மேலும் அறிய

புகாரளித்த சிறுமி.. ஜாமினில் வந்து வன்கொடுமை செய்த கொடூரன்

பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நபர் மீண்டும் அதே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களாக இந்தியாவில் சிறுமியர்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்திலும் இந்தச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு கோர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே சிறுமியை 3ஆவது முறையாக ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கர்தானா பகுதியில் ஒரு நபர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜாமீனில் வெளியே வந்த அந்த நபர் கடந்த திங்கட்கிழமை தன் மீது புகார் அளித்திருந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளார். மேலும் அந்தச் சிறுமியை 3ஆவது முறையாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கர்தானா காவல்துறை ஆய்வாளர், "அந்த நபர் சிறுமியை பாக்ரூ என்ற இடத்திலுள்ள ஒரு கட்டிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்தச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் அச்சிறுமியை அந்த இடத்திலிருந்து மீட்டு பெற்றோர்களிடம் திரும்பி அனுப்பியுள்ளோம். அந்த நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார். 


புகாரளித்த சிறுமி.. ஜாமினில் வந்து வன்கொடுமை செய்த கொடூரன்

ஏற்கெனவே இதே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நபர் மீது 2 பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளது. அவற்றில் ஒரு வழக்கில் காவல்துறையின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கில் இருந்து தான் அவர் ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜாமீனில் வெளியே வந்த மீண்டும் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் மற்றொரு நபரும் பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து பெண் ஒருவரை கொலை செய்துள்ளார். ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் நேத்ராம் என்ற நபர் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை கடந்த சனிக்கிழமை வெட்டி கொலை செய்துள்ளார். நேத்ராம் என்ற நபர் அப்பெண்ணை ஒராண்டிற்கு முன்பாக பாலியன் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கில் சிறையில் இருந்த அவர் கடந்த வாரம் ஜாமீன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று வழக்கை திரும்ப பெறுமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. அதற்கு அப்பெண் மறுத்ததால், அவரை வீட்டிலியே வைத்து கொலை செய்துவிட்டு நேத்ராம் தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய நபரை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர். ஒரே வாரத்தில் இரண்டு நபர்கள் ஜாமீனில் வெளியே வந்து குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன்..! மீண்டும் சிறையில் அடைத்தது போலீஸ்..! என்ன நடந்தது?

தலைப்பு செய்திகள்

மதுரை: மகள் திருமணத்திற்காக சேமித்த 22 பவுன் நகை திருட்டு; தாய் கதறல்!
மதுரை: மகள் திருமணத்திற்காக சேமித்த 22 பவுன் நகை திருட்டு; தாய் கதறல்!
பெற்ற குழந்தையை விற்ற தாய்; ஆம்பூரில் அரங்கேறிய கொடூரம்; பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்
பெற்ற குழந்தையை விற்ற தாய்; ஆம்பூரில் அரங்கேறிய கொடூரம்; பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்
Child Abuse: திருவள்ளூர் 3 வயது குழந்தை ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
திருவள்ளூர் 3 வயது குழந்தை ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
" உன்னை சந்திக்கனும் " நண்பர் தானே என நம்பி வந்த பெண் காவலருக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்

வீடியோ

Tirupathur Women | ஆபாசமாக பேசிய நபர்! தர்மஅடி கொடுத்த பெண்கள்! பெட்ரோல் ஊற்றிய பகீர் சம்பவம்
Farmer Slaps Officer |அரசு அலுவலகத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த விவசாயி!”எவ்ளோ நாள் WAIT பண்றது”
Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது
Power Cut Reason : ”2024, 25ல் கூட இதே நிலைமை தான்..”நள்ளிரவில் தொடரும் மின் தடை! போட்டுடைத்த CITU
Iran US War: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்! குறையும் பெட்ரோல் டீசல் விலை?ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மாதம் ரூ.2.500 மகளிர் உரிமை தொகை எப்போது.? தேதி குறிக்கும் சிஎம் விஜய் - வெளியாகப்போகுது அசத்தல் அறிவிப்பு
மாதம் ரூ.2.500 மகளிர் உரிமை தொகை எப்போது.? தேதி குறிக்கும் சிஎம் விஜய் - வெளியாகப்போகுது அசத்தல் அறிவிப்பு
NEET Re-Exam: ராணுவ ஹெலிகாப்டர், CRPF பாதுகாப்பு, டெலிகிராமிற்கு தடை..! நீட் தேர்வு, அச்சுறுத்தும் கெடுபிடிகள்
ராணுவ ஹெலிகாப்டர், CRPF பாதுகாப்பு, டெலிகிராமிற்கு தடை..! நீட் தேர்வு, அச்சுறுத்தும் கெடுபிடிகள்
Crop Loan Waiver: மாற்றி அறிவித்த CM விஜய்..! கூட்டுறவு வங்கியில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி - விவசாயிகள் ஹாப்பி
மாற்றி அறிவித்த CM விஜய்..! கூட்டுறவு வங்கியில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி - விவசாயிகள் ஹாப்பி
சவாலும், சவடாலும் விட்ட சிஎம் விஜய்... silent mode-இல் இருந்து எப்போ வெளியே வருவார்.? வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
சவாலும், சவடாலும் விட்ட சிஎம் விஜய்... silent mode-இல் இருந்து எப்போ வெளியே வருவார்.? வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
DMK Stalin: கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
Waiver of farmers crop loans : விவசாயிகளை வஞ்சிக்கும் TVK அரசு.! பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்க- சீறும் இபிஎஸ்
விவசாயிகளை வஞ்சிக்கும் TVK அரசு.! பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்க- சீறும் இபிஎஸ்
இலவச பட்டா வாங்க சூப்பர் சான்ஸ்.! காஞ்சிபுரம், திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட்- தேதி அறிவித்த அரசு
பட்டா வாங்க சூப்பர் சான்ஸ்.! காஞ்சிபுரம், திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட்- தேதி அறிவித்த அரசு
Honda SUV Facelift: ப்ராண்டின் ஒத்த எஸ்யுவியை அப்க்ரேட் செய்யும் ஹோண்டா - ஹைப்ரிட்டில் எஸ்யுவி கிங்கை அடிக்குமா?
ப்ராண்டின் ஒத்த எஸ்யுவியை அப்க்ரேட் செய்யும் ஹோண்டா - ஹைப்ரிட்டில் SUV கிங்கை அடிக்குமா?
Embed widget