மேலும் அறிய

கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

கரூரில் திருமணத்திற்கு மீறிய உறவால் கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 26. இவரது மனைவி காயத்ரி தேவி வயது 25. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், காயத்ரி தேவி அவ்வப்போது கரூர் மாவட்டம், மன்மங்கலம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த உறவினரான கமலக்கண்ணன்(29) என்பவருக்கும் காயத்ரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

 
இது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதை அறிந்து மணிகண்டன், மனைவி காயத்ரியை கண்டித்துள்ளார். இது குறித்து காயத்ரி தேவி கமலக்கண்ணனிடம் தெரிவித்துள்ளார். மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கமலக்கண்ணன் மணிகண்டனை மது அருந்துவதற்காக கரூர் மணல்மேடு பகுதிக்கு கமலக்கண்ணன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்தி கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

இதில் அங்கிருந்த கட்டை மற்றும் கற்களைக் கொண்டு மணிகண்டனை தாக்கி கமலக்கண்ணன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். மணிகண்டன் உடலை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் மணிகண்டனின், மனைவி காயத்ரி தேவியின் தூண்டுதலின் பேரில் கமலக்கண்ணன், மணிகண்டனை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், இந்த கொலைக்கு ரூபன் என்பவர் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை


இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் மணிகண்டனை கொலை செய்ய திட்டம் தீட்டிய காயத்ரி தேவி மற்றும் கொலை செய்த கமலக்கண்ணன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், மேலும், இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபதாரம் விதித்தும், அவதாரத்தை கட்ட தவறினால் மேலும், ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பை அளித்தார். 

 

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

மேலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரூபன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். காதல் மோகத்தால் கணவனை மனைவியே கொலை செய்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது என தெரிந்ததால் நீதிமன்ற வளாகத்தில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் அருகே திருமணத்திற்கு மீறிய உறவால் ஏற்பட்ட விளைவின் கணவனை கொன்ற மனைவி மற்றும் காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பை சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

செல்போன் ஆப் மூலம் பெண் அறிமுகம் !! தனிமையில் சந்திக்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
செல்போன் ஆப் மூலம் பெண் அறிமுகம் !! தனிமையில் சந்திக்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
7 பேர் உயிரிழப்பு: தகுதியற்ற அரசுப் பேருந்துகளால் வந்த வினை! - திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்...!
7 பேர் உயிரிழப்பு: தகுதியற்ற அரசுப் பேருந்துகளால் வந்த வினை! - திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்...!
மாற்று சமூக காதல் திருமணம்! மாமனார் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் ஆம்பூர்
மாற்று சமூக காதல் திருமணம்! மாமனார் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் ஆம்பூர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: ”போரை முடிச்சுக்கலாம்னு இருக்கேன்” ஈரான் எண்ணெயை கூட வித்துக்கலாம் - ட்ரம்ப் அறிவிப்பு
Trump Iran War: ”போரை முடிச்சுக்கலாம்னு இருக்கேன்” ஈரான் எண்ணெயை கூட வித்துக்கலாம் - ட்ரம்ப் அறிவிப்பு
New Income Tax Rules: வந்தாச்சு புது ரூல்ஸ்..! ஏப்.1 முதல் வருமான வரி விதிகளில் மாற்றம் - எதில் லாபம்? கார் நிலைமை..
New Income Tax Rules: வந்தாச்சு புது ரூல்ஸ்..! ஏப்.1 முதல் வருமான வரி விதிகளில் மாற்றம் - எதில் லாபம்? கார் நிலைமை..
TVK Vijay: சும்மா இருங்கயா..! ஷூட்டிங்லாம் இல்லையாம், விஜய் மும்பை போக காரணம் இதுதான் - வதந்தி வாய்கள்
TVK Vijay: சும்மா இருங்கயா..! ஷூட்டிங்லாம் இல்லையாம், விஜய் மும்பை போக காரணம் இதுதான் - வதந்தி வாய்கள்
Kamal Haasan: விஜயை பார்க்குறது தான் எனக்கு வேலையா? - டென்ஷனான கமல்ஹாசன்!
Kamal Haasan: விஜயை பார்க்குறது தான் எனக்கு வேலையா? - டென்ஷனான கமல்ஹாசன்!
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
Embed widget