மேலும் அறிய

கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

கரூரில் திருமணத்திற்கு மீறிய உறவால் கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 26. இவரது மனைவி காயத்ரி தேவி வயது 25. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், காயத்ரி தேவி அவ்வப்போது கரூர் மாவட்டம், மன்மங்கலம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த உறவினரான கமலக்கண்ணன்(29) என்பவருக்கும் காயத்ரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

 
இது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதை அறிந்து மணிகண்டன், மனைவி காயத்ரியை கண்டித்துள்ளார். இது குறித்து காயத்ரி தேவி கமலக்கண்ணனிடம் தெரிவித்துள்ளார். மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கமலக்கண்ணன் மணிகண்டனை மது அருந்துவதற்காக கரூர் மணல்மேடு பகுதிக்கு கமலக்கண்ணன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்தி கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

இதில் அங்கிருந்த கட்டை மற்றும் கற்களைக் கொண்டு மணிகண்டனை தாக்கி கமலக்கண்ணன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். மணிகண்டன் உடலை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் மணிகண்டனின், மனைவி காயத்ரி தேவியின் தூண்டுதலின் பேரில் கமலக்கண்ணன், மணிகண்டனை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், இந்த கொலைக்கு ரூபன் என்பவர் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை


இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் மணிகண்டனை கொலை செய்ய திட்டம் தீட்டிய காயத்ரி தேவி மற்றும் கொலை செய்த கமலக்கண்ணன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், மேலும், இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபதாரம் விதித்தும், அவதாரத்தை கட்ட தவறினால் மேலும், ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பை அளித்தார். 

 

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

மேலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரூபன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். காதல் மோகத்தால் கணவனை மனைவியே கொலை செய்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது என தெரிந்ததால் நீதிமன்ற வளாகத்தில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் அருகே திருமணத்திற்கு மீறிய உறவால் ஏற்பட்ட விளைவின் கணவனை கொன்ற மனைவி மற்றும் காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பை சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
Embed widget