மேலும் அறிய

மதுரை : கூடுதல் வட்டி ஆசைகாட்டி விரித்த வலை : 15 ஆயிரம் நபர்களிடம் 60 கோடி மோசடி : அடுத்தடுத்து புகார் !

கூடுதல் வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டி 60 கோடி வரை ஏமாற்றியதாக கூறப்படும் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை காளவாசலை அடுத்த பெத்தெல்நகரில் 'ப்ளை வேர்ல்ட் ஷேர்ஸ் ஓபிசி பிரைவேட் லிமிட்டெட்'  எனும் பெயரில் டிரேடிங் நிறுவனம் ஒன்று செயல்பட்டது. இந்நிலையில்  திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தி, மனோஜ் குமார், மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்த சையது பாரூக் ஆகிய மூவரும் இணைந்து  இந்த நிறுவனத்தை நடத்திவந்துள்ளனர்.

மதுரை : கூடுதல் வட்டி ஆசைகாட்டி விரித்த வலை : 15 ஆயிரம் நபர்களிடம் 60 கோடி மோசடி : அடுத்தடுத்து புகார் !
 
இந்த டிரேடிங் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 120 நாட்களில் அதிகளவிற்கான வட்டிதொகையும், முதலீட்டு தொகை இரட்டிப்பாகும் எனவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை சமூகவலை தளங்களில் பரப்பினர். இதனை நம்பிய வேலை வாய்ப்பு தேடிவந்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்களும் அந்த டிரேடிங் நிறுவனத்தை தொடர்புகொண்ட பேசியுள்ளனர். அப்போது முழு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஆசையை தூண்டும் வகையிலும் பேசி நம்பவைத்துள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பத்தாயிரத்திற்கும்  மேற்பட்டோர் தலா 2ஆயிரத்தி 500ரூபாய் முதல் 10லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.  அதே போல் முதலீடு செய்தவர்களை நம்பவைக்கும் வகையில் முதல் இரண்டு மாதங்களுக்கு இரண்டு மடங்கு தொகையை செலுத்திய நிலையில் அதனை நம்பதொடங்கிய முதலீட்டார்களை சென்னையில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துசென்று மீட்டிங், ஆடம்பர உணவு, பார்ட்டி என கொடுத்துள்ளனர். 

மதுரை : கூடுதல் வட்டி ஆசைகாட்டி விரித்த வலை : 15 ஆயிரம் நபர்களிடம் 60 கோடி மோசடி : அடுத்தடுத்து புகார் !
 
இதே போன்று கூட்டத்திற்கு நிறுவனத்தின் அதிகாரிகளான ஆனந்தி, பாருக், மனோஜ் ஆகிய மூவரும் விலையுயர்ந்த ஆடம்பர கார்களிலும், பல லட்சம் மதிப்பிலான உடைகளை அணிந்தும் வருகை தந்து தங்களை பெரும் முதலாளிகள் போல காட்டிக்கொண்டுள்ளனர்.  இதனை கண்டு முழுவதுமாக ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு கீழ் தலா 100பேர் என கிட்டதட்ட 15000க்கும் மேற்பட்ட முதலீட்டார்களை நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளனர். இதையடுத்து நாள்தோறும் மதுரை, திண்டுக்கல், திருச்சி , கோவை என தமிழகம் முழுவதிலும் உள்ள ஏராளமானோர் முதலீடு செய்துவந்துள்ளனர். முதலீடு செய்த நபர்களுக்கு முதல் இரு மாதங்களுக்கு கூடுதல் வட்டிதொகை இரட்டிப்பாக வழங்கிவந்துள்ளனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக முதலீட்டார்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை வழங்காத நிலையில் கடந்த மே மாதம் முதலாக தொடர்பு கொண்டு நிதி குறித்து கேட்டுள்ளனர். இதனையடுத்து சட்டமன்ற தேர்தல் மற்றும் வருமானவரி செலுத்தும் பணி என்ற காரணங்களை கூறி சமாளித்துவந்துள்ளனர். 
 

மதுரை : கூடுதல் வட்டி ஆசைகாட்டி விரித்த வலை : 15 ஆயிரம் நபர்களிடம் 60 கோடி மோசடி : அடுத்தடுத்து புகார் !
இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்த அனைத்து முதலீட்டார்களும் ஆனந்தி, பாரூக், மனோஜ் ஆகிய 3 பேரையும் தொடர்பு கொண்ட நிலையில் தொகையை தருவதாக கூறி ஏமாற்றிவந்துள்ளனர். இதையடுத்து கடந்த 7-ம் தேதியோடு மூன்று பேரும் தங்களது செல்போன்களை ஆப் செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களது அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு சென்ற நிலையிலும் மூவரும் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதால்  40-க்கும் மேற்பட்ட முகவர்கள் பொருளாதார குற்றபிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மூன்று பேர் குறித்த தகவல்கள் கிடைக்காத நிலையில் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்த மேலும் 10பேர் தற்போது மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் சிறப்பு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.
 

மதுரை : கூடுதல் வட்டி ஆசைகாட்டி விரித்த வலை : 15 ஆயிரம் நபர்களிடம் 60 கோடி மோசடி : அடுத்தடுத்து புகார் !
 
கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்த இளைஞர்கள், இளம்பெண்களை திரைப்பட  பாணியில் வெறும் வார்த்தை ஜாலங்களை முதலீடாக வைத்து 60 கோடியை அபேஸ் செய்து விட்டு தலைமறைவாகியுள்ள மூவரையும் போலிசார் தேடிவருகின்றனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
Embed widget