மேலும் அறிய

மதுரை : கூடுதல் வட்டி ஆசைகாட்டி விரித்த வலை : 15 ஆயிரம் நபர்களிடம் 60 கோடி மோசடி : அடுத்தடுத்து புகார் !

கூடுதல் வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டி 60 கோடி வரை ஏமாற்றியதாக கூறப்படும் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை காளவாசலை அடுத்த பெத்தெல்நகரில் 'ப்ளை வேர்ல்ட் ஷேர்ஸ் ஓபிசி பிரைவேட் லிமிட்டெட்'  எனும் பெயரில் டிரேடிங் நிறுவனம் ஒன்று செயல்பட்டது. இந்நிலையில்  திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தி, மனோஜ் குமார், மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்த சையது பாரூக் ஆகிய மூவரும் இணைந்து  இந்த நிறுவனத்தை நடத்திவந்துள்ளனர்.

மதுரை : கூடுதல் வட்டி ஆசைகாட்டி விரித்த வலை : 15 ஆயிரம் நபர்களிடம் 60 கோடி மோசடி : அடுத்தடுத்து புகார் !
 
இந்த டிரேடிங் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 120 நாட்களில் அதிகளவிற்கான வட்டிதொகையும், முதலீட்டு தொகை இரட்டிப்பாகும் எனவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை சமூகவலை தளங்களில் பரப்பினர். இதனை நம்பிய வேலை வாய்ப்பு தேடிவந்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்களும் அந்த டிரேடிங் நிறுவனத்தை தொடர்புகொண்ட பேசியுள்ளனர். அப்போது முழு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஆசையை தூண்டும் வகையிலும் பேசி நம்பவைத்துள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பத்தாயிரத்திற்கும்  மேற்பட்டோர் தலா 2ஆயிரத்தி 500ரூபாய் முதல் 10லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.  அதே போல் முதலீடு செய்தவர்களை நம்பவைக்கும் வகையில் முதல் இரண்டு மாதங்களுக்கு இரண்டு மடங்கு தொகையை செலுத்திய நிலையில் அதனை நம்பதொடங்கிய முதலீட்டார்களை சென்னையில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துசென்று மீட்டிங், ஆடம்பர உணவு, பார்ட்டி என கொடுத்துள்ளனர். 

மதுரை : கூடுதல் வட்டி ஆசைகாட்டி விரித்த வலை : 15 ஆயிரம் நபர்களிடம் 60 கோடி மோசடி : அடுத்தடுத்து புகார் !
 
இதே போன்று கூட்டத்திற்கு நிறுவனத்தின் அதிகாரிகளான ஆனந்தி, பாருக், மனோஜ் ஆகிய மூவரும் விலையுயர்ந்த ஆடம்பர கார்களிலும், பல லட்சம் மதிப்பிலான உடைகளை அணிந்தும் வருகை தந்து தங்களை பெரும் முதலாளிகள் போல காட்டிக்கொண்டுள்ளனர்.  இதனை கண்டு முழுவதுமாக ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு கீழ் தலா 100பேர் என கிட்டதட்ட 15000க்கும் மேற்பட்ட முதலீட்டார்களை நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளனர். இதையடுத்து நாள்தோறும் மதுரை, திண்டுக்கல், திருச்சி , கோவை என தமிழகம் முழுவதிலும் உள்ள ஏராளமானோர் முதலீடு செய்துவந்துள்ளனர். முதலீடு செய்த நபர்களுக்கு முதல் இரு மாதங்களுக்கு கூடுதல் வட்டிதொகை இரட்டிப்பாக வழங்கிவந்துள்ளனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக முதலீட்டார்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை வழங்காத நிலையில் கடந்த மே மாதம் முதலாக தொடர்பு கொண்டு நிதி குறித்து கேட்டுள்ளனர். இதனையடுத்து சட்டமன்ற தேர்தல் மற்றும் வருமானவரி செலுத்தும் பணி என்ற காரணங்களை கூறி சமாளித்துவந்துள்ளனர். 
 

மதுரை : கூடுதல் வட்டி ஆசைகாட்டி விரித்த வலை : 15 ஆயிரம் நபர்களிடம் 60 கோடி மோசடி : அடுத்தடுத்து புகார் !
இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்த அனைத்து முதலீட்டார்களும் ஆனந்தி, பாரூக், மனோஜ் ஆகிய 3 பேரையும் தொடர்பு கொண்ட நிலையில் தொகையை தருவதாக கூறி ஏமாற்றிவந்துள்ளனர். இதையடுத்து கடந்த 7-ம் தேதியோடு மூன்று பேரும் தங்களது செல்போன்களை ஆப் செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களது அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு சென்ற நிலையிலும் மூவரும் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதால்  40-க்கும் மேற்பட்ட முகவர்கள் பொருளாதார குற்றபிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மூன்று பேர் குறித்த தகவல்கள் கிடைக்காத நிலையில் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்த மேலும் 10பேர் தற்போது மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் சிறப்பு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.
 

மதுரை : கூடுதல் வட்டி ஆசைகாட்டி விரித்த வலை : 15 ஆயிரம் நபர்களிடம் 60 கோடி மோசடி : அடுத்தடுத்து புகார் !
 
கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்த இளைஞர்கள், இளம்பெண்களை திரைப்பட  பாணியில் வெறும் வார்த்தை ஜாலங்களை முதலீடாக வைத்து 60 கோடியை அபேஸ் செய்து விட்டு தலைமறைவாகியுள்ள மூவரையும் போலிசார் தேடிவருகின்றனர்.
 

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget