மேலும் அறிய

Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!

ராகுல் இல்லாத சமயத்தில் ரூபியைக் காண இரண்டு பேர் வருவார்கள் என்றும், அவர்களுக்கிடையே தகாத உறவு இருந்ததும் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ரூபியிடம் விசாரணை மேற்கொள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். 

உத்தரப்பிரதேசத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை மனைவி துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தின் ராஜ்புரா காவல் நிலையப் பகுதியில் உள்ள கஸ்பா கன்வாவில் ராகுல் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கும் சந்தௌசியின் மொஹல்லா சன்னி பகுதியைச் சேர்ந்த ரூபி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் மகனும், 10 வயதில் மகனும் உள்ளனர்.

கால்வாயில் கிடந்த இளைஞர் உடல்

இப்படியான நிலையில் கடந்த டிசம்பர் 15ம் தேதி காலை 9 மணியளவில் பத்ராவா மாவட்டத்தில் உள்ள இட்கா என்ற பகுதியின் அருகில் உள்ள கால்வாயில் ஒரு இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது. நாய்கள் அந்த உடலை கடித்து குதறி கொண்டிருந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் வந்து உடலை கைப்பற்றியபோது அது அழுகி போயிருந்தது. 5 நாட்களாக அந்த உடலைக் கேட்டு யாரும் வராததால் இறந்தது யார் என தெரியாமல் போலீசார் குழம்பி போயினர்.

இந்த நிலையில் அந்த இளைஞரின் கையில் ராகுல் என பச்சை குத்தப்பட்டிருந்தது. அதைக் கொண்டு விசாரித்ததில் அவர் நவம்பர் 18ம் தேதி முதல் காணாமல் போனது கண்டறியப்பட்டது. அவரது மனைவியான ரூபி சந்தௌசி காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை 

முதலில் ராகுல், ரூபி குடும்பத்தினர், அவர்கள் குழந்தைகள், ஊர் மக்களிடம் விசாரணை நடைபெற்றது. இதில் ராகுல் இல்லாத சமயத்தில் ரூபியைக் காண இரண்டு பேர் வருவார்கள் என்றும், அவர்களுக்கிடையே தகாத உறவு இருந்ததும் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ரூபியிடம் விசாரணை மேற்கொள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். 

அங்கு இரும்பு கம்பி, படுக்கை மற்றும் ஹீட்டரில் உலர்ந்த இரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டனர். இதனையடுத்து ரூபியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் தன் ஆண் நண்பர்களான கௌசிக், அபிஷேக் ஆகியோருடன் சேர்ந்து ராகுலை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். பின்னர் அவர்கள் இருவர் உட்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மூன்று பேரையும் தனித்தனியாக விசாரித்ததில் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்லியுள்ளனர். 

நேருக்கு நேர் வைத்து விசாரித்தபோது உண்மை வெளிப்பட்டது. அதாவது நவம்பர் 18 ஆம் தேதி இரவு தனது காதலர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து, தூங்கிக் கொண்டிருந்த தனது கணவரை ரூபி கொலை செய்துள்ளார். அதன் பிறகு, உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். அவற்றை வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர். சில உடல் பாகங்களை மிக்ஸி, கிரைண்டர் கொண்டு அரைத்து பாலீத்தின் கவரில் போட்டுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்தது. 

ஒரு கட்டத்தில் தான் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில், நவம்பர் 24 ஆம் தேதி காணாமல் போனதாக ரூபி போலீசில் புகார் அளித்திருக்கிறார். குழந்தையும் அம்மாவின் கள்ளக்காதல் விவகாரத்தை உறுதிப்படுத்தியதால் இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் எளிதில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
TN 12th Exam 2026: நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு; ஏற்பாடுகள் தீவிரம்- முதல்வர் முக்கிய தகவல்!
TN 12th Exam 2026: நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு; ஏற்பாடுகள் தீவிரம்- முதல்வர் முக்கிய தகவல்!
Iran TV Anchor Cries: கமேனி மறைவு குறித்த அறிவிப்பு; நேரலையில் கண்ணீர் விட்டு கதறி அழுத தொகுப்பாளர்; வீடியோ
கமேனி மறைவு குறித்த அறிவிப்பு; நேரலையில் கண்ணீர் விட்டு கதறி அழுத தொகுப்பாளர்; வீடியோ
Iran vs Israel War: மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி; எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை; வெயிட்டான சம்பவம் செய்த ஈரான்
மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி; எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை; வெயிட்டான சம்பவம் செய்த ஈரான்
LPG சிலிண்டர் விலை உயர்வு: வணிகர்களுக்கு அதிர்ச்சி! சாமானியர்களுக்கு நிவாரணம்!
LPG சிலிண்டர் விலை உயர்வு: வணிகர்களுக்கு அதிர்ச்சி! சாமானியர்களுக்கு நிவாரணம்!
போர் பதற்றம்: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு- CBSE முக்கிய அறிவிப்பு, மாணவர்கள் அதிர்ச்சி!
போர் பதற்றம்: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு- CBSE முக்கிய அறிவிப்பு, மாணவர்கள் அதிர்ச்சி!
Iran Trump Warning: “கொடூரமாக பழி தீர்ப்போம்“; “இதுவரை காணாத தாக்குதல் நடக்கும்“; ஈரான்-ட்ரம்ப் மாறி மாறி எச்சரிக்கை
“கொடூரமாக பழி தீர்ப்போம்“; “இதுவரை காணாத தாக்குதல் நடக்கும்“; ஈரான்-ட்ரம்ப் மாறி மாறி எச்சரிக்கை
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாக்களில் பிழையா? உடனே தெரிவியுங்கள்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாக்களில் பிழையா? உடனே தெரிவியுங்கள்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
Embed widget