மேலும் அறிய

Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!

ராகுல் இல்லாத சமயத்தில் ரூபியைக் காண இரண்டு பேர் வருவார்கள் என்றும், அவர்களுக்கிடையே தகாத உறவு இருந்ததும் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ரூபியிடம் விசாரணை மேற்கொள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். 

உத்தரப்பிரதேசத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை மனைவி துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தின் ராஜ்புரா காவல் நிலையப் பகுதியில் உள்ள கஸ்பா கன்வாவில் ராகுல் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கும் சந்தௌசியின் மொஹல்லா சன்னி பகுதியைச் சேர்ந்த ரூபி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் மகனும், 10 வயதில் மகனும் உள்ளனர்.

கால்வாயில் கிடந்த இளைஞர் உடல்

இப்படியான நிலையில் கடந்த டிசம்பர் 15ம் தேதி காலை 9 மணியளவில் பத்ராவா மாவட்டத்தில் உள்ள இட்கா என்ற பகுதியின் அருகில் உள்ள கால்வாயில் ஒரு இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது. நாய்கள் அந்த உடலை கடித்து குதறி கொண்டிருந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் வந்து உடலை கைப்பற்றியபோது அது அழுகி போயிருந்தது. 5 நாட்களாக அந்த உடலைக் கேட்டு யாரும் வராததால் இறந்தது யார் என தெரியாமல் போலீசார் குழம்பி போயினர்.

இந்த நிலையில் அந்த இளைஞரின் கையில் ராகுல் என பச்சை குத்தப்பட்டிருந்தது. அதைக் கொண்டு விசாரித்ததில் அவர் நவம்பர் 18ம் தேதி முதல் காணாமல் போனது கண்டறியப்பட்டது. அவரது மனைவியான ரூபி சந்தௌசி காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை 

முதலில் ராகுல், ரூபி குடும்பத்தினர், அவர்கள் குழந்தைகள், ஊர் மக்களிடம் விசாரணை நடைபெற்றது. இதில் ராகுல் இல்லாத சமயத்தில் ரூபியைக் காண இரண்டு பேர் வருவார்கள் என்றும், அவர்களுக்கிடையே தகாத உறவு இருந்ததும் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ரூபியிடம் விசாரணை மேற்கொள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். 

அங்கு இரும்பு கம்பி, படுக்கை மற்றும் ஹீட்டரில் உலர்ந்த இரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டனர். இதனையடுத்து ரூபியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் தன் ஆண் நண்பர்களான கௌசிக், அபிஷேக் ஆகியோருடன் சேர்ந்து ராகுலை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். பின்னர் அவர்கள் இருவர் உட்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மூன்று பேரையும் தனித்தனியாக விசாரித்ததில் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்லியுள்ளனர். 

நேருக்கு நேர் வைத்து விசாரித்தபோது உண்மை வெளிப்பட்டது. அதாவது நவம்பர் 18 ஆம் தேதி இரவு தனது காதலர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து, தூங்கிக் கொண்டிருந்த தனது கணவரை ரூபி கொலை செய்துள்ளார். அதன் பிறகு, உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். அவற்றை வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர். சில உடல் பாகங்களை மிக்ஸி, கிரைண்டர் கொண்டு அரைத்து பாலீத்தின் கவரில் போட்டுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்தது. 

ஒரு கட்டத்தில் தான் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில், நவம்பர் 24 ஆம் தேதி காணாமல் போனதாக ரூபி போலீசில் புகார் அளித்திருக்கிறார். குழந்தையும் அம்மாவின் கள்ளக்காதல் விவகாரத்தை உறுதிப்படுத்தியதால் இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் எளிதில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வீடு புகுந்த திருடன் தப்பி ஓட்டம்... பேரூரில் நள்ளிரவு பரபரப்பு...
வீடு புகுந்த திருடன் தப்பி ஓட்டம்... பேரூரில் நள்ளிரவு பரபரப்பு...
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
மனைவியை கொன்று தலைமறைவான முன்னாள் ராணுவ அதிகாரி: கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது சிக்கினார்
மனைவியை கொன்று தலைமறைவான முன்னாள் ராணுவ அதிகாரி: கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது சிக்கினார்
ஆசைக்கு தடை சொன்ன கணவர் கொலை.. இரவு முழுவதும் சடலத்துடன் தூங்கிய மனைவி!
ஆசைக்கு தடை சொன்ன கணவர் கொலை.. இரவு முழுவதும் சடலத்துடன் தூங்கிய மனைவி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026 : 234-ல் ஒன்றிலாவது ஜெயிப்பார்களா? - அமித்ஷா கூட்டணியை அலறவிட்ட பொன்முடி!
TN Election 2026 : 234-ல் ஒன்றிலாவது ஜெயிப்பார்களா? - அமித்ஷா கூட்டணியை அலறவிட்ட பொன்முடி!
TN Election 2026: திமுக VS அதிமுக VS தவெக! யார் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம்?
TN Election 2026: திமுக VS அதிமுக VS தவெக! யார் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம்?
புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்: காவல்துறை கெடுபிடி! தவெக வியூகம் மாற்றம்? பரபரப்பு தகவல்!
புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்: காவல்துறை கெடுபிடி! தவெக வியூகம் மாற்றம்? பரபரப்பு தகவல்!
"மோடிக்கு முரட்டு அடிமை எடப்பாடி " - வாணியம்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பிரச்சாரம்
அக்கவுண்ட் நம்பரை மாத்தாமலே வங்கியை மாத்திக்கலாம் மக்களே! செம செம!
அக்கவுண்ட் நம்பரை மாத்தாமலே வங்கியை மாத்திக்கலாம் மக்களே! செம செம!
Aloor Shanavas: வாய்ப்பு கொடுக்காத திருமாவளவன்; மவுனம் கலைத்த விசிக ஆளூர் ஷாநவாஸ்!
Aloor Shanavas: வாய்ப்பு கொடுக்காத திருமாவளவன்; மவுனம் கலைத்த விசிக ஆளூர் ஷாநவாஸ்!
War Lockdown Notice: போரால் மீண்டும் லாக் டவுன்? வாட்ஸப், சமூக வலைதளங்களில் வைரலாகும் குறுஞ்செய்தி- நடந்தது என்ன?
War Lockdown Notice: போரால் மீண்டும் லாக் டவுன்? வாட்ஸப், சமூக வலைதளங்களில் வைரலாகும் குறுஞ்செய்தி- நடந்தது என்ன?
DMK vs VCK: ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காதது ஏன்? அவசரகதியில் வேட்பாளர் தேர்வு- ஓபனாக போட்டுடைத்த திருமா
DMK vs VCK: ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காதது ஏன்? அவசரகதியில் வேட்பாளர் தேர்வு- ஓபனாக போட்டுடைத்த திருமா
Embed widget