மேலும் அறிய

புகாரளித்த சிறுமி.. ஜாமினில் வந்து வன்கொடுமை செய்த கொடூரன்

பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நபர் மீண்டும் அதே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களாக இந்தியாவில் சிறுமியர்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்திலும் இந்தச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு கோர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே சிறுமியை 3ஆவது முறையாக ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கர்தானா பகுதியில் ஒரு நபர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜாமீனில் வெளியே வந்த அந்த நபர் கடந்த திங்கட்கிழமை தன் மீது புகார் அளித்திருந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளார். மேலும் அந்தச் சிறுமியை 3ஆவது முறையாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கர்தானா காவல்துறை ஆய்வாளர், "அந்த நபர் சிறுமியை பாக்ரூ என்ற இடத்திலுள்ள ஒரு கட்டிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்தச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் அச்சிறுமியை அந்த இடத்திலிருந்து மீட்டு பெற்றோர்களிடம் திரும்பி அனுப்பியுள்ளோம். அந்த நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார். 


புகாரளித்த சிறுமி.. ஜாமினில் வந்து வன்கொடுமை செய்த கொடூரன்

ஏற்கெனவே இதே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நபர் மீது 2 பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளது. அவற்றில் ஒரு வழக்கில் காவல்துறையின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கில் இருந்து தான் அவர் ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜாமீனில் வெளியே வந்த மீண்டும் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் மற்றொரு நபரும் பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து பெண் ஒருவரை கொலை செய்துள்ளார். ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் நேத்ராம் என்ற நபர் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை கடந்த சனிக்கிழமை வெட்டி கொலை செய்துள்ளார். நேத்ராம் என்ற நபர் அப்பெண்ணை ஒராண்டிற்கு முன்பாக பாலியன் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கில் சிறையில் இருந்த அவர் கடந்த வாரம் ஜாமீன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று வழக்கை திரும்ப பெறுமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. அதற்கு அப்பெண் மறுத்ததால், அவரை வீட்டிலியே வைத்து கொலை செய்துவிட்டு நேத்ராம் தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய நபரை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர். ஒரே வாரத்தில் இரண்டு நபர்கள் ஜாமீனில் வெளியே வந்து குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன்..! மீண்டும் சிறையில் அடைத்தது போலீஸ்..! என்ன நடந்தது?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!
முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Embed widget