மேலும் அறிய

மின்தடைக்கு மெழுகுவர்த்தி கேட்ட தந்தையை அடித்தே கொன்ற மகன்!

ஒரு மெழுகுவர்த்தி கேட்டதற்காக தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

ஒரு மெழுகுவர்த்தி கேட்டதற்காக தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த வெங்கத்தூர் கன்னியம்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (51). 
கூலித்தொழிலாளியான இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் பாண்டியன் என்ற மகனும் உள்ளனர். பாண்டியன் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இதனால் 28 வயதாகியும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

பாண்டியனின் மனநல பாதிப்பை குணம் செய்ய அவரது பெற்றோர்கள் ஏறி இறங்காத மருத்துவமனையும் இல்லை. பிரார்த்தனை செய்யாத கோயிலும் இல்லை. 

ஆனால் பாண்டியனுக்கு குணமாகவில்லை. கடந்த சில மாதங்களாகவே பாண்டியன் அதிகமாக மூர்க்கத்தனத்துடன் இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பாண்டியன் தனது தாய் மகேஸ்வரியை தாக்கி உள்ளார். இதனால் திருநின்றவூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மகேஸ்வரி சென்றுவிட்டார்.

இதற்கிடையில், பாலகிருஷ்ணன் தனது மகனை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார்.


மின்தடைக்கு மெழுகுவர்த்தி கேட்ட தந்தையை அடித்தே கொன்ற மகன்!

இந்த நிலையில் வீட்டில் பாலகிருஷ்ணன் அவரது மகன் பாண்டியன் ஆகியோர் இருந்தனர். நள்ளிரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டது. அப்போது பாண்டியன் தனது தந்தை பாலகிருஷ்ணன் இடம் மெழுகுவர்த்தியை கொண்டு வருமாறு கூறியுள்ளார். 
பாலகிருஷ்ணன் மெழுகுவர்த்தியை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது பாலகிருஷ்ணன், பாண்டியனைத் திட்டியுள்ளார்.  இதில் ஆத்திரமடைந்த பாண்டியன் வீட்டில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து தந்தை பாலகிருஷ்ணனை தலையிலேயே தாக்கியுள்ளர். இதில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து மணவாளநகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், மணவாள நகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து மணவாளநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே தந்தையை மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனநல பாதிப்பு குணப்படுத்தக் கூடியதே. நம் நாட்டில் உடல் நலப் பிரச்சினையென்றால் உடனடியாக மருத்துவமனைக்கு ஓடும் நாம் யாரும் எனக்கு ஸ்ட்ரெஸ், டிப்ரெஸன் என மனநோய் இருக்கிறது என்பதை வெளியில் சொல்லிக் கொள்வதில்லை. சரியான சிகிச்சையும் எடுப்பதில்லை. ஆரம்ப நிலை மனநல பாதிப்புகளை கவனித்து சரி செய்யாமல் விடும்போது அது அடுத்தடுத்த மோசமான மனநிலை பாதிப்புகளில் கொண்டு போய்விட்டுவிடும். அதனால், மனநலனை போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்.. குஜராத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
"மீளாத் துயரில் ஏழை, எளிய மக்கள்" உடனே அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்.. குஜராத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
"மீளாத் துயரில் ஏழை, எளிய மக்கள்" உடனே அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
Thug life: கமல் பேசுனது எங்கப்பா பேசுனது மாதிரி இருந்துச்சு.. மேடையிலே சிவராஜ்குமார் உருக்கம்
Thug life: கமல் பேசுனது எங்கப்பா பேசுனது மாதிரி இருந்துச்சு.. மேடையிலே சிவராஜ்குமார் உருக்கம்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்..  ஆடிப்போன எம்.ஆர்.கே
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே
Embed widget