மேலும் அறிய

சந்தேகத்தால் மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற நபர்.. கள்ளக்குறிச்சியில் ஒரு கொடூர கதை

குழந்தைகளின் கூச்சலை கேட்டு வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினர்  தற்கொலைக்கு முயன்ற லோகநாதனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் திருக்கோவிலூர் அருகில் இருக்கிறது முதலூர் கிராமம். அந்த கிராமத்தில் லோகநாதன் என்பவர் வசிக்கிறார். திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன இவருக்கும் இவரது மனைவிக்கும் இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருக்கின்றனர்.

மூன்று பிள்ளைகளும் பாட்டி வீட்டில் தங்கி பள்ளியில் படித்துவருகின்றனர். லோகநாதனும் அவரது மனைவியும் சென்னை அருகே செங்கல் சேம்பரில் தங்கி பணி செய்தனர்.

பொங்கல் பண்டிகைக்காக ஒரு வாரத்திற்கு மும்பு சொந்த ஊரான முதலூருக்கு இரண்டு பேரும் சென்றிருந்தனர், அப்போது மதுவில் பால்டாயிலை கலந்து குடித்த லோகநாதன் தற்கொலைக்கு  முயன்றார். அந்த சமயத்தில் லோகநாதனின் குழந்தைகள் தங்களது அப்பாவின் தற்கொலை முயற்சியை கண்டு கூச்சலிட்டனர். 

குழந்தைகளின் கூச்சலை கேட்டு வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினர் தற்கொலைக்கு முயன்ற லோகநாதனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்தத் தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் லோகநாதன் தனது மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக சந்தேகப்பட்டிருந்தார் என்பது தெரியவந்தது. மேலும், அந்த சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதற்கிடையே, லோகநாதன் தனது மனைவியை மற்ற ஆண்களுடன் தொடர்புபடுத்தி பேசுவதை  வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால், மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் பெயரை குறிப்பிட்டு கடிதம் எழுதிவைத்து கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

இந்த சமயத்தில் மனைவியை மாடிக்கு அழைத்து சென்ற லோகநாதன் அங்கு வைத்து அவரை கொலை செய்துவிட்டார். கொலை செய்து சடலத்தை மாடியில் மனைவியின் உடலை விட்டுவிட்டு  கீழே வந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். கடிதத்தில் எழுதப்பட்டிருந்த நபரை காவல் துறையினர் விசாரித்தபோது தனக்கும் லோகநாதனின் மனைவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கூறியதாக தெரிகிறது. சந்தேக பார்வையால் ஒரு உயிரை எடுத்துவிட்டு தன்னை நம்பி வந்த உயிர்களை அனாதையாக விட்டிருக்கிறார் லோகநாதன்.

மன அழுத்தம் ஏற்பட்டாலே தற்கொலை எண்ணம் உண்டானாலோ அதனை மாற்ற கீழ்காணும் எண்களை அழைக்கவும். மாநில உதவி மையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: கடைசி வாரத்துல சூர மொக்கை.. பாஸு.. என்ன பிக்பாஸ் இது? கலாய்த்து தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்

காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு சாராயம் கடத்திய 3 பேர் கைது - 5,100 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget