மேலும் அறிய

Odisha: ஒரே மரத்தில் 3 இளம் பெண்களின் உடல்கள்.. தற்கொலையா? கொலையா? விசாரணை தீவிரம்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பெண்களின் உடல் மரத்தில் தூக்கில் தொங்கியவாறு கைப்பற்றப்பட்டது

ஒடிசா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் நெருங்கிய நண்பர்களான மூன்று பெண்களின் உடல் மரத்தில் தூக்கிட்டு தொங்கியவாறு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசாவின் நபரங்பூர் (Nabarangpur) மாவட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் மூன்று பெண்களின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தத் தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தெரிந்த போலீசார் மரத்தில் இருந்த பெண்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், நபரங்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தோஹ்ரா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் இருவரும், மற்றொரு பெண்ணும் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ஒன்றாகக் காட்டிற்குச் சென்றதாக  சென்றுள்ளனர். இரவு 9.30 மணி ஆகியும் சிறுமிகள் இருவரும் வீடு திரும்பாததையடுத்து, அவர்களது குடும்பத்தினர் அவர்களைத் தேடியபோது, அந்த கிராமத்தில் இருந்த ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களை கண்டுள்ளனர்.பின்னர், எங்களிடம் புகார் அளித்தனர்.” என்று கூறினார்.


Odisha: ஒரே மரத்தில் 3 இளம் பெண்களின் உடல்கள்.. தற்கொலையா? கொலையா? விசாரணை தீவிரம்!

“மூவரும் மரக்கிளைகளில் அவர்களுடைய துப்பட்டாவால் கட்டப்பட்டு தொங்கி கொண்டிருந்தனர். மரத்தின் அருகே அவர்களது காலணிகள் கண்டெடுக்கப்பட்டன. பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை என்றாலும், விசாரணை அறிக்கையில், தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மூவரும் 18 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள். நாங்கள் இங்குள்ள காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பாக மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளோம்" என்று நபரங்பூர் எஸ்பி ஸ்மித் பர்மர் கூறினார்.

மேலும், போலீசாரின் தகவலின்படி, இறந்த பெண்களில் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து பெற்றோருடன் தங்கியிருந்தார். மற்ற இருவரும் திருமணமாகாதவர்கள். இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் அடிக்கடி வெளியே சுற்றுவது, ஒன்றாக நேரத்தை செலவிடுவது என்று எப்போதும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று பெண்களும் பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இறப்புக்கான  காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்களின்படி, ​​2020ஆம் ஆண்டில் தற்கொலையால் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று கூறுகிறது.  2020 ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் மாதத்தில் சம்பல்பூரில் உள்ள வீர் சுரேந்திர சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவர்கள் குழுவின் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வில், மேற்கு ஒடிசா மாவட்டங்களில் இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த இறப்புகளில் 38% தற்கொலையால் ஏற்பட்டதாகக் கூறியது. தற்கொலை செய்து கொண்டவர்களில் 40 சதவீதம் பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள், 19 சதவீதம் பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலை தீர்வல்ல..

தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. அதனால், தற்கொலை எண்ணங்கள் தோன்றும்போது, உடனடியாக மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும். பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப, மனரீதியிலான கவுன்சலிங் கொடுக்கப்படும். காய்ச்சல், வயிற்று வலிக்கு மருத்தவரை சந்திப்பது போலத்தான், மனதின் ஆரோக்கியம் குன்றும்போது மனநல மருத்துவரை சந்திப்பதும். அதற்குத் தயக்கமே வேண்டாம் தூக்கியெறியுங்கள். அரசு இலவச மனநல ஆலோசனைக்கு 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தற்கொலை எண்ணத்தைக் கடக்கலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

 

 

Vijay interview : ரசிகர்கள் விருப்பப்பட்டால் தளபதி டூ தலைவன்... நேர்காணலில் அரசியல் முடிச்சை அவிழ்த்த விஜய்!!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

 
Tags:maduraisuicidecrimenellaipolice investication
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Embed widget