மேலும் அறிய

Odisha: ஒரே மரத்தில் 3 இளம் பெண்களின் உடல்கள்.. தற்கொலையா? கொலையா? விசாரணை தீவிரம்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பெண்களின் உடல் மரத்தில் தூக்கில் தொங்கியவாறு கைப்பற்றப்பட்டது

ஒடிசா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் நெருங்கிய நண்பர்களான மூன்று பெண்களின் உடல் மரத்தில் தூக்கிட்டு தொங்கியவாறு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசாவின் நபரங்பூர் (Nabarangpur) மாவட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் மூன்று பெண்களின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தத் தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தெரிந்த போலீசார் மரத்தில் இருந்த பெண்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், நபரங்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தோஹ்ரா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் இருவரும், மற்றொரு பெண்ணும் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ஒன்றாகக் காட்டிற்குச் சென்றதாக  சென்றுள்ளனர். இரவு 9.30 மணி ஆகியும் சிறுமிகள் இருவரும் வீடு திரும்பாததையடுத்து, அவர்களது குடும்பத்தினர் அவர்களைத் தேடியபோது, அந்த கிராமத்தில் இருந்த ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களை கண்டுள்ளனர்.பின்னர், எங்களிடம் புகார் அளித்தனர்.” என்று கூறினார்.


Odisha: ஒரே மரத்தில் 3 இளம் பெண்களின் உடல்கள்.. தற்கொலையா? கொலையா? விசாரணை தீவிரம்!

“மூவரும் மரக்கிளைகளில் அவர்களுடைய துப்பட்டாவால் கட்டப்பட்டு தொங்கி கொண்டிருந்தனர். மரத்தின் அருகே அவர்களது காலணிகள் கண்டெடுக்கப்பட்டன. பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை என்றாலும், விசாரணை அறிக்கையில், தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மூவரும் 18 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள். நாங்கள் இங்குள்ள காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பாக மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளோம்" என்று நபரங்பூர் எஸ்பி ஸ்மித் பர்மர் கூறினார்.

மேலும், போலீசாரின் தகவலின்படி, இறந்த பெண்களில் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து பெற்றோருடன் தங்கியிருந்தார். மற்ற இருவரும் திருமணமாகாதவர்கள். இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் அடிக்கடி வெளியே சுற்றுவது, ஒன்றாக நேரத்தை செலவிடுவது என்று எப்போதும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று பெண்களும் பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இறப்புக்கான  காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்களின்படி, ​​2020ஆம் ஆண்டில் தற்கொலையால் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று கூறுகிறது.  2020 ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் மாதத்தில் சம்பல்பூரில் உள்ள வீர் சுரேந்திர சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவர்கள் குழுவின் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வில், மேற்கு ஒடிசா மாவட்டங்களில் இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த இறப்புகளில் 38% தற்கொலையால் ஏற்பட்டதாகக் கூறியது. தற்கொலை செய்து கொண்டவர்களில் 40 சதவீதம் பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள், 19 சதவீதம் பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலை தீர்வல்ல..

தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. அதனால், தற்கொலை எண்ணங்கள் தோன்றும்போது, உடனடியாக மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும். பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப, மனரீதியிலான கவுன்சலிங் கொடுக்கப்படும். காய்ச்சல், வயிற்று வலிக்கு மருத்தவரை சந்திப்பது போலத்தான், மனதின் ஆரோக்கியம் குன்றும்போது மனநல மருத்துவரை சந்திப்பதும். அதற்குத் தயக்கமே வேண்டாம் தூக்கியெறியுங்கள். அரசு இலவச மனநல ஆலோசனைக்கு 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தற்கொலை எண்ணத்தைக் கடக்கலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

 

 

Vijay interview : ரசிகர்கள் விருப்பப்பட்டால் தளபதி டூ தலைவன்... நேர்காணலில் அரசியல் முடிச்சை அவிழ்த்த விஜய்!!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

 
Tags:maduraisuicidecrimenellaipolice investication

தலைப்பு செய்திகள்

மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget