மேலும் அறிய

மகளுக்கு பாலியல் தொல்லை; தந்தை போக்சோ வழக்கில் கைது

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த வெளிச்சை கிராமத்தில் பெற்ற மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த வெளிச்சை கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி பிரகாசம் இவர் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். மதுவிற்கு அடிமையாகிய ஜோதிப் பிரகாசம் அவ்வப்போது மனைவியை அடித்து துன்புறுத்தியதால் தன் தாய் வீட்டில் பிள்ளைகளுடன் தஞ்சமடைந்தனர்.
 
கடந்த சில ஆண்டுகளாகவே ஜோதி பிரகாசத்தின் மனைவி அவருடைய தாய் வீட்டிலே தொடர்ந்து வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிச்சை கிராமத்தில் மிகவும் நெருங்கிய உறவினர்  இறுதிச் சடங்கிற்கு கலந்துகொண்ட வந்தபொழுது அப்போது உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி இங்கேயே குடும்பம் நடத்துமாறு கேட்டுள்ளனர் .உறவினர்களின் சமாதானத்தை அடுத்து மீண்டும் வெளிச்சை கிராமத்துக்கு வந்து தன் கணவன் வீட்டில் தங்கினர். இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது மூத்த மகளிடம் தந்தை ஜோதிப் பிரகாசம் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். 

மகளுக்கு பாலியல் தொல்லை; தந்தை போக்சோ வழக்கில் கைது
மூத்த மகன் பலமுறை தடுத்தும்  ஜோதி பிரகாசம் பாலியல் தொந்தரவு தொடர்ந்து அளித்ததால்  சத்தம் போட்டுள்ளார் . இதனை கேட்டு அனைவரும் எழுந்தனர் . தற்காப்புக்காக  பாதிக்கப்பட்ட மகன் தந்தையை அடித்துள்ளார். மேலும் அவருடைய அண்ணனும் தந்தையை  தாக்கி உள்ளார்.குடும்பத்தினர்கள் அனைவரும் எழுந்து தாக்கிய காரணத்தினால் அங்கிருந்து தப்பிய ஜோதி பிரகாசம் காலை கேளம்பாக்கம் காவல் நிலையம் சென்று சொத்துக்காக தனது மகன் ஜெகதீசன் மற்றும் மகள்  ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக புகார் கொடுத்துள்ளார். தந்தை தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை வெளியே எப்படி கூறுவது என்று தெரியாமல் குடும்பத்தினர் தவிர்த்து வந்து உள்ளனர்.

மகளுக்கு பாலியல் தொல்லை; தந்தை போக்சோ வழக்கில் கைது
இந்நிலையில் ஜோதிப் பிரகாசம் அளித்த புகாரின் காவல்துறையினர் வீட்டிற்கு வந்த விசாரித்த போது தான், ஜோதிப் பிரகாசம் தான் தப்பிப்பதற்காக திட்டம் போட்டு முன் கூட்டியே புகார் அளித்தது தெரியவந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து தந்தை அளித்த புகாரின் பேரில் ஜெகதீசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கேளம்பாக்கம் காவல் நிலையத்துக்கு சென்ற ஜோதி பிரகாசம் குடும்பத்தினர் தன் தந்தை பாலியல் கொடுமை செய்ததால் தான் நாங்கள் விரட்டினோம் என கூறி புகார் அளித்தனர்.

மகளுக்கு பாலியல் தொல்லை; தந்தை போக்சோ வழக்கில் கைது
காவல் நிலையத்தில் அவர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரை பெற்றுக் கொள்ளாததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செல்பேசியில் பேசிய பிறகு   காவல்நிலையத்தில் புகார் பெற்றுக் கொள்ளப்பட்டது . தனது தந்தை ஜோதி பிரகாசம் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்த மகள் உயர் நீதிமன்ற நீதிபதி,  முதலமைச்சர் தனிப்பிரிவு , காவல்துறை தலைவர் என அனைவருக்கும் புகார் மனு அனுப்பி வைத்திருந்தார் . 
 
 இதனைத் தொடர்ந்து மகாபலிபுரத்தில் ஆய்வுக்காக வந்த செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் வருகை தந்த போது அவரிடம் நேரடியாக புகாரை அளித்தார்.  இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு வழக்குப்பதிவு செய்யுமாறு காவலர்களுக்கு உத்தரவிட்டார் .  இதனைத் தொடர்ந்து ஜோதிப் பிரகாசம் மீது கேளம்பாக்கம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

பழைய குழம்பு வைத்ததால் ஆத்திரம் !! மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவனால் பரபரப்பு
பழைய குழம்பு வைத்ததால் ஆத்திரம் !! மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவனால் பரபரப்பு
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் கொடூரம் !! மகள் - மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தை
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் கொடூரம் !! மகள் - மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தை
பூமிக்கு அடியில் 1.5 கி.மீ தூரம் ரகசியத் துளை? மயிலாடுதுறையில் சிக்கிய ஓஎன்ஜிசியின் 'சைடு ட்ராக்கிங்' முயற்சி?
பூமிக்கு அடியில் 1.5 கி.மீ தூரம் ரகசியத் துளை? மயிலாடுதுறையில் சிக்கிய ஓஎன்ஜிசியின் 'சைடு ட்ராக்கிங்' முயற்சி?
மயிலாடுதுறையில் தவெக பெண் தொண்டருக்கு நேர்ந்த அவலம் : ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெடித்த மோதல்!
மயிலாடுதுறையில் தவெக பெண் தொண்டருக்கு நேர்ந்த அவலம் : ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெடித்த மோதல்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Ajith London Video: நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
Modi Xi Jinping Meet: டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
Putin Warns Europe: பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
Modi Speech in BRICS: 'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
Xi Jinping on Middle East War: “மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
“மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? "ஒருபோதும் அமையவிடமாட்டோம்" - சீமான் அதிரடி எச்சரிக்கை!
Power Cut: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
Embed widget