மேலும் அறிய

சீர்காழி: சாலை விரிவாக்கம் செய்யும் இடத்தில் மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு!

சீர்காழி அருகே தனியார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவன வளாகத்திள் மின்சாரம் பாய்ந்து கூலி தொழாலாளி உயிரிழந்ததை அடுத்து உரிய இழப்பீடு வழங்க கோரி உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா அல்லிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதான ரவி. கூலி தொழிலாளியான இவர் காத்திருப்பு பகுதியில் உள்ள அரசு மதுபான கடையான டாஸ்மாக் கடை பகுதியில் மது பிரியர்கள் குடித்து விட்டு வீசி செல்லும் காலி பாட்டில்களை சேகரித்து அதன் மூலம் வருவாய் ஈட்டி  வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல்  ரவி காத்திருப்பு டாஸ்மாக் கடை அருகே அமைந்துள்ள நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த  நிறுவனத்தின் வளாகத்திற்குள் சென்று அங்கு கிடந்த காலி  பாட்டில்களை சேகரித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தனியார் நிறுவனத்தினர் அமைத்திருந்த மின்விளக்கு கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் ரவி அங்கிருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


சீர்காழி: சாலை விரிவாக்கம் செய்யும் இடத்தில் மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு!

தகவல் அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து தனியார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவன வளாகத்தில் உயிரிழந்த ரவியின் உடலை எடுக்க மறுத்து அவருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு கிராமத்தில் தனியார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவன வளாகத்தின் எதிரில் சிதம்பரம் - நாகப்பட்டினம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


சீர்காழி: சாலை விரிவாக்கம் செய்யும் இடத்தில் மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு!

தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ்  தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில் தொடர்ந்து  சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் தனியார் ஒப்பந்த நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உயிரிழந்த ரவியின் குடும்பத்திற்கு சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ள  தனியார் ஒப்பந்த நிறுவன 4 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும், 25 ஆயிரம் ரூபாய் இறுதி சடங்கிற்கும் நிவாரணமாக வழங்கப்படும் என  உறுதி அளித்ததின் பேரில்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.


சீர்காழி: சாலை விரிவாக்கம் செய்யும் இடத்தில் மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு!

அசம்பாவிதங்களை. மேலும் போராட்டம்   அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பாக குவிக்கப்பட்டிருந்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சிதம்பரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பெரும்பாலான வாகனங்கள் மற்றும் வழியில் திருப்பி விடப்பட்டன.

 


சீர்காழி: சாலை விரிவாக்கம் செய்யும் இடத்தில் மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு!

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மின் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்றும் இந்த உயிரிழப்புக்கு முக்கிய காரணம் சீர்காழி மின்சார வாரிய அதிகாரிகள் சரியான முறையில் மின் இணைப்புகளை கவனிக்காமல் கையூட்டு பெற்றுக் கொண்டு செயல்படுவதே இதற்கு காரணம் என்றும், இதனை உடனடியாக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்ஜெட் விலையில் தரமான ஸ்கூட்டர்.. மைலேஜை அள்ளித் தரும் Hero Pleasure Plus
பட்ஜெட் விலையில் தரமான ஸ்கூட்டர்.. மைலேஜை அள்ளித் தரும் Hero Pleasure Plus
US Killed Leaders: சதாம் உசேன் முதல் கடாஃபி வரை.. அமெரிக்காவால் செத்த உலகத் தலைவர்கள்!
US Killed Leaders: சதாம் உசேன் முதல் கடாஃபி வரை.. அமெரிக்காவால் செத்த உலகத் தலைவர்கள்!
Embed widget