மேலும் அறிய

KT Raghavan | கே.டி.ராகவனை விசாரிக்க வேண்டும்.. கொந்தளிக்கும் சிவசங்கர் பாபா ஆதரவாளர்கள்..

கே.டி.ராகவன் மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் சிவசங்கர் பாபா ஆதரவாளர்கள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமின் மனுக்களும் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா. இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகார்களின்பேரில் தனித்தனியாக 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் 2 வழக்குகளில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை செங்கல்பட்டு போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தன.

KT Raghavan | கே.டி.ராகவனை விசாரிக்க வேண்டும்.. கொந்தளிக்கும் சிவசங்கர் பாபா ஆதரவாளர்கள்..
 
இதையடுத்து இந்த 2 வழக்குகளிலும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2015, 2018,  2020 ஆகிய காலகட்டத்தில் மாணவிகளிடம் நடத்தப்பட்ட பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக பெறப்பட்ட வாக்குமூலத்தை 300 பக்க குற்றப்பத்திரிகையாக காவல்துறையினர் நீதிபதியிடம் சமர்ப்பித்தனர். இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. ஜாமின் குறித்து சிவசங்கர் பாபா மீண்டும் மேல்முறையீடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

KT Raghavan | கே.டி.ராகவனை விசாரிக்க வேண்டும்.. கொந்தளிக்கும் சிவசங்கர் பாபா ஆதரவாளர்கள்..
இதனிடையே கேளம்பாக்கத்தில் இருக்கும் கோவிலுக்குள் தங்களை விடுவது கிடையாது என சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சிவசங்கர் பாபா கைதானதுக்கு பிறகு, உருவாக்கிய சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் சார்பில் இந்த மனுவானது மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் பிரபல திரைப்பட நடிகர் சண்முகராஜன் உள்ளிட்டோர் இந்த இயக்கத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் என்ற அறக்கட்டளையின் செயலாளர் ஜி. கவிதா மற்றும் நடிகர் சண்முகராஜன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், கேளம்பாக்கம் பள்ளி மற்றும் அறக்கட்டளை நிர்வாகியாக செயல்பட்டு வரும் ஜானகி சீனிவாசன், ஸ்ரீராமராஜ்யா மற்றும் சாம்ரட்சனா ஆகியோர் ஜாதியின் பெயரால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர், மற்றவர்களை கோவிலுக்குள் உள்ளே விடுவது கிடையாது மேலும் அறக்கட்டளையின் பணத்தை திருடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

KT Raghavan | கே.டி.ராகவனை விசாரிக்க வேண்டும்.. கொந்தளிக்கும் சிவசங்கர் பாபா ஆதரவாளர்கள்..
 
பாபா கைது செய்யப்பட்ட பின்  கேளம்பாக்கம் சாத்தான்குப்பத்தில் ஆஷிரம வளாத்திற்குள் பிராமணர் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதை தட்டி கேட்ட கவிதா என்பவரை சிலர் பின்தொடர்வதால், என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், தயவுசெய்து தன்னை அவர்களிடம் இருந்து காப்பாற்றும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மேலும், சிவசங்கர் பாபாவின் வழக்கை நடத்துவது உள்ளிட்ட அனைத்து விதமான பொறுப்புகளையும் மீனாட்சி ராகவன் என்பவர் கவனித்து வருவதாகவும், அவர்தான் பாபாவை வெளியில் வராமல் தடுத்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகியான  கே.டி.ராகவன்  இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளதாகவும், அவர் மூலம் 3 கோடி ரூபாய் வரை கைமாறி உள்ளதாகும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
KT Raghavan | கே.டி.ராகவனை விசாரிக்க வேண்டும்.. கொந்தளிக்கும் சிவசங்கர் பாபா ஆதரவாளர்கள்..
 
இந்நிலையில், பெண் ஒருவருடன் வீடியோ காலில் மிகவும் ஆபாசமாக கே.டி.ராகவன் நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், கே.டி.ராகவன் தனது மாநில பொதுச்செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காதல் திருமணம் செய்த சகோதரி.. ஆத்திரத்தில் மச்சானை கத்தியால் குத்திய தம்பி!
காதல் திருமணம் செய்த சகோதரி.. ஆத்திரத்தில் மச்சானை கத்தியால் குத்திய தம்பி!
கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
Embed widget