மேலும் அறிய

புகாரளித்த சிறுமி.. ஜாமினில் வந்து வன்கொடுமை செய்த கொடூரன்

பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நபர் மீண்டும் அதே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களாக இந்தியாவில் சிறுமியர்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்திலும் இந்தச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு கோர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே சிறுமியை 3ஆவது முறையாக ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கர்தானா பகுதியில் ஒரு நபர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜாமீனில் வெளியே வந்த அந்த நபர் கடந்த திங்கட்கிழமை தன் மீது புகார் அளித்திருந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளார். மேலும் அந்தச் சிறுமியை 3ஆவது முறையாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கர்தானா காவல்துறை ஆய்வாளர், "அந்த நபர் சிறுமியை பாக்ரூ என்ற இடத்திலுள்ள ஒரு கட்டிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்தச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் அச்சிறுமியை அந்த இடத்திலிருந்து மீட்டு பெற்றோர்களிடம் திரும்பி அனுப்பியுள்ளோம். அந்த நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார். 


புகாரளித்த சிறுமி.. ஜாமினில் வந்து வன்கொடுமை செய்த கொடூரன்

ஏற்கெனவே இதே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நபர் மீது 2 பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளது. அவற்றில் ஒரு வழக்கில் காவல்துறையின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கில் இருந்து தான் அவர் ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜாமீனில் வெளியே வந்த மீண்டும் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் மற்றொரு நபரும் பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து பெண் ஒருவரை கொலை செய்துள்ளார். ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் நேத்ராம் என்ற நபர் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை கடந்த சனிக்கிழமை வெட்டி கொலை செய்துள்ளார். நேத்ராம் என்ற நபர் அப்பெண்ணை ஒராண்டிற்கு முன்பாக பாலியன் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கில் சிறையில் இருந்த அவர் கடந்த வாரம் ஜாமீன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று வழக்கை திரும்ப பெறுமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. அதற்கு அப்பெண் மறுத்ததால், அவரை வீட்டிலியே வைத்து கொலை செய்துவிட்டு நேத்ராம் தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய நபரை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர். ஒரே வாரத்தில் இரண்டு நபர்கள் ஜாமீனில் வெளியே வந்து குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன்..! மீண்டும் சிறையில் அடைத்தது போலீஸ்..! என்ன நடந்தது?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை! கதறிய மாணவர்கள் - சேலத்தில் பயங்கரம்!
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை! கதறிய மாணவர்கள் - சேலத்தில் பயங்கரம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
குடும்ப தகராறு வன்முறையாக மாறியது: கோவையில் கணவர் கைது...
குடும்ப தகராறு வன்முறையாக மாறியது: கோவையில் கணவர் கைது...
வன்முறையாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளியான ஷாக்கிங் சி.சி.டி.வி வீடியோ..
வன்முறையாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளியான ஷாக்கிங் சி.சி.டி.வி வீடியோ..
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பெயர் மாற்றிப் பாருங்கள்.. சும்மா இருக்க மாட்டோம்!" - தட்சிண பிரதேச விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விடுத்த பகீர் எச்சரிக்கை!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Trump Hormuz Blockade: இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
"டிவிகேவுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு போடுங்க" பெரம்பூரில் TVKவினர் பிரச்சாரம்- குழப்பத்தில் மக்கள்!
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
Embed widget