மேலும் அறிய

Thiruvanmiyur Railway Station Theft: திருவான்மியூர் கொள்ளை சம்பவத்தில் நடந்தது என்ன? ரயில்வே டி.ஐ.ஜி. விளக்கம்

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது எப்படி? என்று தெற்கு ரயில்வே டி.ஐ.ஜி. ஜெயகவுரி விளக்கம் அளித்துள்ளார்.

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்குபவரை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் டிக்கெட் வழங்கும் வட இந்தியாவைச் சேர்ந்த டீக்காராமனே நாடகமாடி பணத்தை கொள்ளையடித்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர். திருடிய பணத்தையும் போலீசார் மீட்டனர்.

தெற்கு ரயில்வே ஐ.ஜி. ஜெயகவுரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, “திருவான்மியூரில் அதிகாலை பணியில் இருந்தபோது அடையாளம் தெரியாத 3 பேர் மிரட்டி பணத்தை திருடிச் சென்றதாக புகார். அவர் கூறும்போது, கை, கால்களை கட்டி வாயையும் அடைத்துவிட்டு பணத்தை கொள்ளையடித்துவிட்டதாக புகார் வந்தது.


Thiruvanmiyur Railway Station Theft: திருவான்மியூர் கொள்ளை சம்பவத்தில் நடந்தது என்ன? ரயில்வே டி.ஐ.ஜி. விளக்கம்

புகார் கிடைக்கப் பெற்றவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம். சம்பவ இடம் முழுவதும் விசாரணை நடத்தினோம். டீக்காராமனிடம் முழுவதும் விசாரணை நடத்தியதில், அவர் அளித்த புகார் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. சம்பவ இடத்திலும், சுற்றியுள்ள இடத்திலும் உள்ள கண்காணிப்பு காட்சிகளையும் முழுவதும் ஆய்வு செய்தோம். புகார் கிடைக்கப் பெற்றவுடன் டி.ஜி.பி. 24 மணிநேரத்தில் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

விசாரணைக்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சாட்சியங்களின் அடிப்படையில் டீக்காராமனிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இறுதியில் டீக்காராமன் அவரது மனைவியுடன் சேர்ந்து நாடகமாடி இந்த பணத்தை கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட முழு பணமான ரூபாய். 1.32 லட்சமும் மீட்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சாட்சியங்களின் அடிப்படையில் இவர்கள்தான் குற்றங்களை செய்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.


Thiruvanmiyur Railway Station Theft: திருவான்மியூர் கொள்ளை சம்பவத்தில் நடந்தது என்ன? ரயில்வே டி.ஐ.ஜி. விளக்கம்

டீக்காராமனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், நண்பர்கள் உள்பட தெரிந்தவர்களிடம் அவர் நிறைய கடன் வாங்கியுள்ளார். ஆன்லைன் ரம்மியில் நிறைய பணத்தை இழந்ததால் மனைவியின் ஒத்துழைப்புடன் இதைச் செய்துள்ளனர். ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் இருந்தனர்.

டீக்காராமன் நாடகமாடி ஒரு புகார் அளித்துள்ளார். அவர் பணி நேரத்தில் தனியாக இருக்கும் நேரத்தில் மனைவிக்கு தகவல் அளித்து, அவர் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

தலைப்பு செய்திகள்

தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
TNEB : மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
Embed widget