மேலும் அறிய

Narikuravar Ashwini Arrest: அடாவடித்தனம்.. வியாபாரிகளுக்கு மிரட்டல்.. கொலை முயற்சி வழக்கு.. அஸ்வினிக்கு நடந்தது என்ன ?

Ashwini Arrest: "நான் என்ன தப்பு செய்தேன்? ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்" சிறைக்கு செல்லும் பொழுது அஸ்வினி தெரிவித்த வார்த்தைகள் இவைதான்.

சமூக வலைத்தளத்தில் குமுறல்
 
சமூகவலைதளம் பயன்பாடு அதிகரித்ததில் இருந்து, சமூக வலைதளத்தின் மூலம் கோரிக்கைகளையோ, குறைகளையோ சம்மந்தப்பட்ட அதிகார மையத்திற்கு கொண்டு செல்வது எளிதாகியுள்ளது. அந்த வகையில், கோவிலில் தங்களுக்கு உணவு சாப்பிட அனுமதி மறுக்கிறார்கள் என்ற கோரிக்கையை, முன்வைத்த பழங்குடியின பெண் அஸ்வினி என்பவர் அளித்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம், மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் கோவிலில்,  இந்த பிரச்சனை இருப்பதாக அஸ்வினி தெரிவித்திருந்தார். இதனை அடுத்து, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் நேரடியாக கோவிலுக்கு, சென்று அஸ்வினியுடன் அமர்ந்து அதே கோவிலில் உணவருந்தினார்.

Narikuravar Ashwini Arrest: அடாவடித்தனம்.. வியாபாரிகளுக்கு மிரட்டல்.. கொலை முயற்சி வழக்கு.. அஸ்வினிக்கு நடந்தது என்ன ?
 
நேரடியாக வந்த முதலமைச்சர்
 
அப்பொழுது அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை பழங்குடியின பெண் அஸ்வினி முன்வைத்தார். 2021 ஆம் ஆண்டு, தீபாவளி தினத்தன்று நேரடியாக பழங்குடியின பெண் அஸ்வினி வசிக்கும் பூஞ்சேரி பகுதிக்கு சென்று,  நல திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். அஸ்வினியின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தார். பழங்குடியின பெண் அஸ்வினி மற்றும் அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்திருந்தார். முதலமைச்சரின் இந்த செயல் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுகளை பெற்றது.
 

Narikuravar Ashwini Arrest: அடாவடித்தனம்.. வியாபாரிகளுக்கு மிரட்டல்.. கொலை முயற்சி வழக்கு.. அஸ்வினிக்கு நடந்தது என்ன ?
 
அடுக்கடுக்கான புகார்கள்
 
இந்தநிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக  அஸ்வினி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தனக்கு வங்கி கடன் வழங்கவில்லை, மகாபலிபுரம் பகுதியில் கடை ஒதுக்கி தரவில்லை, உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மீண்டும் சமூக வலைதளம் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் அஸ்வினி பேட்டியை அளித்திருந்தார். அந்த வீடியோவும் மீண்டும் வைரலாகவே, சில மணி நேரங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Narikuravar Ashwini Arrest: அடாவடித்தனம்.. வியாபாரிகளுக்கு மிரட்டல்.. கொலை முயற்சி வழக்கு.. அஸ்வினிக்கு நடந்தது என்ன ?
 
இந்தநிலையில், மாமல்லபுரம் பகுதியில் பிற வியாபாரிகளை மிரட்டுவதாக மாமல்லபுரம் வியாபாரிகள் குற்றச்சாட்டுகள் முன் வைத்தனர். இது குறித்து மாமல்லபுரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர். அஸ்வினியும் தன்னை மிரட்டுவதாக கூறி புகார் ஒன்றை அளித்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு , அஸ்வினியை மாமல்லபுரம் காவல் நிலையத்தில் அனைத்து விசாரணையும் மேற்கொண்டு இருந்தனர். 
 
தொடர்ந்து மிரட்டல் ?
 
இந்தநிலையில், மீண்டும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மாமல்லபுரம் வியாபாரிகளை மிரட்டியதாக கூறி, வியாபாரி சங்கத்தினர் மற்றும் மாமல்லபுரம் வியாபாரிகள் மாமல்லபுரம் காவல் நிலையத்தையே முற்றுகையிட்டு, அஸ்வினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். அப்பொழுது மீண்டும் வைரலான அஸ்வினி, தான் அவ்வாறு செய்யவில்லை என்று விளக்கம் அளித்து இருந்தார். அதேபோல், வியாபாரிகளும் தங்கள் தரப்பு புகார்களை ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்திருந்தனர். 
 
 வியாபாரி சங்கத்தினர்
வியாபாரி சங்கத்தினர்
 
கடை வைப்பதில் தகராறு
 
இந்தநிலையில், மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியில் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த விஜி என்பவரது மனைவி நதியா கடை அமைத்துள்ளார். இந்நிலையில் கடை அமைப்பதில், அஸ்வினிக்கும் , நதியாவிற்கும்  இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது .இதில் அஸ்வினி தனது கையில் இருந்த கத்தியை எடுத்து நதியாவை வலது தோள்பட்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நதியாவை அருகில் இருந்த மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Narikuravar Ashwini Arrest: அடாவடித்தனம்.. வியாபாரிகளுக்கு மிரட்டல்.. கொலை முயற்சி வழக்கு.. அஸ்வினிக்கு நடந்தது என்ன ?
 
கொலை முயற்சி சம்பவம்
 
அங்கு நதியாவிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் 10 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ருத்மங்கதன் தலைமையிலான போலீசார் பூஞ்சேரி பகுதியில் இருந்த அஸ்வினியை கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர் . தொடர்ந்து போலீசார் அஸ்வினியை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். திருக்கழுக்குன்றம் மேஜிஸ்ட்ரேட் கதிரவன் கொலை முயற்சி  வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வினியை ஆகஸ்ட்  மாதம் 30 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை அடுத்து போலீசார் அஸ்வினியை புழல் அடைத்தனர்.

Narikuravar Ashwini Arrest: அடாவடித்தனம்.. வியாபாரிகளுக்கு மிரட்டல்.. கொலை முயற்சி வழக்கு.. அஸ்வினிக்கு நடந்தது என்ன ?
 
அப்பொழுது வீடியோ எடுக்க செய்தியாளர்களை பார்த்து அஸ்வினி, " நான் என்ன தவறு செய்தேன்? எல்லோரும் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள், எனக்கு குழந்தை உள்ளது” என தெரிவித்தார்.  முதலமைச்சரே வீட்டிற்கு சென்று பார்த்த, பெண் ஒருவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!
Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!
விழுப்புரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: ஆம்னி பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!
விழுப்புரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: ஆம்னி பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!
" நீ எப்படி என் தங்கச்சிய லவ் பண்ணுவ " நண்பனின் தங்கையை காதலித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த ADMK, காங்., MLA-க்கள்
ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த அதிமுக, காங்., MLA-க்கள்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
Maruti Suzuki: மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்
மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
Embed widget