மேலும் அறிய

இராமேஸ்வரம் ; கடல் அட்டை ஏன் கடத்தப்படுகிறது? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?

கடல் அட்டை பிடிப்பது கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும். எனவே இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபட்டு கடல் வளத்தை அழிக்க வேண்டாம்” என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.

கடல் அட்டை கடலின் தூய்மையை உறுதி செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது. மண்ணுக்கு எப்படி  மண் புழு உதவுகிறதோ, கடலின் வளத்தை பெருக்க 'கடல் அட்டை' உதவுகிறது. இதனால் தான் பல நாடுகள் இதனை பிடிக்க தடை விதித்துள்ளது. கடல் அட்டை அழியக்கூடிய விளிம்பிலோ, அரியவகை உயிரினம் என்கிற பட்டியலிலோ இல்லை. இதன் குணங்கள் பல்வேறு சுற்றுச்சூழல் பயன்களை தருவதே காரணம்.  ஆனால் சீனா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இவற்றைப் பிடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் ; கடல் அட்டை ஏன் கடத்தப்படுகிறது? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?
 
இலங்கையில் கடல் அட்டையை அதிகப்படுத்த பண்ணை முறையில்  அந்நாட்டு அரசு மானியம் முதற்கொண்டு வழங்குகிறது. ஆனால், ஆரோக்கியமான கடல் அட்டைகள் கிடைப்பது கடலில் மட்டுமே. அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைப் பகுதிகளுக்கு அதிகமான எண்ணிக்கையில் அவை கடத்தப்பட்டு வருகின்றன. இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை வழியாக பல்வேறு இடங்களுக்கு கடல் அட்டையை கடத்தலாம் என்பதால் இராமேஸ்வரம் பகுதியையே கடல் அட்டை கொள்ளைக்கு ஹாட் ஸ்பார்ட்டாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் முழு ஊரடங்கிற்கு பின் இராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து டன் கணக்கில் கடல் அட்டை பிடிபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இராமேஸ்வரம் ; கடல் அட்டை ஏன் கடத்தப்படுகிறது? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?
 
இந்நிலையில் இது குறித்து இராமநாதபுரம் மண்டபம் பகுதி வனச் சரகர் வெங்கடேஷ் நம்மிடம், “கடல் அட்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்துவதால் அதிகளவு பணம் கிடைக்கும் என சட்ட விரோதமாக கடத்தப்படுகிறது. வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையில் சிறையில் அடைக்கப்படுவார்கள். தற்போதைய முழு ஊரடங்கின் போது மீன் பிடி தடைக்காலம் என்பதால் கடல் அட்டை திருட்டு இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் மண்டபம் பகுதியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ கடல் அட்டைகள் பிடிபட்டுள்ளது. அதே போல்  சுமார் 8 லட்சம் மதிப்புள்ள மூன்று வல்லத்தை பிடித்துள்ளோம். கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாக்கும் நோக்கில் மாதம், மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்துவருகிறோம். கடல் அட்டை உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களுக்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

இராமேஸ்வரம் ; கடல் அட்டை ஏன் கடத்தப்படுகிறது? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?
 
”கடல் அட்டை திருட்டு பல இடங்களில் அதிகரித்துள்ளது. ஆசிய பணக்கார ஹோட்டல்களில் இந்த உணவு வழங்கப்படுகிறது. மேலும் கடல் அட்டையில் உள்ள ’காண்டிரைட்டின் சல்பேட்’  கீழ்வாத நோய், நுரையில் உள்ளிட்ட பல்வேறு பிரச்னையை சரி செய்வதாக நம்ப வைக்கப்படுவதால் இதற்கு டிமாண்ட் எப்போதும் இருக்கிறது. கடல் கடந்து தான் விற்பனை செய்யவேண்டும் என்பதால் தான் அதிகளவு கடல் அட்டைகள் பிடிக்கப்படுகிறது. கடத்தப்படும் கடல் அட்டைகள் பிடிபட்டால் கடத்தல்காரர்களுக்கு அதிகளவு தண்டனை வழங்கப்படும். கடல் அட்டை பிடிப்பது கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும். எனவே இது போன்ற சட்ட விரோதத்தில் ஈடுபட்டு கடல் வளத்தை அழிக்க வேண்டாம்” என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
செஞ்சி அருகே கோர விபத்து: கிணற்றுக்குள் கார் பாய்ந்து சென்னையைச் சேர்ந்த 4 பேர் பரிதாப உயிரிழப்பு!
செஞ்சி அருகே கோர விபத்து: கிணற்றுக்குள் கார் பாய்ந்து சென்னையைச் சேர்ந்த 4 பேர் பரிதாப உயிரிழப்பு!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
Congress Vs TVK: திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
DMK Congress Alliance:28 தொகுதி தான் லாஸ்ட்.! ”இருக்கிறதுன்னா இருங்க... இல்லைனா..” காங்கிரசை கதறவிட்ட திமுக
28 தொகுதி தான் லாஸ்ட்.! ”இருக்கிறதுன்னா இருங்க... இல்லைனா..” காங்கிரசை கதறவிட்ட திமுக
Iran Earthquake: அமெரிக்கா தான் இப்படி பண்ணுதுன்னா, இயற்கையுமா.? போருக்கு மத்தியில் நிலநடுக்கத்தால் குலுங்கிய ஈரான்
அமெரிக்கா தான் இப்படி பண்ணுதுன்னா, இயற்கையுமா.? போருக்கு மத்தியில் நிலநடுக்கத்தால் குலுங்கிய ஈரான்
iPhone 17e Review: இந்தியாவிற்கு வந்த ஐபோன் 17இ; அது எப்படி இருக்கிறது.? வாங்கலாமா, வேண்டாமா.? அலசுவோம் வாங்க
இந்தியாவிற்கு வந்த ஐபோன் 17இ; அது எப்படி இருக்கிறது.? வாங்கலாமா, வேண்டாமா.? அலசுவோம் வாங்க
Embed widget