மேலும் அறிய

கண்ணீர்க் கடலில் வானகிரி: விசைப்படகில் சென்ற 14 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு! – படகு பழுதான நிலையிலும் நேர்ந்த சோகம்

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் உட்பட மொத்தம் 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி கைது செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் உட்பட மொத்தம் 14 தமிழக மீனவர்கள், படகு பழுதான நிலையில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாகக் குற்றம்சாட்டி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகுடன் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விரைந்து மீட்க வலியுறுத்தி, அவர்களது குடும்பத்தினர் கடற்கரையில் கண்ணீருடன் காத்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, மீனவர்கள் மற்றும் அவர்களது வாழ்வாதாரமான படகையும் மீட்டுத் தர வேண்டும் என மீனவக் குடும்பத்தினர் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடுக்கடலில் நேர்ந்த துயரம்

பூம்புகார், வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த நவம்பர் 3-ஆம் தேதி அன்று 14 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இதில், வானகிரியைச் சேர்ந்த ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத், அகிலன், ஆகாஷ், ராபின், ராஜ்குமார் ஆகிய 12 மீனவர்களும், தரங்கம்பாடி கோவிந்து மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி ஆகிய இரு மீனவர்களும் அடங்குவர்.

மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பழுதானது. இதனால், அவர்கள் படகை ஜெகதாப்பட்டினம் பகுதிக்குக் கொண்டு சென்று, அங்கிருந்த உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் பழுது நீக்கும் பணிகளை மேற்கொண்டனர். சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, கடந்த சனிக்கிழமை (நவம்பர் 8) அன்று மீண்டும் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குள் புறப்பட்டனர்.

துரதிர்ஷ்டவசமாக, கடலுக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே படகு மீண்டும் பழுதாகி நடுக்கடலில் தத்தளிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில், திசைமாறி படகு சென்று கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகு மற்றும் அதில் இருந்த 14 மீனவர்களையும் நேற்று (நவம்பர் 9) சிறைபிடித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தற்போது இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்ணீரில் குடும்பங்கள்

மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததிலிருந்து, வானகிரி மீனவ கிராமத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். படகு பழுதாகி ஆபத்தான நிலையில் இருந்தபோதுகூட, அதனை மீட்டு வர முடியாமல், இப்போது அந்நிய நாட்டுக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள செய்தி, அவர்களை நிலைகுலையச் செய்துள்ளது.

விசைப்படகு உரிமையாளரின் மனைவி பூங்கோதை பேசுகையில், “எங்களுக்கு இதுதான் ஒரே வாழ்வாதாரம். கஷ்டப்பட்டு உழைத்து மீன்பிடித் தொழில் செய்து வருகிறோம். படகு பழுதடைந்து கஷ்டப்பட்டு சரிசெய்து அனுப்பிய சில மணி நேரத்திலேயே எல்லாக் குடும்பங்களையும் பிரித்துவிட்டனர். படகையும், என் கணவர் உட்பட 14 பேரையும் உடனே மீட்டுத் தர வேண்டும்” எனக் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.

கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் என்பவரின் மனைவி அஞ்சானாவும், “எங்கள் உறவுகள் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக திரும்பி வர வேண்டும். குழந்தைகளைப் பிரிந்து தவிக்கும் எங்களுக்கு அரசுதான் உதவ வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசுக்கு மீனவ சமுதாயத்தின் கோரிக்கை

மீனவர் கைது சம்பவங்கள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாமல், அவர்களது குடும்பங்களின் நிம்மதியையும் சீர்குலைத்து வருகிறது. தொடர்ந்து கைது செய்யப்படும் படகுகள் சேதமடைந்து வருவதால், மீனவர்களின் கடன் சுமை அதிகரித்து வருகிறது.

எனவே, தற்போது கைது செய்யப்பட்டுள்ள 14 மீனவர்களையும், படகையும் எந்தவித தாமதமுமின்றி உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு, இலங்கை அதிகாரிகளுடன் வலுவான பேச்சுகளை நடத்த வேண்டும் என மீனவ நல சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், தமிழக முதல்வர் உடனடியாக இதில் தனி கவனம் செலுத்தி, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவலை உறுதி செய்துள்ளதோடு, அவர்களை மீட்கும் பணியில் சட்டபூர்வமான வழிமுறைகள் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களின் பெயர் மற்றும் குடும்ப விவரங்களைப் பெற்றுக்கொண்டு, தூதரக அளவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Embed widget