மேலும் அறிய

மதுரை : ”பணம் இல்ல, பள்ளிக்கூட புத்தகம்தான் இருந்துச்சு” : 10 லட்சம் அபேஸ் செய்த பெண் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி ?

’நீ கொடுத்த பையில் பணம் இல்லை, பள்ளிக்கூட புத்தகம்தான் இருந்துச்சு” என வசந்தி பொய்களை அடுக்கியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் பேக் தயாரிக்கும் தொழில் அதிகளவு நடைபெற்று வருகிறது. இளையான்குடியில் பேக் தைக்கும் தொழில் செய்துவரும் டெய்லர் அர்ஷத் தனது தொழிலை மேம்படுத்த 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பாண்டி, கார்த்தி உள்ளிட்ட நபர்கள் பணத்தை இரட்டிப்பாக மாற்றித் தருகிறோம் என கூறியுள்ளனர். இதனால் இளையான்குடியில் இருந்து பணத்துடன் அர்ஷத் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதிக்கு வந்துள்ளார். அர்ஷத் 10 லட்சம் பணத்துடன் வரும் தகவல் நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்திக்கு தெரிந்துள்ளது.

மதுரை : ”பணம் இல்ல, பள்ளிக்கூட புத்தகம்தான் இருந்துச்சு” : 10 லட்சம் அபேஸ் செய்த பெண் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி ?
அர்ஷத் வந்த பின் பணத்தை பறித்துக்கொண்டு விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அர்ஷத்தை மனம் நோகச் செய்துள்ளார். வசந்தியிடம் அர்ஷத் பணத்தை கேட்டதற்கு வசந்தி தரவில்லை. ’நீ கொடுத்த பையில் பணம் இல்லை பள்ளிக்கூட புத்தகம் தான் இருந்துச்சு” என வசந்தி பொய்களை அடுக்கியுள்ளார். மேலும் என்னிடம் பணம், பணம் என்று தொல்லை செய்தால் கஞ்சா கேசில் உள்ள வச்சுடுவேன் என மிரட்டியுள்ளார். பணத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்தில் அர்ஷத் வந்ததால் மேலிட புகாருக்கு செல்லமாட்டார் என இன்ஸ்பெக்டர் வசந்தி நினைத்துள்ளார்.
 
ஆனால் அர்ஷத், மதுரை காவல்துறை எஸ்.பியிடம்  புகாரை அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ஏ.டி.எஸ்.பி சந்திரமவுலி விசாரணை மேற்கொண்டுள்ளார். விசாரணையில் இன்ஸ்பெக்டர்  வசந்தி அர்ஷத்திடம் பணத்தை பறித்தது உறுதியானது. இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வசந்தி நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.

மதுரை : ”பணம் இல்ல, பள்ளிக்கூட புத்தகம்தான் இருந்துச்சு” : 10 லட்சம் அபேஸ் செய்த பெண் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி ?
மேலும் இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ”மதுரையில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறேன் என பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது. சட்ட விரோத செயல் என்பதால் பாதிக்கப்படும் நபர்கள் கூட புகார் அளிப்பதில்லை அதனால் குற்றவாளிகள் தப்பிக்கின்றனர். இன்ஸ்பெக்டர் வசந்தி தொடர்ந்து பல்வே குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். அவரை தொடர்ந்து விசாரணை நடத்தும்போது பல்வேறு குற்றச் சம்பவம் வெளிவரும். வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவல்துறையினர் நடந்துகொள்வது. ஒட்டுமொத்த காவல்துறையினருக்கு கெட்ட பெயரை உருவாக்குகிறது. குற்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறையிருக்கு கடுமையான தண்டனை வழங்கும்போதுதான் குற்றங்கள் குறையும் என தெரிவித்தார்.

மதுரை : ”பணம் இல்ல, பள்ளிக்கூட புத்தகம்தான் இருந்துச்சு” : 10 லட்சம் அபேஸ் செய்த பெண் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி ?
 
மதுரை  செக்கானூரணி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அனிதா எந்தவொரு புகார் வந்தாலும் புகார்தாரரிடம் பணம் பெற்றுக்கொண்டு, அதில் சம்பந்தமில்லாதவர்களை வழக்கில் சேர்ப்பது, பின்பு அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பது, கொலை வழக்குகளில் முக்கியக் குற்றவாளிகளிடம் பெரும் தொகை பெற்றுக்கொண்டு தலைமறைவு என்று சொல்லி அவர்களைச் சுதந்திரமாக நடமாடவிடுவது என பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நிலையில், கடந்த நவம்பர் மாதம் லஞ்சம் பெற்ற வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரைக் கைதுசெய்திருக்கிறார்கள். இந்நிலையில் நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
Top 10 News Headlines: திமுக பரப்புரை, அதிமுக பொதுக்குழு, தவெக கூட்டம், எகிறிய வெள்ளி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திமுக பரப்புரை, அதிமுக பொதுக்குழு, தவெக கூட்டம், எகிறிய வெள்ளி - 11 மணி வரை இன்று
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
Embed widget