மேலும் அறிய

Kumbakonam: கும்பகோணம் ஆணவக்கொலை; திட்டம்போட்டு தங்கையை கொன்றது ஏன்..? அண்ணன் நடுங்கவைக்கும் வாக்குமூலம்..

கும்பகோணம்  நர்ஸ் ஆணவகொலை வழக்கில் கைதான சக்திவேல், ரஞ்சித் ஆகியோர் ஏன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டோம் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர். 

கும்பகோணம்  நர்ஸ் ஆணவகொலை வழக்கில் கைதான அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது உறவினர் ரஞ்சித் ஆகியோர் ஏன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டோம் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர். 

அந்த வாக்குமூலத்தில் சரண்யாவை காதலித்து வந்த ரஞ்சித் கூறும் போது “ நானும் சரண்யாவும் உறவினர்கள். நாங்கள் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பேசி பழகி வந்தோம். இதனால் நான் சரண்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். இது குறித்து அவரது அண்ணன் சக்திவேலிடம் கேட்டபோது அவரும் சம்மதம் தெரிவித்தார்.

குறுக்கே வந்த மோகன்

சரண்யாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த போதுதான், குறுக்கே மோகன் வந்து சரண்யாவை காதலித்தார். இதனால் என்னால் சரண்யாவை திருமணம் செய்து கொள்ள முடியாமல் போகுமோ என்று பயந்தேன். நான் நினைத்தபடியே  சரண்யா மோகனை திருமணம் செய்து கொண்டார். அதன் காரணமாக ஆத்திரத்தின் உச்சியில் இருந்த நான், அவரது அண்ணன் சக்திவேலின் மனதை மாற்றி புதுமணத்தம்பதியை தீர்த்து கட்ட சம்மதிக்க வைத்தேன். பின்னர் இருவரும் சேர்ந்து அவர்களை தீர்த்துக்கட்டினோம்” என்று கூறியுள்ளார். 

என் பேச்சை கேட்கவில்லை 

சரண்யாவின் அண்ணன் சக்திவேல் கூறும்போது, “ எனது தங்கையும் ரஞ்சித்தும் காதலித்து வந்தனர். ஆனால் சென்னை சென்ற எனது தங்கை அங்கு வேறு ஒருவரை காதலித்து வந்தது தெரிய வந்தது. உடனே அதனை கண்டித்து ரஞ்சித்தை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினேன். ஆனால் சரண்யா எனது பேச்சைக் கேட்காமல் எங்களுக்கு தெரியாமல் மோகனை திருமணம் செய்து கொண்டார். இதனால் எங்களுக்கு ஆத்திரம் அதிகமானது. இதனால் நானும், ரஞ்சித்தும் அவர்களை தந்திரமாக விருந்துக்கு வரவழைத்து தீர்த்துக்கட்டினோம்” என்று கூறியுள்ளார். 

என்ன நடந்தது?

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி அய்யாகோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சரண்யா (24). நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மோகன் (31).  இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.


Kumbakonam: கும்பகோணம் ஆணவக்கொலை; திட்டம்போட்டு தங்கையை கொன்றது ஏன்..? அண்ணன் நடுங்கவைக்கும் வாக்குமூலம்..

வேலை பார்த்து வந்தபோது காதலில் விழுந்தனர். எத்தனை முகமூடிகள் போட்டாலும் காதலை மறைக்க இயலுமா. அதுபோல் இருவரின் காதலையும் சரண்யாவின் வீட்டார் ஏற்க மறுத்துள்ளனர். அதுமட்டுமா உறவினர் ஒருவருக்கு, சரண்யாவை திருமணம் செய்து கொடுக்க பெற்றோர் திட்டமிட்டு வந்தனர். 


Kumbakonam: கும்பகோணம் ஆணவக்கொலை; திட்டம்போட்டு தங்கையை கொன்றது ஏன்..? அண்ணன் நடுங்கவைக்கும் வாக்குமூலம்..

என்ன வில்லத்தனம் என்று நினைத்த சரண்யா இதுகுறித்து மோகனிடம் தெரிவிக்க, இந்த ஜோடியும் பெற்றோரை எதிர்த்து கடந்த 5 தினங்களுக்கு முன்பு இருவரும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் 

இத்தகவலை சரண்யா தனது பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள்  அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் முடிந்த நிலையில் சரண்யாவுக்கு அவரது அண்ணன் சக்திவேல் மணமக்களுக்கு விருந்து வைக்க வேண்டும் எனக் கூறி வரவழைத்தார். அண்ணன் சப்போர்ட் கிடைத்து விட்டது என்று நம்பி சரண்யாவும், மோகனும் நேற்று சென்னையிலிருந்து சோழபுரம் துலுக்கவேலிக்கு வந்தனர்.

அண்ணனின் வெறிச்செயல் 

பின்னர் மாலை வீட்டுக்கு வந்தபோது, அங்கு வந்த சரண்யாவின் அண்ணன் சக்திவேல்(31) மற்றும் சக்திவேலின் உறவினர் தேவனாஞ்சேரியைச் சேர்ந்த ரஞ்சித் இருவரும் சேர்ந்து வீட்டு வாசலிலேயே புதுமணத் தம்பதி சரண்யா- மோகனை சரமாரியாக அரிவாளால் வெட்டி தள்ளினர். கொலை வெறி தாண்டவமாடியதில் இளம் திருமண ஜோடிகள் அதே இடத்தில் பரிதாபமாக உயிரை விட்டனர்.

விருந்துக்கு வாங்க என்று அழைத்து வெறித்தனமாக வெட்டித்தள்ளிய அண்ணனின் கொடூர முகம் முன்பே தெரிந்திருந்தால் சரண்யா வராமல் இருந்து இருப்பாரோ என்று பொதுமக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். தாலியின் மஞ்சள் வாசனை கூட போகாத நிலையில் அண்ணனின் கொடூர குணத்தால் உயிரை இழந்துள்ளார் சரண்யா. கூடவே நெஞ்சம் நிரம்பி காதலித்து கரம் பிடித்த கணவர் மோகனின் உயிரும் பறி போய் உள்ளது.

தகவலறிந்த சோழபுரம் போலீஸாருக்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இருவரது உடலையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சோழபுரம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து சக்திவேல் மற்றும் ரஞ்சித்தை தேடி வந்தனர். இந்நிலையில் தப்பிச் சென்ற சக்திவேல் மற்றும் ரஞ்சித் இருவரையும் திருவிடைமருதூர் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி கைது செய்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் ; SI - அதிரடி சஸ்பெண்ட் ! டிஐஜி அதிரடி உத்தரவு
புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் ; SI - அதிரடி சஸ்பெண்ட் ! டிஐஜி அதிரடி உத்தரவு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Rate May 25th: வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ஏறுமுகத்திற்கு மாறிய தங்கம் விலை; இப்போது எவ்வளவு தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ஏறுமுகத்திற்கு மாறிய தங்கம் விலை; இப்போது எவ்வளவு தெரியுமா.?
Chennai Corporation: ஆட்சி மாறியதும் ஆப்சென்டான கவுன்சிலர்கள்..! முடங்கிய பணிகள்? கலக்கத்தில் சென்னை வாசிகள்
ஆட்சி மாறியதும் ஆப்சென்டான கவுன்சிலர்கள்..! முடங்கிய பணிகள்? கலக்கத்தில் சென்னை வாசிகள்
17 வயது சிறுவனை வெட்டிக் கொன்ற கும்பல்..! கொண்டாட்டங்கள் போதும் CM சார் - அண்ணாமலை ஆவேசம்
17 வயது சிறுவனை வெட்டிக் கொன்ற கும்பல்..! கொண்டாட்டங்கள் போதும் CM சார் - அண்ணாமலை ஆவேசம்
ADMK: நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
Petrol Diesel Price: 2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
TN Weather Update: வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
Embed widget