மேலும் அறிய

புதுச்சேரி: வாணரப்பேட்டை இரட்டை கொலை வழக்கில் வெடிகுண்டு கொடுத்து உதவியதாக 5 பேர் கைது

புதுவை வாணரப்பேட்டை இரட்டை கொலை வழக்கில் வெடிகுண்டு கொடுத்து உதவியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்

புதுச்சேரி வாணரப்பேட்டை இரட்டை கொலை வழக்கில் வெடிகுண்டு கொடுத்து உதவியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாம் ரவி (33). இவர் கடந்த  அக்டோபர் 24ஆம் தேதி தனது நண்பர் அந்தோணி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், பாம் ரவி, அந்தோணியை வழிமறித்து நாட்டு வெடிகுண்டுகள் வீசி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.

கல்லறையில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்... புதுச்சேரி ரவுடி கொலையில் திடுக் பின்னணி!

புதுவையில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை தொடர்பாக முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காலாப்பட்டு ஜெயிலில் உள்ள வினோத், தீனு ஆகியோர் தூண்டுதலின் பேரில்   கூலிப்படையினர் உதவியுடன் அவரது கூட்டாளிகள் கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இரட்டை கொலைக்கு உதவியாக இருந்தவர்கள், கூலிப்படையினர் தங்க இடம் கொடுத்தவர்கள் என வினோத்தின் தாய் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பிரவீன், அருண் ஆகிய 2 பேரும் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

கல்லறையில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்... புதுச்சேரி ரவுடி கொலையில் திடுக் பின்னணி!

இதனை தொடர்ந்து முதலியார்பேட்டை போலீசார் அவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து கொடுத்தது லாஸ்பேட்டை நெருப்புக்குழியை சேர்ந்த தேவராஜ் (26), மடுவுபேட் வெங்கடேஷ்(24), புதுப்பேட் சதீஷ்குமார் (28), லாஸ்பேட்டை திவாகர் (28), சாரம் லட்சுமிநகர் மித்துன் குமார் (28) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 5 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.


புதுச்சேரி: வாணரப்பேட்டை இரட்டை கொலை வழக்கில் வெடிகுண்டு கொடுத்து உதவியதாக 5 பேர் கைது

தொடர்ந்து அவர்களது வீட்டில் ஏதாவது ஆயுதங்கள், வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தினர். இதில் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும்  நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக மேலும் 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget