மேலும் அறிய

இராமேஸ்வரம் ; கடல் அட்டை ஏன் கடத்தப்படுகிறது? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?

கடல் அட்டை பிடிப்பது கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும். எனவே இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபட்டு கடல் வளத்தை அழிக்க வேண்டாம்” என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.

கடல் அட்டை கடலின் தூய்மையை உறுதி செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது. மண்ணுக்கு எப்படி  மண் புழு உதவுகிறதோ, கடலின் வளத்தை பெருக்க 'கடல் அட்டை' உதவுகிறது. இதனால் தான் பல நாடுகள் இதனை பிடிக்க தடை விதித்துள்ளது. கடல் அட்டை அழியக்கூடிய விளிம்பிலோ, அரியவகை உயிரினம் என்கிற பட்டியலிலோ இல்லை. இதன் குணங்கள் பல்வேறு சுற்றுச்சூழல் பயன்களை தருவதே காரணம்.  ஆனால் சீனா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இவற்றைப் பிடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் ; கடல் அட்டை ஏன் கடத்தப்படுகிறது? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?
 
இலங்கையில் கடல் அட்டையை அதிகப்படுத்த பண்ணை முறையில்  அந்நாட்டு அரசு மானியம் முதற்கொண்டு வழங்குகிறது. ஆனால், ஆரோக்கியமான கடல் அட்டைகள் கிடைப்பது கடலில் மட்டுமே. அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைப் பகுதிகளுக்கு அதிகமான எண்ணிக்கையில் அவை கடத்தப்பட்டு வருகின்றன. இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை வழியாக பல்வேறு இடங்களுக்கு கடல் அட்டையை கடத்தலாம் என்பதால் இராமேஸ்வரம் பகுதியையே கடல் அட்டை கொள்ளைக்கு ஹாட் ஸ்பார்ட்டாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் முழு ஊரடங்கிற்கு பின் இராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து டன் கணக்கில் கடல் அட்டை பிடிபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இராமேஸ்வரம் ; கடல் அட்டை ஏன் கடத்தப்படுகிறது? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?
 
இந்நிலையில் இது குறித்து இராமநாதபுரம் மண்டபம் பகுதி வனச் சரகர் வெங்கடேஷ் நம்மிடம், “கடல் அட்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்துவதால் அதிகளவு பணம் கிடைக்கும் என சட்ட விரோதமாக கடத்தப்படுகிறது. வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையில் சிறையில் அடைக்கப்படுவார்கள். தற்போதைய முழு ஊரடங்கின் போது மீன் பிடி தடைக்காலம் என்பதால் கடல் அட்டை திருட்டு இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் மண்டபம் பகுதியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ கடல் அட்டைகள் பிடிபட்டுள்ளது. அதே போல்  சுமார் 8 லட்சம் மதிப்புள்ள மூன்று வல்லத்தை பிடித்துள்ளோம். கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாக்கும் நோக்கில் மாதம், மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்துவருகிறோம். கடல் அட்டை உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களுக்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

இராமேஸ்வரம் ; கடல் அட்டை ஏன் கடத்தப்படுகிறது? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?
 
”கடல் அட்டை திருட்டு பல இடங்களில் அதிகரித்துள்ளது. ஆசிய பணக்கார ஹோட்டல்களில் இந்த உணவு வழங்கப்படுகிறது. மேலும் கடல் அட்டையில் உள்ள ’காண்டிரைட்டின் சல்பேட்’  கீழ்வாத நோய், நுரையில் உள்ளிட்ட பல்வேறு பிரச்னையை சரி செய்வதாக நம்ப வைக்கப்படுவதால் இதற்கு டிமாண்ட் எப்போதும் இருக்கிறது. கடல் கடந்து தான் விற்பனை செய்யவேண்டும் என்பதால் தான் அதிகளவு கடல் அட்டைகள் பிடிக்கப்படுகிறது. கடத்தப்படும் கடல் அட்டைகள் பிடிபட்டால் கடத்தல்காரர்களுக்கு அதிகளவு தண்டனை வழங்கப்படும். கடல் அட்டை பிடிப்பது கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும். எனவே இது போன்ற சட்ட விரோதத்தில் ஈடுபட்டு கடல் வளத்தை அழிக்க வேண்டாம்” என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget