மேலும் அறிய

கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

கரூரில் திருமணத்திற்கு மீறிய உறவால் கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 26. இவரது மனைவி காயத்ரி தேவி வயது 25. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், காயத்ரி தேவி அவ்வப்போது கரூர் மாவட்டம், மன்மங்கலம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த உறவினரான கமலக்கண்ணன்(29) என்பவருக்கும் காயத்ரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

 
இது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதை அறிந்து மணிகண்டன், மனைவி காயத்ரியை கண்டித்துள்ளார். இது குறித்து காயத்ரி தேவி கமலக்கண்ணனிடம் தெரிவித்துள்ளார். மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கமலக்கண்ணன் மணிகண்டனை மது அருந்துவதற்காக கரூர் மணல்மேடு பகுதிக்கு கமலக்கண்ணன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்தி கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

இதில் அங்கிருந்த கட்டை மற்றும் கற்களைக் கொண்டு மணிகண்டனை தாக்கி கமலக்கண்ணன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். மணிகண்டன் உடலை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் மணிகண்டனின், மனைவி காயத்ரி தேவியின் தூண்டுதலின் பேரில் கமலக்கண்ணன், மணிகண்டனை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், இந்த கொலைக்கு ரூபன் என்பவர் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை


இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் மணிகண்டனை கொலை செய்ய திட்டம் தீட்டிய காயத்ரி தேவி மற்றும் கொலை செய்த கமலக்கண்ணன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், மேலும், இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபதாரம் விதித்தும், அவதாரத்தை கட்ட தவறினால் மேலும், ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பை அளித்தார். 

 

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

மேலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரூபன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். காதல் மோகத்தால் கணவனை மனைவியே கொலை செய்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது என தெரிந்ததால் நீதிமன்ற வளாகத்தில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் அருகே திருமணத்திற்கு மீறிய உறவால் ஏற்பட்ட விளைவின் கணவனை கொன்ற மனைவி மற்றும் காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பை சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பிரியாணி கடையில் தொடங்கிய காதல்... ஜெயிலில் முடிந்த கதை - நடந்தது என்ன?
பிரியாணி கடையில் தொடங்கிய காதல்... ஜெயிலில் முடிந்த கதை - நடந்தது என்ன?
உடைந்த மது பாட்டில்கள்... கஞ்சா புகை... அச்சத்தில் பூம்புகார் கல்லூரி மாணவர்கள்.. 
உடைந்த மது பாட்டில்கள்... கஞ்சா புகை... அச்சத்தில் பூம்புகார் கல்லூரி மாணவர்கள்.. 
மயிலாடுதுறையில் தேங்கிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் : கொள்முதல் நிலையங்கள் திறந்தும் பயனில்லை - விவசாயிகள் வேதனை..
மயிலாடுதுறையில் தேங்கிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் : கொள்முதல் நிலையங்கள் திறந்தும் பயனில்லை - விவசாயிகள் வேதனை..
பணம் தராத ஆத்திரம்: இரும்புத் தடியால் தந்தையைத் தாக்கிய மகன் - விசாரணையில் திடுக்கிடும் உண்மை!
பணம் தராத ஆத்திரம்: இரும்புத் தடியால் தந்தையைத் தாக்கிய மகன் - விசாரணையில் திடுக்கிடும் உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
Kia Sorento: ப்ராண்டின் முதல் ஹைப்ரிட்,டீசல் SUVயை இறக்கிய கியா - சொரெண்டோவின் விலை, அம்சங்கள், வசதி, மைலேஜ்
ப்ராண்டின் முதல் ஹைப்ரிட்,டீசல் SUVயை இறக்கிய கியா - சொரெண்டோவின் விலை, அம்சங்கள், வசதி, மைலேஜ்
Volkswagen: ஃபோக்ஸ்வாகன் கொடுத்த ஷாக்..! பாதி வண்டிகள் கட், ஒரு லட்சம் பேரின் வேலை பறிப்பு - என்ன காரணம்?
ஃபோக்ஸ்வாகன் கொடுத்த ஷாக்..! பாதி வண்டிகள் கட், ஒரு லட்சம் பேரின் வேலை பறிப்பு - என்ன காரணம்?
Maruti Suzuki New Baleno: கவர்ச்சியான லுக்குடன் புதிய பலேனோ.! லெவல் 2 ADAS, ப்ரீமியம் டெக்னாலஜியுடன் களமிறக்கும் மாருதி
கவர்ச்சியான லுக்குடன் புதிய பலேனோ.! லெவல் 2 ADAS, ப்ரீமியம் டெக்னாலஜியுடன் களமிறக்கும் மாருதி
Chennai Power Cut: சென்னைல சனிக்கிழமை (05.09.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
சென்னைல சனிக்கிழமை (05.09.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலேஜ்.. ஏதரின் Konarc இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கு?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலேஜ்.. ஏதரின் Konarc இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கு?
Embed widget