மேலும் அறிய

Odisha: ஒரே மரத்தில் 3 இளம் பெண்களின் உடல்கள்.. தற்கொலையா? கொலையா? விசாரணை தீவிரம்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பெண்களின் உடல் மரத்தில் தூக்கில் தொங்கியவாறு கைப்பற்றப்பட்டது

ஒடிசா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் நெருங்கிய நண்பர்களான மூன்று பெண்களின் உடல் மரத்தில் தூக்கிட்டு தொங்கியவாறு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசாவின் நபரங்பூர் (Nabarangpur) மாவட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் மூன்று பெண்களின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தத் தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தெரிந்த போலீசார் மரத்தில் இருந்த பெண்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், நபரங்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தோஹ்ரா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் இருவரும், மற்றொரு பெண்ணும் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ஒன்றாகக் காட்டிற்குச் சென்றதாக  சென்றுள்ளனர். இரவு 9.30 மணி ஆகியும் சிறுமிகள் இருவரும் வீடு திரும்பாததையடுத்து, அவர்களது குடும்பத்தினர் அவர்களைத் தேடியபோது, அந்த கிராமத்தில் இருந்த ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களை கண்டுள்ளனர்.பின்னர், எங்களிடம் புகார் அளித்தனர்.” என்று கூறினார்.


Odisha: ஒரே மரத்தில் 3 இளம் பெண்களின் உடல்கள்.. தற்கொலையா? கொலையா? விசாரணை தீவிரம்!

“மூவரும் மரக்கிளைகளில் அவர்களுடைய துப்பட்டாவால் கட்டப்பட்டு தொங்கி கொண்டிருந்தனர். மரத்தின் அருகே அவர்களது காலணிகள் கண்டெடுக்கப்பட்டன. பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை என்றாலும், விசாரணை அறிக்கையில், தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மூவரும் 18 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள். நாங்கள் இங்குள்ள காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பாக மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளோம்" என்று நபரங்பூர் எஸ்பி ஸ்மித் பர்மர் கூறினார்.

மேலும், போலீசாரின் தகவலின்படி, இறந்த பெண்களில் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து பெற்றோருடன் தங்கியிருந்தார். மற்ற இருவரும் திருமணமாகாதவர்கள். இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் அடிக்கடி வெளியே சுற்றுவது, ஒன்றாக நேரத்தை செலவிடுவது என்று எப்போதும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று பெண்களும் பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இறப்புக்கான  காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்களின்படி, ​​2020ஆம் ஆண்டில் தற்கொலையால் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று கூறுகிறது.  2020 ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் மாதத்தில் சம்பல்பூரில் உள்ள வீர் சுரேந்திர சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவர்கள் குழுவின் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வில், மேற்கு ஒடிசா மாவட்டங்களில் இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த இறப்புகளில் 38% தற்கொலையால் ஏற்பட்டதாகக் கூறியது. தற்கொலை செய்து கொண்டவர்களில் 40 சதவீதம் பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள், 19 சதவீதம் பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலை தீர்வல்ல..

தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. அதனால், தற்கொலை எண்ணங்கள் தோன்றும்போது, உடனடியாக மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும். பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப, மனரீதியிலான கவுன்சலிங் கொடுக்கப்படும். காய்ச்சல், வயிற்று வலிக்கு மருத்தவரை சந்திப்பது போலத்தான், மனதின் ஆரோக்கியம் குன்றும்போது மனநல மருத்துவரை சந்திப்பதும். அதற்குத் தயக்கமே வேண்டாம் தூக்கியெறியுங்கள். அரசு இலவச மனநல ஆலோசனைக்கு 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தற்கொலை எண்ணத்தைக் கடக்கலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

 

 

Vijay interview : ரசிகர்கள் விருப்பப்பட்டால் தளபதி டூ தலைவன்... நேர்காணலில் அரசியல் முடிச்சை அவிழ்த்த விஜய்!!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

 
Tags:maduraisuicidecrimenellaipolice investication
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
குடும்ப தகராறு வன்முறையாக மாறியது: கோவையில் கணவர் கைது...
குடும்ப தகராறு வன்முறையாக மாறியது: கோவையில் கணவர் கைது...
வன்முறையாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளியான ஷாக்கிங் சி.சி.டி.வி வீடியோ..
வன்முறையாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளியான ஷாக்கிங் சி.சி.டி.வி வீடியோ..
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs EPS: “அவர் பழனிசாமி இல்ல, அடிமைசாமி, ஆமாம்சாமி“; இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
“அவர் பழனிசாமி இல்ல, அடிமைசாமி, ஆமாம்சாமி“; இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
TVK Vijay: விஜய்க்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர்.. பின்னணியில் சதி.. பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay: விஜய்க்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர்.. பின்னணியில் சதி.. பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay: தவெக பரப்புரை ரத்து.. சோர்ந்து போன விஜய்.. உடல்நிலை பற்றி பரவும் தகவல்!
TVK Vijay: தவெக பரப்புரை ரத்து.. சோர்ந்து போன விஜய்.. உடல்நிலை பற்றி பரவும் தகவல்!
தமிழ்நாடு உள்துறை செயலாளராக மணிவாசன் ஐ.ஏ.எஸ் நியமனம் ஏன்.? பரபரப்பு தகவல்கள்...
தமிழ்நாடு உள்துறை செயலாளராக மணிவாசன் ஐ.ஏ.எஸ் நியமனம் ஏன்.? பரபரப்பு தகவல்கள்...
ஆட்டோ ஓட்டி, துணி துவைத்து, சைக்கிள் ஓட்டி...பிரச்சாரத்துல இன்னும் என்னலாம் பண்ணுவீங்க?
ஆட்டோ ஓட்டி, துணி துவைத்து, சைக்கிள் ஓட்டி...பிரச்சாரத்துல இன்னும் என்னலாம் பண்ணுவீங்க?
Zelensky Vs America: இனி அமெரிக்காவ நம்பி யூஸ் இல்ல.! நேட்டோவை தூண்டிவிடும் ஜெலன்ஸ்கி; சொல்வது நடக்குமா.?
இனி அமெரிக்காவ நம்பி யூஸ் இல்ல.! நேட்டோவை தூண்டிவிடும் ஜெலன்ஸ்கி; சொல்வது நடக்குமா.?
Toyota Innova Hycross: 2 லட்சம் கார்கள் விற்பனை; பட்டையை கிளப்பும் இன்னோவா ஹைக்ராஸ்; வாங்குபவர்களை கவர்ந்தது எப்படி.?
2 லட்சம் கார்கள் விற்பனை; பட்டையை கிளப்பும் இன்னோவா ஹைக்ராஸ்; வாங்குபவர்களை கவர்ந்தது எப்படி.?
Car Tips: பந்தாவுக்காக உங்க கார்ல பெரிய டயர்கள மாட்டியிருக்கீங்களா.? அதனால எவ்வளவு ஆபத்து தெரியுமா.?
பந்தாவுக்காக உங்க கார்ல பெரிய டயர்கள மாட்டியிருக்கீங்களா.? அதனால எவ்வளவு ஆபத்து தெரியுமா.?
Embed widget