மேலும் அறிய

crime: வேறு ஒருவருடன் தொடர்பு..கண்டித்த நாத்தனார்..மிரட்ட போய் கொலையில் முடிந்த கொடூரம்

தன்னை கண்டித்த நாத்தனார் சுமதியை மிரட்ட சொன்னதால், கத்தியை காட்டி மிரட்ட சென்றவர்கள், கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பென்னாகரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கைகள் கட்டப்பட்டு, சடலமாக கிடந்த சம்பவத்தில், கொலை செய்ததாக, ஹோமியோபதி மருத்துவர் உள்ளிட்ட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மனைவி சுமதி(45), கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடமாக கணவனைப் பிரிந்து, தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவில் தற்காலிக கிராமப்புற உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். சுமதியின் இரண்டு மகன்கள் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். 
 
இதனால் சுமதி மட்டும் வீட்டில் தனியாக வசித்துள்ளார். தினமும் 6 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை செய்யும் சுமதி, கடந்த வாரம் காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து திறந்து பார்த்துள்ளனர். அப்பொழுது சுமதி வீட்டில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதனை அடுத்து பென்னாரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

crime: வேறு ஒருவருடன் தொடர்பு..கண்டித்த நாத்தனார்..மிரட்ட போய் கொலையில் முடிந்த கொடூரம்
 
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் காவல் துறையினர் சுமதி வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது, கைகள் கட்டப்பட்டு, தலையின் பின்பக்கத்தில் படுகாயத்துடனும், உடலில் ஆங்காங்கே வெட்டு காயங்கள் ஏற்பட்டு மர்ரமான முறையில் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார். இதனையடுந்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம்,  சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து தடவியல் துறை மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, காவல் துறையினர் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து சுமதி வீட்டுக்கு யாரேனும் வந்து சென்றார்களா என அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரனை நடத்தினர். அப்பொழுது சுமதியின் உறவினர் ஒருவரும், அவருடன் ஒரு இளைஞர் வந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
 
இதனை தொடர்ந்து அந்த இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்பொழுது சுமதியின் தம்பி மனைவி ஹோமியோபதி மருத்துவரான இந்திரகுமாரியின் தம்பி அரவிந்த் மற்றும் அவரது நண்பர் சக்தி என்பது தெரியவந்தது. மேலும் காவல் துறையினர் விசாரணையில், ஹோமியோபதி மருத்துவரான இந்திரகுமாரி, சென்னையில் பயிற்சி எடுத்து வருவதாகவும், அவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுமதி, இந்திரகுமாரியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் தன்னை திட்டுவதாக, தம்பி அரவிந்த்-யிடம், இந்திகுமாரி தெரிவித்துள்ளார். இதனால், ஓசூரில் இருந்து அரவிந்த் தனது நண்பர் சக்தியை அழைத்துக் கொண்டு பென்னாகரம் வந்துள்ளார். தொடர்ந்து சுமதியை மிரட்டி விட்டு வருவதற்காக, கத்தி வாங்கி கொண்டு சுமதி வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு மிரட்டுவதற்கு கழுத்தில் கத்தி வைத்துள்ளனர். ஆனால் வாக்குவாதம் ஏற்பட்டு, கழுத்தை அறுத்து, கைகளை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக, அரவிந்த் காவல் நிலையத்தில் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சுமதியை கொலை செய்ததாக ஹோமியோபதி மருத்துவரான இந்திரகுமாரி, அவரது தம்பி அரவிந்த், சக்தி மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

crime: வேறு ஒருவருடன் தொடர்பு..கண்டித்த நாத்தனார்..மிரட்ட போய் கொலையில் முடிந்த கொடூரம்
 
மேலும், தன்னை கண்டித்த நாத்தனார் சுமதியை மிரட்ட சொன்னதால், கத்தியை காட்டி மிரட்ட சென்றவர்கள், கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
Embed widget