மேலும் அறிய

காதலன் கண்முன்னே காதலிக்கு பாலியல் வன்கொடுமை - 3 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மூன்று பேர் மீதும் வழிப்பறி, கொலை மிரட்டல்,  வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது

கடலூர் தலைமை தபால் நிலையம்  பகுதியில் கடந்த மாதம் 28 ஆம் தேதி நள்ளிரவு 21 வயது பெண்ணொருவர் பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) அரோக்கியராஜ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர், தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் காவல்துறையினர் சென்று பார்த்த போது அழுது கொண்டிருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சி தகவலை காவல்துறையினரிடம் அந்த பெண் கதறி அழுது கொண்டே தெரிவிக்கையில், கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் தனது காதலனுடன் பாழடைந்த வீட்டில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, மூன்று வாலிபர்கள் திடீரென்று உள்ளே நுழைந்தார்கள். அப்போது எங்களிடம் ரகளை ஈடுபட்டனர். பின்னர் என்னையும் எனது காதலனையும் ஒன்றாக சேர்த்து வைத்து செல்போனில் படம் பிடித்து வெளியில் காண்பித்து விடுவோம் என மிரட்டினர்.


காதலன் கண்முன்னே காதலிக்கு பாலியல் வன்கொடுமை - 3 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பின்னர் திடீரென்று எனது காதலனை இரண்டு நபர்கள் வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டனர் எனவும், இதனால் நான் பெரும் அதிர்ச்சி அடைந்து தப்ப முயற்சி செய்தேன் . பின்னர் ஒரு நபர் நான் எவ்வளவோ தடுத்தும், கதறி கெஞ்சிய போதும் என்னை வலுக்கட்டாயமாக என் காதலன் முன்பு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனை தொடர்ந்து காதலன் செல்போனையும் பிடிங்கிக் கொண்டனர். பின்னர் மூன்று பேரும், என்னையும் என் காதலனையும் மிரட்டி, இந்த நடந்த சம்பவம் தொடர்பாக நீங்கள் யாரிடமும் கூறக்கூடாது என கூறி அனுப்பி வைத்தாக கதறி அழுது கொண்டு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு பெண்ணை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பெண்ணின் காதலனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூன்று நபர் யார் என தெரியவில்லை என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த பகுதியில் சந்தேகப்படும் நபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், 3 வாலிபர்களை காவல் துறையினர் பிடித்து வந்து காதலனிடம்  காண்பித்தனர். அப்போது காதலியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று நபர்கள் இவர்கள் என அடையாளம் காண்பித்தார். மேலும் காதலனிடம் இருந்து பறித்த செல்போன் ஒரு நபரின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதை அடுத்து திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தி கிஷோர், சதீஷ், ஆரிப் ஆகிய 3 வாலிபர்களை பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், காவல் துணை கண்காணிப்பாளர் காரிகால் பாரிசங்கர் ஆகியோர் அந்த 3 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதை அடுத்து குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் மீது வழிப்பறி, கொலை மிரட்டல்,  வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்பொழுது அவர்கள் மீது ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக்காவலில் வைக்க ஆணையிட்டதின்பேரில் எதிரிகள் ஓராண்டு குண்டர் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்கள் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran vs Israel War: மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி; எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை; வெயிட்டான சம்பவம் செய்த ஈரான்
மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி; எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை; வெயிட்டான சம்பவம் செய்த ஈரான்
Iran Trump Warning: “கொடூரமாக பழி தீர்ப்போம்“; “இதுவரை காணாத தாக்குதல் நடக்கும்“; ஈரான்-ட்ரம்ப் மாறி மாறி எச்சரிக்கை
“கொடூரமாக பழி தீர்ப்போம்“; “இதுவரை காணாத தாக்குதல் நடக்கும்“; ஈரான்-ட்ரம்ப் மாறி மாறி எச்சரிக்கை
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாக்களில் பிழையா? உடனே தெரிவியுங்கள்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாக்களில் பிழையா? உடனே தெரிவியுங்கள்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
Tata Harrier EV: இனி நான் மட்டும் தான்னு சீன் போட முடியாது..! ஹாரியருக்கு போட்டியாக டாடாவின் புது SUV- என்ன விசேஷம்?
Tata Harrier EV: இனி நான் மட்டும் தான்னு சீன் போட முடியாது..! ஹாரியருக்கு போட்டியாக டாடாவின் புது SUV- என்ன விசேஷம்?
பகுதிநேர ஆசிரியர்கள்: பணி நிரந்தரம் & வாழ்வாதார சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா? எழும் வலியுறுத்தல்!
பகுதிநேர ஆசிரியர்கள்: பணி நிரந்தரம் & வாழ்வாதார சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா? எழும் வலியுறுத்தல்!
Khamenei Iran Chief: யார் இந்த கமேனி? அமெரிக்கா வெறுப்பது ஏன்? ஈரான் கொடுத்த குடைச்சல் தெரியுமா?
Khamenei Iran Chief: யார் இந்த கமேனி? அமெரிக்கா வெறுப்பது ஏன்? ஈரான் கொடுத்த குடைச்சல் தெரியுமா?
Gold Silver Rate Mar.1st: 1-ம் தேதியே இப்படியா.! தங்கம் விலை எங்கயோ போயிடுச்சேய்யா.! இன்றும் அதிரடி உயர்வு; எவ்வளவு.?
1-ம் தேதியே இப்படியா.! தங்கம் விலை எங்கயோ போயிடுச்சேய்யா.! இன்றும் அதிரடி உயர்வு; எவ்வளவு.?
Iran Attack Dubai Reason: துபாயை துவம்சம் செய்யும் ஈரான்; குறி வைக்கப்பட்ட புர்ஜ் கலிஃபா; காரணம் என்ன தெரியுமா.?
துபாயை துவம்சம் செய்யும் ஈரான்; குறி வைக்கப்பட்ட புர்ஜ் கலிஃபா; காரணம் என்ன தெரியுமா.?
Embed widget