மேலும் அறிய

Crime: பதறவைத்த கொடூரம்.. போதையில் அராஜகம்... நாய்க்குட்டிகளின் காதை வெட்டி, உப்பு தடவி சாப்பிட்ட இளைஞர்கள்..

உத்தரபிரதேச மாநிலத்தில் குடிபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் உயிருடன் இருந்த இரண்டு நாய்க்குட்டிகளின் காது மற்றும் வாலை வெட்டி உப்பு தடவி சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா முழுவதும் நாளுக்குநாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எந்த அளவிற்கு அதிகரித்து வருகிறதோ, அதே அளவிற்கு பிராணிகள் மீதான தாக்குதலும் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களில், ஓடும் காருக்கு பின்னால் ஒரு நாய் கட்டப்பட்டு இழுத்து செல்லப்பட்டு, நண்பர்கள் நான்கு பேர் இணைந்து ஒரு நாயை மொட்டை மாடியில் இருந்து தூக்கி எரிந்தது, ஆடு மற்றும் மாடுகள் மீது சுடு எண்ணெய், ஆசிட் வீசிய வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் அதிர்ச்சி அலையை வீசியது. 

அந்த வரிசையில், உத்தரபிரதேச மாநிலத்தில் குடிபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் உயிருடன் இருந்த இரண்டு நாய்க்குட்டிகளின் காது மற்றும் வாலை வெட்டி உப்பு தடவி சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பரித்பூர் பகுதி எஸ்டிஎம் காலனியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்,” குடிபோதையில் இருந்த இரண்டு வாலிபர்கள் அருகிலிருந்த நாய்க்குட்டிகளின் காதையும்,  வாலையும் வெட்டியுள்ளனர். தற்போது நாய்க்குட்டிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், இரண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. 

குற்றஞ்சாட்டப்பட்ட முகேஷ் வால்மீகியும், மற்றொரு நபரும் சேர்ந்து மது அருந்தியபோது, ​​இந்த மனிதாபிமானமற்ற செயலைச் செய்துள்ளனர். இதுகுறித்து தீரஜ் பதக் என்ற நபர் மற்றும் விலங்குகள் நலனுக்காக செயல்படும் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பின் உறுப்பினர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் மீது விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது” என தெரிவித்தனர். 

தொடர்ந்து மூத்த போலீஸ் சூப்பிரண்டு அகிலேஷ் சௌராசியா விசாரணையை தொடங்கி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

முன்னதாக, போபாலில் உள்ள சினார் பூங்காவில் ஒரு நாய் மற்றும் அதன் மூன்று குட்டிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதற்கட்ட விசாரணையில், இறந்த நாய் மற்றும் அதன் குட்டிகள் மர்ம நபர் ஒருவர் விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, மீண்டும் அதே பூங்காவில் அந்த நாய்களில் உடல்களை எரித்துள்ளார். 

விஷம் கொடுத்து கொலை:

 கடந்த 4ம் தேதி காலை அப்பகுதி மக்கள் வழக்கம்போல் பூங்காவிற்கு உடற்பயிற்சி மற்றும் நடைபயணம் செய்வதற்காக வந்துள்ளனர். அப்போது, மூன்று குட்டி நாய்க்குட்டிகளில் உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளது. குட்டிகளை தொடர்ந்து தாயின் உடலும் சற்று தொலைவில் எரிக்கப்பட்டிருந்தனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

முதலில் இந்த சம்பவம் விபத்தாக கருதிய பொதுமக்கள், இறந்த பெண் நாயின் உடலில் நீல நிறத்தில் இருப்பதை கண்டு சந்தேகமடைந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் விலங்கு நல ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  இதுபற்றி தகவல் அறிந்த வனவிலங்கு ஆர்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, ​​நாய் குட்டி பிணமாகவும், அவற்றின் உடல் எலும்புகள் தெரியும் அளவுக்கு எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விலங்கு வதை சட்டம்:

