மேலும் அறிய

மின்தடைக்கு மெழுகுவர்த்தி கேட்ட தந்தையை அடித்தே கொன்ற மகன்!

ஒரு மெழுகுவர்த்தி கேட்டதற்காக தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

ஒரு மெழுகுவர்த்தி கேட்டதற்காக தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த வெங்கத்தூர் கன்னியம்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (51). 
கூலித்தொழிலாளியான இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் பாண்டியன் என்ற மகனும் உள்ளனர். பாண்டியன் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இதனால் 28 வயதாகியும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

பாண்டியனின் மனநல பாதிப்பை குணம் செய்ய அவரது பெற்றோர்கள் ஏறி இறங்காத மருத்துவமனையும் இல்லை. பிரார்த்தனை செய்யாத கோயிலும் இல்லை. 

ஆனால் பாண்டியனுக்கு குணமாகவில்லை. கடந்த சில மாதங்களாகவே பாண்டியன் அதிகமாக மூர்க்கத்தனத்துடன் இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பாண்டியன் தனது தாய் மகேஸ்வரியை தாக்கி உள்ளார். இதனால் திருநின்றவூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மகேஸ்வரி சென்றுவிட்டார்.

இதற்கிடையில், பாலகிருஷ்ணன் தனது மகனை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார்.


மின்தடைக்கு மெழுகுவர்த்தி கேட்ட தந்தையை அடித்தே கொன்ற மகன்!

இந்த நிலையில் வீட்டில் பாலகிருஷ்ணன் அவரது மகன் பாண்டியன் ஆகியோர் இருந்தனர். நள்ளிரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டது. அப்போது பாண்டியன் தனது தந்தை பாலகிருஷ்ணன் இடம் மெழுகுவர்த்தியை கொண்டு வருமாறு கூறியுள்ளார். 
பாலகிருஷ்ணன் மெழுகுவர்த்தியை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது பாலகிருஷ்ணன், பாண்டியனைத் திட்டியுள்ளார்.  இதில் ஆத்திரமடைந்த பாண்டியன் வீட்டில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து தந்தை பாலகிருஷ்ணனை தலையிலேயே தாக்கியுள்ளர். இதில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து மணவாளநகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், மணவாள நகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து மணவாளநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே தந்தையை மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனநல பாதிப்பு குணப்படுத்தக் கூடியதே. நம் நாட்டில் உடல் நலப் பிரச்சினையென்றால் உடனடியாக மருத்துவமனைக்கு ஓடும் நாம் யாரும் எனக்கு ஸ்ட்ரெஸ், டிப்ரெஸன் என மனநோய் இருக்கிறது என்பதை வெளியில் சொல்லிக் கொள்வதில்லை. சரியான சிகிச்சையும் எடுப்பதில்லை. ஆரம்ப நிலை மனநல பாதிப்புகளை கவனித்து சரி செய்யாமல் விடும்போது அது அடுத்தடுத்த மோசமான மனநிலை பாதிப்புகளில் கொண்டு போய்விட்டுவிடும். அதனால், மனநலனை போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

தலைப்பு செய்திகள்

நெஞ்சில் திக்.. திக்.. நடுரோட்டில் பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு: தொழில்நுட்பத்தால் சிக்கிய கொள்ளையர்கள்!
நெஞ்சில் திக்.. திக்.. நடுரோட்டில் பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு: தொழில்நுட்பத்தால் சிக்கிய கொள்ளையர்கள்!
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!
மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!
" சொத்துக்காக விஷ ஊசி போட்டு கொலை " மாரடைப்பு என நாடகம் !! இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Embed widget