மேலும் அறிய

Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!

ராகுல் இல்லாத சமயத்தில் ரூபியைக் காண இரண்டு பேர் வருவார்கள் என்றும், அவர்களுக்கிடையே தகாத உறவு இருந்ததும் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ரூபியிடம் விசாரணை மேற்கொள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். 

உத்தரப்பிரதேசத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை மனைவி துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தின் ராஜ்புரா காவல் நிலையப் பகுதியில் உள்ள கஸ்பா கன்வாவில் ராகுல் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கும் சந்தௌசியின் மொஹல்லா சன்னி பகுதியைச் சேர்ந்த ரூபி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் மகனும், 10 வயதில் மகனும் உள்ளனர்.

கால்வாயில் கிடந்த இளைஞர் உடல்

இப்படியான நிலையில் கடந்த டிசம்பர் 15ம் தேதி காலை 9 மணியளவில் பத்ராவா மாவட்டத்தில் உள்ள இட்கா என்ற பகுதியின் அருகில் உள்ள கால்வாயில் ஒரு இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது. நாய்கள் அந்த உடலை கடித்து குதறி கொண்டிருந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் வந்து உடலை கைப்பற்றியபோது அது அழுகி போயிருந்தது. 5 நாட்களாக அந்த உடலைக் கேட்டு யாரும் வராததால் இறந்தது யார் என தெரியாமல் போலீசார் குழம்பி போயினர்.

இந்த நிலையில் அந்த இளைஞரின் கையில் ராகுல் என பச்சை குத்தப்பட்டிருந்தது. அதைக் கொண்டு விசாரித்ததில் அவர் நவம்பர் 18ம் தேதி முதல் காணாமல் போனது கண்டறியப்பட்டது. அவரது மனைவியான ரூபி சந்தௌசி காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை 

முதலில் ராகுல், ரூபி குடும்பத்தினர், அவர்கள் குழந்தைகள், ஊர் மக்களிடம் விசாரணை நடைபெற்றது. இதில் ராகுல் இல்லாத சமயத்தில் ரூபியைக் காண இரண்டு பேர் வருவார்கள் என்றும், அவர்களுக்கிடையே தகாத உறவு இருந்ததும் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ரூபியிடம் விசாரணை மேற்கொள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். 

அங்கு இரும்பு கம்பி, படுக்கை மற்றும் ஹீட்டரில் உலர்ந்த இரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டனர். இதனையடுத்து ரூபியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் தன் ஆண் நண்பர்களான கௌசிக், அபிஷேக் ஆகியோருடன் சேர்ந்து ராகுலை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். பின்னர் அவர்கள் இருவர் உட்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மூன்று பேரையும் தனித்தனியாக விசாரித்ததில் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்லியுள்ளனர். 

நேருக்கு நேர் வைத்து விசாரித்தபோது உண்மை வெளிப்பட்டது. அதாவது நவம்பர் 18 ஆம் தேதி இரவு தனது காதலர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து, தூங்கிக் கொண்டிருந்த தனது கணவரை ரூபி கொலை செய்துள்ளார். அதன் பிறகு, உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். அவற்றை வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர். சில உடல் பாகங்களை மிக்ஸி, கிரைண்டர் கொண்டு அரைத்து பாலீத்தின் கவரில் போட்டுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்தது. 

ஒரு கட்டத்தில் தான் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில், நவம்பர் 24 ஆம் தேதி காணாமல் போனதாக ரூபி போலீசில் புகார் அளித்திருக்கிறார். குழந்தையும் அம்மாவின் கள்ளக்காதல் விவகாரத்தை உறுதிப்படுத்தியதால் இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் எளிதில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget