மேலும் அறிய

சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன்..! மீண்டும் சிறையில் அடைத்தது போலீஸ்..! என்ன நடந்தது?

திருச்சியில் கார் உதிரிபாக விற்பனையாளரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சாட்டை துரைமுருகனுக்கு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. ஆனால், காவல்துறையினர் அவரை வேறு வழக்கில் சிறையில் அடைத்தனர்.

யூ டியூப் தளத்தில் தமிழ் நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் துரைமுருகன். இவர் சாட்டை என்ற பெயரில் தமிழில் யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த நிலையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை அவதூறாக பேசியதாக திருச்சியை சேர்ந்த வினோத் என்பவரை வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிடச் செய்தார். இந்த சம்பவத்தின்போது, சாட்டை துரைமுருகன் மற்றும் அவருடன் வந்த நாம் தமிழர் நிர்வாகி வினோத், மகிழன், திருச்சி சரவணன் ஆகியோர்  தன்னை மிரட்டியதாக கார் உற்பத்தி நிறுவனர் கடை உரிமையாளர் வினோத் திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் சாட்டை துரைமுருகன் உள்பட நால்வரையும் கைது செய்தனர். அவர்கள் நான்கு பேரும் முசிறி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.


சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன்..! மீண்டும் சிறையில் அடைத்தது போலீஸ்..! என்ன நடந்தது?

இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேரும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் நீதிபதி ஜாமீன் வழங்கினார். தி.மு.க. வழக்கறிஞர் அணி வழக்கறிஞர் கரூர் போலீசில் சாட்டை துரைமுருகன் மீது ஏற்கனவே புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டு இருந்தது. அந்த மனுவில், சாட்டை துரைமுருகன் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்புபடுத்த அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து, இந்த புகார் மனுவின் அடிப்படையில் அவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர். அவரை போலீசார் கைது செய்து மீண்டும் லால்குடி போலீசில் கைது செய்தனர். சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். பின்னர், கட்சி கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்ட காரணத்தால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். சாட்டை துரைமுருகன் தனது யூ டியூப் சேனலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியையும், பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகை குஷ்புவையும் இணைத்து அவதூறாக வீடியோ வெளியிட்டார் என்பதும், அதற்கு தி.மு.க.வினர் தங்களது கண்டனங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், சாட்டை துரைமுருகன் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அது பெரும் சர்ச்சைக்குள்ளாகியதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sujatha Vijayakumar vs Jayam Ravi |’’நான் பணப்பேயா ?பொய் சொல்லாதீங்க மாப்பிள்ளை’’கொந்தளித்த மாமியார்OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது
காலையிலேயே கொடூரம்.. அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து! பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்
காலையிலேயே கொடூரம்.. அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து! பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்
CSK Dhoni: அவசரப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள், கடுப்பான தோனி எடுத்த முடிவு - ருதுராஜ் காலி? ஏலத்தில் ஜடேஜா?
CSK Dhoni: அவசரப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள், கடுப்பான தோனி எடுத்த முடிவு - ருதுராஜ் காலி? ஏலத்தில் ஜடேஜா?
RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget