மஜோலா காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட காஷிராம் காலனியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நவீன் நகர்  பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லாத நிலையில், அடிக்கடி அதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில், வாரிசு வேண்டும் என வினோத் இன்னொரு திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்திருந்தார். இதனால் அவரது மனைவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அவர்களுக்குள் சண்டை ஏற்படும்போதெல்லாம் வினோத் மனைவியை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனிடையே தம்பதியினர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க தயாராகி வருகின்றனர். 

இந்த நிலையில் பீகாரில் வசித்து வரும் தனது சகோதரன் ராஜ்குமாரை காண வினோத் சென்றிருந்தார். அவர் ஹோலி கொண்டாடுவதற்காக மீண்டும் நவீன் நகருக்கு வந்துள்ளார். அப்போது தம்பதியினர் இருவருக்குமிடையே மீண்டும் பிரச்னை வெடித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத் மனைவியை பழிவாங்க நினைத்தார். ஹோலி கொண்டாட வெளியே சென்று வரலாம் என தனது பைக்கில் மனைவியை அழைத்துச் சென்றார். 

வழியில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். தொடர்ந்து தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த வினோத் அங்கிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள காஷிராம் காலனி அருகே மயங்கி கிடந்தார். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதலில் அந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றினர். 

தொடர்ந்து வினோத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கணவன், மனைவி இருவரின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இரண்டு தரப்பிலும் மாறுபட்ட தகவல்கள் வருவதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கர்நாடகாவில் சோக சம்பவம்

கர்நாடகாவில் 35 வயது பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷ்மா என்ற அந்த பெண் தனது மாமியார் கல்பனாவுடன் சமைப்பது தொடர்பாக வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மாமியார் சுஷ்மா  சமைப்பதைத் தடுத்து அவருக்கு மன ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். இதனால் மனமுடைந்த சுஷ்மா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
காதலித்து கர்ப்பம்
காதலித்து கர்ப்பம் " குழந்தையை தூக்கி போட்டு வா " குழந்தைக்கு நேர்ந்த சோகம்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
Trump Iran War: “அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவுபட்டு, வருத்தப்பட்டு...“; ட்ரம்ப்புக்கு மெர்சல் காட்டிய ஈரான்
“அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவுபட்டு, வருத்தப்பட்டு...“; ட்ரம்ப்புக்கு மெர்சல் காட்டிய ஈரான்
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
Suzuki Burgman Street 125: ஒரு லட்சத்துக்கே புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் அறிமுகம் - TVS, ஆக்டிவா தாங்குமா?
Suzuki Burgman Street 125: ஒரு லட்சத்துக்கே புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் அறிமுகம் - TVS, ஆக்டிவா தாங்குமா?
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
Embed widget