மேலும் அறிய

புதுச்சேரி: தவளக்குப்பம் அருகே முன்விரோதத்தில் விவசாயி கழுத்தை அறுத்து கொலை

தவளக்குப்பம் அருகே முன்விரோதத்தில் விவசாயி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு .

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையம் உடையார் தெருவை சேர்ந்தவர் அனந்தராமன் என்கிற முருகன் (51), விவசாயியான இவருக்கு தனபாக்கியம் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். அனந்தராமனுக்கு அருகில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கரும்பு பயிர் செய்யப்பட்டு வருகிறது. அனந்தராமன் தினமும் காலையில் விவசாய நிலத்துக்கு சென்று பணிகளை கவனிப்பார். மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு செல்லும் அவர், மீண்டும் விவசாய நிலத்துக்கு வந்துவிட்டு மாலையில் வீடு திரும்புவார். அதன்படி நேற்று காலையில் விவசாய நிலத்துக்கு சென்ற அனந்தராமன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். பிறகு மதியம் 3 மணியளவில் மீண்டும் விவசாய நிலத்துக்கு சென்று, வேலைகளை கவனித்தார்.

அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அனந்தராமனிடம் தகராறு செய்து அனந்தராமனை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் வெட்டுக்காயம் அடைந்த அனந்தராமன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். அனந்தராமன் இறந்ததை உறுதி செய்து கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். 

புதுச்சேரி: தவளக்குப்பம் அருகே முன்விரோதத்தில் விவசாயி கழுத்தை அறுத்து கொலை

இந்த நிலையில் அனந்தராமன் பிணமாக கிடப்பதை பார்த்த இருளர்குடியிருப்பு மக்கள் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தெரிவித்தனர். உடனே போலீஸ் சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், ஜிந்தா கோதண்டராமன், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அனந்தராமன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அனந்தராமன் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் மார்பில் 3 கத்திக்குத்து காயங்கள் இருந்தன. உடலை பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்சுக்காக போலீசார் காத்திருந்தனர்.

இதற்கிடையில் அனந்தராமன் படுகொலை செய்யப்பட்ட தகவல் அந்த பகுதியில் பரவியது. இதை அறிந்த அவரது உறவினர்கள், பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள், இந்த பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகம் உள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என்று போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் முன்விரோதம் காரணமாக சிறுவர்கள் கஞ்சா புகைத்துக்கொண்டு அனந்தராமனை கொலை செய்துள்ளனர். அவர்களை கைது செய்யும் வரை உடலை எடுத்துச்செல்ல விடமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி: தவளக்குப்பம் அருகே முன்விரோதத்தில் விவசாயி கழுத்தை அறுத்து கொலை

 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்பிறகு அனந்தராமன் உடலை ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த படுகொலை தொடர்பாக தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனந்தராமனுக்கும், அவரது எதிர்வீட்டை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று காலை இருகுடும்பத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் அனந்தராமன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Tamilnadu Roundup: அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Tamilnadu Roundup: அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
RSS ”சட்டம்லா ஒன்னும் வேண்டாம், இந்தியா இந்து நாடு தான்” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகவன் பகவத் பேச்சு
RSS ”சட்டம்லா ஒன்னும் வேண்டாம், இந்தியா இந்து நாடு தான்” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகவன் பகவத் பேச்சு
Cyber Crime: ஆன்லைன் சைபர் குற்றங்கள் - சிபிசிஐடி நடத்திய ஹேக்கத்தான் - யுக்தி 2.0வில் நடந்தது என்ன?
Cyber Crime: ஆன்லைன் சைபர் குற்றங்கள் - சிபிசிஐடி நடத்திய ஹேக்கத்தான் - யுக்தி 2.0வில் நடந்தது என்ன?
நாளை முதல் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு
நாளை முதல் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு
Train Ticket Price: டிச.26 முதல்.. ரயில் கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு - கிலோ மீட்டருக்கு எவ்வளவு? ரூ.600 கோடி லாபம்?
Train Ticket Price: டிச.26 முதல்.. ரயில் கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு - கிலோ மீட்டருக்கு எவ்வளவு? ரூ.600 கோடி லாபம்?
Embed widget