மேலும் அறிய

Crime: கர்நாடக பெண் அரசு அதிகாரியை கொலை செய்தது ஏன்? - குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!

கர்நாடகாவில் அரசு பெண் அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Karnataka Murder: கர்நாடகாவில் அரசு பெண் அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடகாவை உலுக்கிய கொலை:

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதிமா (47). இவர் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி  வந்தார். இவர் சுப்ரமணியபோரா என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சனிக்கிழமை இரவு அலுவலகப் பணி முடிந்து, பெங்களூருவில் இருக்கும் சுப்ரமணியபோராவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரது கணவரும், மகனும் சொந்த ஊரான தீர்த்தஹள்ளிக்குச் சென்றிருந்தனர். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு பிரதிமாவின் சகோதரரும், கணவரும் செல்போனில் அழைத்தபோது, அவர் பதிலளிக்கவில்லை என்பதால், அவரது சகோதரர் மறுநாள் காலை பிரதிமா வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது தான் வீட்டில் பிரதிமா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. 

இதனை அடுத்து, பிரதிமாவின் சகோதரர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரதிமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருததுவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

ஓட்டுநர் கைது:

அப்போது, பிரதிமா அலுவலகத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணியளவில் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரை, அவரது வீட்டில் புதிய ஓட்டுநர் இறக்கிவிட்டுள்ளார். இதனால், இவரை சந்தேகத்தின் பேரில், முன்னாள் ஓட்டுநர் கிரணிடம் போலீசார் விசாரிக்க  முயன்றனர். ஆனால், அவர் பெங்களூருவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாமராஜநகருக்கு தப்பிச் சென்றது தெரிந்தது. உடனே போலீசார் முன்னாள் ஓட்டுநர் கிரணை கைது செய்து விசாரித்தனர். அப்போது, "நான் பிரதிமாவின் ஓட்டுநராக ஐந்து நாட்களாக பணிபுரிந்து வந்தேன்.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தேன். பிரதிமா, கடந்த 10 நாட்களுக்கு முன்பு என்னை பணியில் இருந்து நீக்கிவிட்டு, புதிதாக ஒருவரை பணிக்கு அமர்த்தினார். இதனால், தன்னை வேலைக்கு எடுக்கும் படி அவரிடம் முறையிட்டேன். ஆனால், அவர் பணியில் எடுக்கவில்லை.  இதனால் நான் பிரதிமாவை கொலை செய்ததாக" வாக்குமூலம் அளித்தார்.  இதற்கு முன்னதாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், "கொலை தொடர்பாக கடுமையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இறந்தவரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார். 


மேலும் படிக்க

Supreme Court: மசோதாக்களை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது - உச்சநீதிமன்றம் கருத்து..

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget