மேலும் அறிய

கரூர்: பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து! எமனாக வந்த டாரஸ் லாரி! கோர விபத்தில் ஒருவர் பலி

மண்மங்கலத்தில் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றுலா பேருந்தில் திருச்செந்தூரில் இருந்து சேலம் செல்வதற்காக பயணிகளுடன் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் பைபாஸ் ரோட்டில் மண்மங்கலம் நான்கு ரோடு அருகே வந்த போது மேம்பாலம் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மண் திட்டு மீது பஸ் மோதி நின்றது.

கரூர் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

 


கரூர்: பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து! எமனாக வந்த டாரஸ் லாரி! கோர விபத்தில் ஒருவர் பலி

சுற்றுலா பேருந்து ஒன்று திருச்செந்தூரில் இருந்து சேலத்திற்கு பயணிகளுடன் கிளம்பியுள்ளது. இந்த பேருந்தை ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜா என்ற ஓட்டுநர் ஓட்டியுள்ளார். நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக மண்மங்கலம் நான்கு ரோடு அருகே பேருந்து வந்த போது, மேம்பாலம் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மண் திட்டு மீது பஸ் மோதி நின்றது. சிறு காயங்களுடன் பயணிகள் மருத்துவமனையில் முதலுதவி எடுத்துக்கொண்டு மற்றொரு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

 


கரூர்: பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து! எமனாக வந்த டாரஸ் லாரி! கோர விபத்தில் ஒருவர் பலி

இந்த நிலையில் இன்று அதிகாலை 6:00 மணியளவில் பழுதான பேருந்தில் ஆயில் மாற்றுவதற்காக  நாமக்கல், பாண்டமங்கலத்தை சேர்ந்த நித்தியானந்தம் மற்றும் மோகனூரை சேர்ந்த பெரியசாமி ஆகியோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் பின்னால் வந்த டாரஸ் லாரி பேருந்து மீது மோதியதில் பேருந்து மண் திட்டுமீது ஏறி நின்றதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நித்யானந்தம் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயரிழந்தார். பெரியசாமிக்கு கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பேருந்தின் ஓட்டுநர் ராஜா உள்ளே இருந்ததால் உயிர்தப்பினார்.

 

 


கரூர்: பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து! எமனாக வந்த டாரஸ் லாரி! கோர விபத்தில் ஒருவர் பலி

மேலும் டாரஸ் லாரியை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்டம், சீயோன் மலையை சேர்ந்த லாரி டிரைவர் ஜெயபாண்டி சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வாங்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வயலூர் பஞ்சாயத்து,  நடுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் விவசாயி சீனிவாசன் வயது 65. இவரது பேரன் தேவராஜ் மகன் திருமுருகன் வயது 15 திருமுருகன் பஞ்சப்பட்டி அருகே உள்ள பி. உடையாபட்டி உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் சுமார் 7 மணி அளவில் ஸ்விட்ச் பாக்ஸில் இருந்த மின்சாரம் தாக்கியதில் திருமுருகன் துடிதுடித்தார். பேரன் துடிதுடித்ததைப் பார்த்த தாத்தா சீனிவாசன் பேரன் திருமுருகனை  காப்பாற்ற சென்று திருமுருகனை மீட்ட போது  அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

 


கரூர்: பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து! எமனாக வந்த டாரஸ் லாரி! கோர விபத்தில் ஒருவர் பலி


சம்பவம் அறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.  அவர்களை பரிசோதித்த மருத்துவர் அவர்கள்  ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதனை அடுத்து பிரேத பரிசோதனை செய்வதற்காக உடல்கள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.  சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget