மேலும் அறிய

Crime : பள்ளி சீருடையில் மது.. ஒயின் குடித்தால் ஜொலிக்கலாம் என நம்பிய மாணவிகள்.. குடிக்கத்தூண்டிய இளைஞர் கைது

சம்பவ இடத்துக்கு விரைந்த ஆம்புலன்ஸ், அங்கு தள்ளாடிக் கொண்டிருந்த இரண்டு மாணவிகளை ஏற்றிச் சென்றுள்ளனர். தொடர்ந்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி சீருடையில் மது அருந்தி விட்டு சாலையில் தள்ளாடிச் சென்ற மாணவிகளை காவல் துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸிடம் ஒப்படைப்பு

கரூர், சர்ச் கார்னர் பகுதியில் பள்ளி மாணவிகள் தள்ளாடியபடி சாலையில் சென்ற நிலையில், இவர்களைக் கவனித்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஆம்புலன்ஸ், அங்கு தள்ளாடிக் கொண்டிருந்த இரண்டு மாணவிகளை ஏற்றிச் சென்றுள்ளனர். தொடர்ந்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து 2 மாணவிகளிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், மொத்தம் 3 பேர் ஒன்றாக சுற்றியதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒயின் குடித்தால் கலர் ஆகலாம் என்று தூண்டல்

இதனையடுத்து மற்றொரு மாணவியையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் 3 மாணவிகளும் கரூரில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்ததும், தேர்வில் தோல்வியடைந்ததால் மறுதேர்வு எழுத பள்ளி சீருடையுடன், மற்றொரு பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு செல்லும்போது 3 பேரும் ஒன்று சேர்ந்ததும் தெரிய வந்தது.

மேலும், ஒயின் குடித்தால் கலராக மாறலாம் என நண்பர்கள் எவரோ சொன்னதை மனதில் கொண்டு ஒயின் வாங்கி 3 மாணவிகளும் குடித்துள்ளதாகவும், ஒயினில் போதை வரும் என்று தெரியாமல் குடித்து விட்டு அவர்கள் தள்ளாடியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து மாணவிகளின் பெற்றோரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து அறிவுரை கூறி அவர்களுடன் அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் மாணவிகளை வற்புறுத்தி தீனா என்ற இளைஞர் மது அருந்தவைத்தது தெரிய வந்த நிலையில், காவல் துறையினர் அந்நபரை கைது செய்துள்ளனர்.

பள்ளிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி

தமிழ்நாட்டில் முன்னதாக மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நேற்று (ஆக.11) முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த உறுதிமொழி ஏற்பு நடந்தது. அண்மையில், போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து, மாவட்டத் தலைநகரங்களில் அமைச்சர்கள் தலைமையில் இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.  தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.


மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்

Icecream Ad : ஐஸ்க்ரீம் விளம்பரத்தால் வந்த சர்ச்சை: இனிமே பெண்கள் விளம்பரத்துக்கு வேண்டாம்.. உத்தரவிட்ட அரசு..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
"திருமணம் மீறிய உறவு" தந்தையிடம் புகார் கூறியதால் ஆத்திரம் ! பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தாய்
" ஒன்னும் ஆகாது " பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி அலுவலக உதவியாளர்
" தோழிகள் கண்முன்னே பயங்கரம் " பெப்பர் ஸ்ப்ரே அடித்து இளம்பெண் வெட்டிக் கொலை

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
Embed widget