மேலும் அறிய

சந்தேகத்தால் மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற நபர்.. கள்ளக்குறிச்சியில் ஒரு கொடூர கதை

குழந்தைகளின் கூச்சலை கேட்டு வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினர்  தற்கொலைக்கு முயன்ற லோகநாதனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் திருக்கோவிலூர் அருகில் இருக்கிறது முதலூர் கிராமம். அந்த கிராமத்தில் லோகநாதன் என்பவர் வசிக்கிறார். திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன இவருக்கும் இவரது மனைவிக்கும் இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருக்கின்றனர்.

மூன்று பிள்ளைகளும் பாட்டி வீட்டில் தங்கி பள்ளியில் படித்துவருகின்றனர். லோகநாதனும் அவரது மனைவியும் சென்னை அருகே செங்கல் சேம்பரில் தங்கி பணி செய்தனர்.

பொங்கல் பண்டிகைக்காக ஒரு வாரத்திற்கு மும்பு சொந்த ஊரான முதலூருக்கு இரண்டு பேரும் சென்றிருந்தனர், அப்போது மதுவில் பால்டாயிலை கலந்து குடித்த லோகநாதன் தற்கொலைக்கு  முயன்றார். அந்த சமயத்தில் லோகநாதனின் குழந்தைகள் தங்களது அப்பாவின் தற்கொலை முயற்சியை கண்டு கூச்சலிட்டனர். 

குழந்தைகளின் கூச்சலை கேட்டு வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினர் தற்கொலைக்கு முயன்ற லோகநாதனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்தத் தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் லோகநாதன் தனது மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக சந்தேகப்பட்டிருந்தார் என்பது தெரியவந்தது. மேலும், அந்த சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதற்கிடையே, லோகநாதன் தனது மனைவியை மற்ற ஆண்களுடன் தொடர்புபடுத்தி பேசுவதை  வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால், மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் பெயரை குறிப்பிட்டு கடிதம் எழுதிவைத்து கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

இந்த சமயத்தில் மனைவியை மாடிக்கு அழைத்து சென்ற லோகநாதன் அங்கு வைத்து அவரை கொலை செய்துவிட்டார். கொலை செய்து சடலத்தை மாடியில் மனைவியின் உடலை விட்டுவிட்டு  கீழே வந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். கடிதத்தில் எழுதப்பட்டிருந்த நபரை காவல் துறையினர் விசாரித்தபோது தனக்கும் லோகநாதனின் மனைவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கூறியதாக தெரிகிறது. சந்தேக பார்வையால் ஒரு உயிரை எடுத்துவிட்டு தன்னை நம்பி வந்த உயிர்களை அனாதையாக விட்டிருக்கிறார் லோகநாதன்.

மன அழுத்தம் ஏற்பட்டாலே தற்கொலை எண்ணம் உண்டானாலோ அதனை மாற்ற கீழ்காணும் எண்களை அழைக்கவும். மாநில உதவி மையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: கடைசி வாரத்துல சூர மொக்கை.. பாஸு.. என்ன பிக்பாஸ் இது? கலாய்த்து தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்

காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு சாராயம் கடத்திய 3 பேர் கைது - 5,100 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

தலைப்பு செய்திகள்

" அவள் எனக்கு மட்டும் தான் " திருமணமான பெண்ணுக்காக பெயிண்டர் அடித்துக் கொலை
" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்
" புதிய போட்டோ ஷூட் " என அழைத்து கொலை !! இன்ஸ்டாகிராம் காதலால் நடந்த கொடூரம்
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget