மேலும் அறிய

திருவாரூர் அருகே மென் பொறியாளர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை!

சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். கொரோனா தொற்று காரணத்தினால் வீட்டில் இருந்து கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வருகிறார்.

திருவாரூர் அருகே மென் பொறியாளர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை. குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது கொள்ளையர்கள் கைவரிசை.
 
திருவாரூர் மாவட்டம் குவளைக்கால் பகுதியில் திருவாரூர் - மயிலாடுதுறை முக்கிய சாலையில் பாலமுருகன் என்பவர் தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். கொரோனா தொற்று காரணத்தினால் வீட்டில் இருந்து கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கிருத்திகா என்ற மனைவியும் ஹர்ஷிதா என்ற 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
 
இந்த நிலையில் உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு ஊட்டி அருகே உள்ள கிராமத்திற்குச் சென்று விட்டு ஊட்டிக்குச் சென்று சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்காக நேற்று இரவு குடும்பத்துடன் பாலமுருகன் புறப்பட்டு சென்றார். இதனை அறிந்த கொள்ளையர்கள் பாலமுருகனின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த பீரோவை உடைத்து பொருட்களை திருடிச் சென்றனர். பாலமுருகன் வீட்டில் இல்லாத காரணத்தால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது அறிந்து காவல்துறையினருக்கும் பாலமுருகனுக்கும் தகவல் அளித்தனர். இதனையடுத்து வந்த நன்னிலம் காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோ தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர் குழுக்களுக்காக காத்திருந்தனர்.

திருவாரூர் அருகே மென் பொறியாளர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை!
 
அதன் பின்னர் பாலமுருகனிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு காவல்துறையினர் கேட்டபோது, வீட்டில் 50 சவரன் தங்க நகையும் இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் பீரோவில் வைத்திருந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து காவல் துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் பாலமுருகன் ஊட்டியில் இருந்து கிளம்பி தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த 50 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் திருடு போயுள்ளது தெரியவந்தது.

திருவாரூர் அருகே மென் பொறியாளர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை!
இந்த சம்பவம் தொடர்பாக கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வீட்டின் உரிமையாளர் வீட்டில் இல்லாத காரணத்தால் காணாமல்போன பொருட்கள் தொடர்பாக நீண்ட நேரம் காத்திருந்து விசாரணையை காவல்துறையினர் தொடங்கினர். திருவாரூர் -  மயிலாடுதுறை முக்கிய சாலையில் உள்ள வீட்டில் நடைபெற்றுள்ள இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக அளவில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை கிராம பகுதிகளில் அதிக படுத்த வேண்டும் என கிராம புற மக்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump On Iran: ”ஆயுதங்களை போடுங்க, இல்லைன்னா சாவுங்க” - ஈரானின் ஆபத்தை அழிப்போம் - ட்ரம்ப் வார்னிங்
Trump On Iran: ”ஆயுதங்களை போடுங்க, இல்லைன்னா சாவுங்க” - ஈரானின் ஆபத்தை அழிப்போம் - ட்ரம்ப் வார்னிங்
US Israel Attacks Iran: பேசிட்டே இருப்பன்னு நினைச்சீங்களா..! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா, இஸ்ரேல்
US Israel Attacks Iran: பேசிட்டே இருப்பன்னு நினைச்சீங்களா..! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா, இஸ்ரேல்
SDPI Join DMK Alliance : திடீர் ட்விஸ்ட்.! திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி.! SDPI -க்கு அழைப்பு- எத்தனை தொகுதி.?
திடீர் ட்விஸ்ட்.! திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி.! SDPI -க்கு அழைப்பு- எத்தனை தொகுதி.?
Rajya Sabha elections Candidate : யார் அந்த 6 பேர்.! திமுக, அதிமுகவில் ராஜ்யசபா சீட்டை கைப்பற்றப்போவது யார்.? வெளியான சீக்ரெட் லிஸ்ட்
யார் அந்த 6 பேர்.! திமுக, அதிமுகவில் ராஜ்யசபா சீட்டை கைப்பற்றப்போவது யார்.? வெளியான சீக்ரெட் லிஸ்ட்
Top 10 News Headlines: திமுக கூட்டணியில் புதிய கட்சி, மோட்டரோலா சலுகை, விமான விபத்து - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திமுக கூட்டணியில் புதிய கட்சி, மோட்டரோலா சலுகை, விமான விபத்து - 11 மணி வரை இன்று
Modi visit to Tamil Nadu: நெருங்கும் தேர்தல்..! தமிழகத்தில் இன்று கால் பதிக்கும் மோடி.. யாரை சந்திக்கிறார்.? எங்கெல்லாம் செல்கிறார்.?
நெருங்கும் தேர்தல்..! தமிழகத்தில் இன்று கால் பதிக்கும் மோடி.. யாரை சந்திக்கிறார்.? எங்கெல்லாம் செல்கிறார்.?
TN Roundup: திமுக - காங்., பேச்சுவார்த்தை, எகிறிய தங்கம், ஸ்டாலின் கட்டளை - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: திமுக - காங்., பேச்சுவார்த்தை, எகிறிய தங்கம், ஸ்டாலின் கட்டளை - தமிழகத்தில் இதுவரை
Vadapalani to Poonamallee metro train: ரெடி ஸ்டார்ட்... வடபழனி டூ பூந்தமல்லி மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி கிடைச்சாச்சு.! ரயில் சேவை எப்போ தொடங்குது.?
ரெடி ஸ்டார்ட்... வடபழனி டூ பூந்தமல்லி மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி கிடைச்சாச்சு.! ரயில் சேவை எப்போ தொடங்குது.?
Embed widget