இந்த தகவல் உடனடியாக மத்திய பிரதேச நகர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் தெரியாதவர்கள் மீது ஐபிசி பிரிவு 429 மற்றும் விலங்கு வதை சட்டம் பிரிவு 13 இன் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த விஷயத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக எம்பி நகர் காவல் நிலையப் பொறுப்பாளர் சுதிர் அர்ஜாரியா கூறுகையில், இதுபோன்ற இதயமற்ற சம்பவம் முதல்முறையாக பதிவாகியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில், ஐபிசி பிரிவு 429 மற்றும் விலங்கு வதை சட்டம் பிரிவு 13 இன் கீழ் மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நெஞ்சை பதறவைத்த சம்பவம் : போக்சோ நீதிமன்றம் அதிரடி - ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
நெஞ்சை பதறவைத்த சம்பவம் : போக்சோ நீதிமன்றம் அதிரடி - ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
Crime: அடங்காத காதல்.. கணவனை கொன்ற மனைவி.. உதவிய முன்னாள், இந்நாள் காதலன்!
Crime: அடங்காத காதல்.. கணவனை கொன்ற மனைவி.. உதவிய முன்னாள், இந்நாள் காதலன்!
கள்ளக் காதல் விவகாரம் !! டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை - 3 பேர் அதிரடி கைது
கள்ளக் காதல் விவகாரம் !! டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை - 3 பேர் அதிரடி கைது
கோவை கொடூரம்; மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் தகராறு ! நண்பனை அடித்துக் கொன்று புதைத்த சிறுவர்கள்
கோவை கொடூரம்; மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் தகராறு ! நண்பனை அடித்துக் கொன்று புதைத்த சிறுவர்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு
TVK vs Congress | மனக்கசப்பில் ராகுல்காந்தி? தவெக - காங்கிரஸ் உரசல்! விஜய் கேரளா போகாதது ஏன்?
திருமணம் செய்ய மறுத்த மாணவி இளைஞரின் கொலைவெறிச் செயல் திருச்சியில் கொடூரம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
TN Govt Vs GCC: ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
CM Vijay: சிஎம் விஜய் பிடியில் செந்தில் பாலாஜி குடுமி.. ED கோரிக்கையை தவெக அரசு ஏற்குமா? திமுக மூவ் என்ன?
சிஎம் விஜய் பிடியில் செந்தில் பாலாஜி குடுமி.. ED கோரிக்கையை தவெக அரசு ஏற்குமா? திமுக மூவ் என்ன?
Tamilnadu Round Up: CM விஜயை பாராட்டிய வேலுமணி, அதிமுக மா.செ., கூட்டம், உதயநிதி அறிவிப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
CM விஜயை பாராட்டிய வேலுமணி, அதிமுக மா.செ., கூட்டம், உதயநிதி அறிவிப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
Toyota Upcoming Cars: டொயோட்டாவின் புது மெனு..! உள்ளூரிலேயே ரெடியாகும் 5 கார்கள், SUV, MPV, ஹைப்ரிட், EV - கம்மி விலை
டொயோட்டாவின் புது மெனு..! உள்ளூரிலேயே ரெடியாகும் 5 கார்கள், SUV, MPV, ஹைப்ரிட், EV - கம்மி விலை
Pereol Diesel Price: போச்சு..! மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு - லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
போச்சு..! மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு - லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
TVK Vijay: நம்பி வந்தவர்களை கைவிட்டுவிட்டாரா விஜய்.? அரசு நியமனத்தில் புறக்கணிப்பு- கொதிப்பில் த.வெ.க வழக்கறிஞர்கள்
நம்பி வந்தவர்களை கைவிட்டுவிட்டாரா விஜய்.? அரசு நியமனத்தில் புறக்கணிப்பு- கொதிப்பில் த.வெ.க வழக்கறிஞர்கள்
Embed widget