மேலும் அறிய

புதுச்சேரி: தவளக்குப்பம் அருகே முன்விரோதத்தில் விவசாயி கழுத்தை அறுத்து கொலை

தவளக்குப்பம் அருகே முன்விரோதத்தில் விவசாயி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு .

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையம் உடையார் தெருவை சேர்ந்தவர் அனந்தராமன் என்கிற முருகன் (51), விவசாயியான இவருக்கு தனபாக்கியம் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். அனந்தராமனுக்கு அருகில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கரும்பு பயிர் செய்யப்பட்டு வருகிறது. அனந்தராமன் தினமும் காலையில் விவசாய நிலத்துக்கு சென்று பணிகளை கவனிப்பார். மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு செல்லும் அவர், மீண்டும் விவசாய நிலத்துக்கு வந்துவிட்டு மாலையில் வீடு திரும்புவார். அதன்படி நேற்று காலையில் விவசாய நிலத்துக்கு சென்ற அனந்தராமன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். பிறகு மதியம் 3 மணியளவில் மீண்டும் விவசாய நிலத்துக்கு சென்று, வேலைகளை கவனித்தார்.

அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அனந்தராமனிடம் தகராறு செய்து அனந்தராமனை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் வெட்டுக்காயம் அடைந்த அனந்தராமன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். அனந்தராமன் இறந்ததை உறுதி செய்து கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். 

புதுச்சேரி: தவளக்குப்பம் அருகே முன்விரோதத்தில் விவசாயி கழுத்தை அறுத்து கொலை

இந்த நிலையில் அனந்தராமன் பிணமாக கிடப்பதை பார்த்த இருளர்குடியிருப்பு மக்கள் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தெரிவித்தனர். உடனே போலீஸ் சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், ஜிந்தா கோதண்டராமன், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அனந்தராமன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அனந்தராமன் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் மார்பில் 3 கத்திக்குத்து காயங்கள் இருந்தன. உடலை பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்சுக்காக போலீசார் காத்திருந்தனர்.

இதற்கிடையில் அனந்தராமன் படுகொலை செய்யப்பட்ட தகவல் அந்த பகுதியில் பரவியது. இதை அறிந்த அவரது உறவினர்கள், பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள், இந்த பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகம் உள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என்று போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் முன்விரோதம் காரணமாக சிறுவர்கள் கஞ்சா புகைத்துக்கொண்டு அனந்தராமனை கொலை செய்துள்ளனர். அவர்களை கைது செய்யும் வரை உடலை எடுத்துச்செல்ல விடமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி: தவளக்குப்பம் அருகே முன்விரோதத்தில் விவசாயி கழுத்தை அறுத்து கொலை

 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்பிறகு அனந்தராமன் உடலை ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த படுகொலை தொடர்பாக தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனந்தராமனுக்கும், அவரது எதிர்வீட்டை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று காலை இருகுடும்பத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் அனந்தராமன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
Skoda Kodiaq RS: பட்டையை கிளப்பும் டர்போ என்ஜின்; ஸ்கோடா கோடியாக் RS முன்பதிவு தொடக்கம்; விலை, அம்சங்கள் என்ன.?
பட்டையை கிளப்பும் டர்போ என்ஜின்; ஸ்கோடா கோடியாக் RS முன்பதிவு தொடக்கம்; விலை, அம்சங்கள் என்ன.?
NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
CNG Cars Discount: CNG கார் வாங்க பிளான் பண்றீங்களா.? அப்போ உடனே கிளம்புங்க.! செம ஆஃபர்; எந்தெந்த காருக்கு எவ்ளோ.?
CNG கார் வாங்க பிளான் பண்றீங்களா.? அப்போ உடனே கிளம்புங்க.! செம ஆஃபர்; எந்தெந்த காருக்கு எவ்ளோ.?
ஒரே சார்ஜில் 100 கி.மீட்டர் முதல் 170 கி.மீட்டர் மைலேஜ்! Pure EV இ ஸ்கூட்டர்கள், இ பைக் லிஸ்ட் இதான்
ஒரே சார்ஜில் 100 கி.மீட்டர் முதல் 170 கி.மீட்டர் மைலேஜ்! Pure EV இ ஸ்கூட்டர்கள், இ பைக் லிஸ்ட் இதான்
Netanyahu Vs Trump: “அவர் சொன்ன பேச்ச நான் கேப்பேனா.?“ ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நெதன்யாகு.! என்ன சொன்னார்னு பாருங்க
“அவர் சொன்ன பேச்ச நான் கேப்பேனா.?“ ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நெதன்யாகு.! என்ன சொன்னார்னு பாருங்க
Embed widget