மேலும் அறிய

கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

கரூரில் திருமணத்திற்கு மீறிய உறவால் கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 26. இவரது மனைவி காயத்ரி தேவி வயது 25. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், காயத்ரி தேவி அவ்வப்போது கரூர் மாவட்டம், மன்மங்கலம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த உறவினரான கமலக்கண்ணன்(29) என்பவருக்கும் காயத்ரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

 
இது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதை அறிந்து மணிகண்டன், மனைவி காயத்ரியை கண்டித்துள்ளார். இது குறித்து காயத்ரி தேவி கமலக்கண்ணனிடம் தெரிவித்துள்ளார். மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கமலக்கண்ணன் மணிகண்டனை மது அருந்துவதற்காக கரூர் மணல்மேடு பகுதிக்கு கமலக்கண்ணன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்தி கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

இதில் அங்கிருந்த கட்டை மற்றும் கற்களைக் கொண்டு மணிகண்டனை தாக்கி கமலக்கண்ணன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். மணிகண்டன் உடலை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் மணிகண்டனின், மனைவி காயத்ரி தேவியின் தூண்டுதலின் பேரில் கமலக்கண்ணன், மணிகண்டனை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், இந்த கொலைக்கு ரூபன் என்பவர் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை


இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் மணிகண்டனை கொலை செய்ய திட்டம் தீட்டிய காயத்ரி தேவி மற்றும் கொலை செய்த கமலக்கண்ணன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், மேலும், இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபதாரம் விதித்தும், அவதாரத்தை கட்ட தவறினால் மேலும், ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பை அளித்தார். 

 

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

மேலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரூபன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். காதல் மோகத்தால் கணவனை மனைவியே கொலை செய்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது என தெரிந்ததால் நீதிமன்ற வளாகத்தில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் அருகே திருமணத்திற்கு மீறிய உறவால் ஏற்பட்ட விளைவின் கணவனை கொன்ற மனைவி மற்றும் காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பை சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
Stalin Criticize EPS: “சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
“சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
MS Dhoni Retires: வருவாரா? மாட்டாரா? சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய தோனி!
MS Dhoni Retires: வருவாரா? மாட்டாரா? சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய தோனி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
Stalin Criticize EPS: “சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
“சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
MS Dhoni Retires: வருவாரா? மாட்டாரா? சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய தோனி!
MS Dhoni Retires: வருவாரா? மாட்டாரா? சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய தோனி!
Trump Vs Samsung: உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
2 New Type Corona: என்னது, 2 புது வகை கொரோனாவா.? இந்தியாவுலயும் பரவுதா.!! என்னய்யா இப்படி பீதிய கிளப்புறீங்க.?!
என்னது, 2 புது வகை கொரோனாவா.? இந்தியாவுலயும் பரவுதா.!! என்னய்யா இப்படி பீதிய கிளப்புறீங்க.?!
LIVE | Kerala Lottery Result Today (25.05.2025): மாதத்தின் கடைசி ஞாயிறு.. சம்ருதி லாட்டரியில் சம்பாதிக்க போவது  யார்?
LIVE | Kerala Lottery Result Today (25.05.2025): மாதத்தின் கடைசி ஞாயிறு.. சம்ருதி லாட்டரியில் சம்பாதிக்க போவது யார்?
EPS Vs Stalin Vs Udhayanidhi: ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ ஏன்...? - போட்டுத் தாக்கிய இபிஎஸ், என்ன கூறினார் தெரியுமா.?
ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ ஏன்...? - போட்டுத் தாக்கிய இபிஎஸ், என்ன கூறினார் தெரியுமா.?
Embed widget