மேலும் அறிய

மதுரை : ”பணம் இல்ல, பள்ளிக்கூட புத்தகம்தான் இருந்துச்சு” : 10 லட்சம் அபேஸ் செய்த பெண் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி ?

’நீ கொடுத்த பையில் பணம் இல்லை, பள்ளிக்கூட புத்தகம்தான் இருந்துச்சு” என வசந்தி பொய்களை அடுக்கியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் பேக் தயாரிக்கும் தொழில் அதிகளவு நடைபெற்று வருகிறது. இளையான்குடியில் பேக் தைக்கும் தொழில் செய்துவரும் டெய்லர் அர்ஷத் தனது தொழிலை மேம்படுத்த 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பாண்டி, கார்த்தி உள்ளிட்ட நபர்கள் பணத்தை இரட்டிப்பாக மாற்றித் தருகிறோம் என கூறியுள்ளனர். இதனால் இளையான்குடியில் இருந்து பணத்துடன் அர்ஷத் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதிக்கு வந்துள்ளார். அர்ஷத் 10 லட்சம் பணத்துடன் வரும் தகவல் நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்திக்கு தெரிந்துள்ளது.

மதுரை : ”பணம் இல்ல, பள்ளிக்கூட புத்தகம்தான் இருந்துச்சு” : 10 லட்சம் அபேஸ் செய்த பெண் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி ?
அர்ஷத் வந்த பின் பணத்தை பறித்துக்கொண்டு விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அர்ஷத்தை மனம் நோகச் செய்துள்ளார். வசந்தியிடம் அர்ஷத் பணத்தை கேட்டதற்கு வசந்தி தரவில்லை. ’நீ கொடுத்த பையில் பணம் இல்லை பள்ளிக்கூட புத்தகம் தான் இருந்துச்சு” என வசந்தி பொய்களை அடுக்கியுள்ளார். மேலும் என்னிடம் பணம், பணம் என்று தொல்லை செய்தால் கஞ்சா கேசில் உள்ள வச்சுடுவேன் என மிரட்டியுள்ளார். பணத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்தில் அர்ஷத் வந்ததால் மேலிட புகாருக்கு செல்லமாட்டார் என இன்ஸ்பெக்டர் வசந்தி நினைத்துள்ளார்.
 
ஆனால் அர்ஷத், மதுரை காவல்துறை எஸ்.பியிடம்  புகாரை அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ஏ.டி.எஸ்.பி சந்திரமவுலி விசாரணை மேற்கொண்டுள்ளார். விசாரணையில் இன்ஸ்பெக்டர்  வசந்தி அர்ஷத்திடம் பணத்தை பறித்தது உறுதியானது. இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வசந்தி நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.

மதுரை : ”பணம் இல்ல, பள்ளிக்கூட புத்தகம்தான் இருந்துச்சு” : 10 லட்சம் அபேஸ் செய்த பெண் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி ?
மேலும் இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ”மதுரையில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறேன் என பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது. சட்ட விரோத செயல் என்பதால் பாதிக்கப்படும் நபர்கள் கூட புகார் அளிப்பதில்லை அதனால் குற்றவாளிகள் தப்பிக்கின்றனர். இன்ஸ்பெக்டர் வசந்தி தொடர்ந்து பல்வே குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். அவரை தொடர்ந்து விசாரணை நடத்தும்போது பல்வேறு குற்றச் சம்பவம் வெளிவரும். வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவல்துறையினர் நடந்துகொள்வது. ஒட்டுமொத்த காவல்துறையினருக்கு கெட்ட பெயரை உருவாக்குகிறது. குற்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறையிருக்கு கடுமையான தண்டனை வழங்கும்போதுதான் குற்றங்கள் குறையும் என தெரிவித்தார்.

மதுரை : ”பணம் இல்ல, பள்ளிக்கூட புத்தகம்தான் இருந்துச்சு” : 10 லட்சம் அபேஸ் செய்த பெண் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி ?
 
மதுரை  செக்கானூரணி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அனிதா எந்தவொரு புகார் வந்தாலும் புகார்தாரரிடம் பணம் பெற்றுக்கொண்டு, அதில் சம்பந்தமில்லாதவர்களை வழக்கில் சேர்ப்பது, பின்பு அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பது, கொலை வழக்குகளில் முக்கியக் குற்றவாளிகளிடம் பெரும் தொகை பெற்றுக்கொண்டு தலைமறைவு என்று சொல்லி அவர்களைச் சுதந்திரமாக நடமாடவிடுவது என பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நிலையில், கடந்த நவம்பர் மாதம் லஞ்சம் பெற்ற வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரைக் கைதுசெய்திருக்கிறார்கள். இந்நிலையில் நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
மயிலாடுதுறை: தொடர் கஞ்சா விற்பனை - குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது!
மயிலாடுதுறை: தொடர் கஞ்சா விற்பனை - குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது!
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
Parthiban: கோல்மூட்டி விடுகிறாரா பார்த்திபன்? அஜித்தை புகழ்ந்து விஜய் மீது அட்டாக்!
Parthiban: கோல்மூட்டி விடுகிறாரா பார்த்திபன்? அஜித்தை புகழ்ந்து விஜய் மீது அட்டாக்!
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள்.. தமிழக அரசின் அசத்தல் முயற்சி.. இதோ இணையதளம்!
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள்.. தமிழக அரசின் அசத்தல் முயற்சி.. இதோ இணையதளம்!
நீலகிரி, ஈரோடு மக்களுக்கு இனிப்புச் செய்தி... ரூ.3,685 கோடி எரிவாயு திட்டத்தால் வளர்ச்சி காத்திருக்கிறது!
நீலகிரி, ஈரோடு மக்களுக்கு இனிப்புச் செய்தி... ரூ.3,685 கோடி எரிவாயு திட்டத்தால் வளர்ச்சி காத்திருக்கிறது!
Embed widget