மேலும் அறிய

Crime: காற்றோட்டமாக கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்: காத்திருந்து வேலையை காட்டிய இளைஞர்!

சென்னையில் தூக்கத்தில் இருந்த நடுத்தர வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற நபரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

சென்னை, அண்ணாநகரை சேர்ந்த  40 வயது  பெண் ஒருவர் நேற்று முன்தினம் (பிப்.15) இரவு, தனது வீட்டின் கதவை பூட்ட மறந்து திறந்துவைத்தபடியே தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் இதனைக் கவனித்து திடீரென பெண்ணின் வீட்டுக்குள் இளைஞர் புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து அப்பெண் கூச்சலிட்ட நிலையில், பயந்துபோன இளைஞர் தப்பி ஓடத் தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து உடனடியாக இதுகுறித்து, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பெண் கொடுத்த தகவலின்பேரில்  அண்ணாநகர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பதுங்கியிருந்த இளைஞரை காவல் துறையினர் மடக்கிபிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் முகப்பேர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 25) என்பதும், அந்நபர் மீது ஏற்கெனவே திருமங்கலம், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதி காவல் நிலையங்களில் திருட்டு அடிதடி உள்பட சுமார் எட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

மேலும்,  இரவு நேரங்களில் பலரை மிரட்டி செல்ஃபோன் பறித்துள்ள இந்நபர், அவற்றை மலிவு விலையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சுப்பிரமணி மீது வழக்கு பதிந்து அவரை காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் முன்னதாக திண்டிவனம் அருகே ஆட்டோவில் இரவு நேரத்தில் தனியாக சென்ற பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த ஆட்டோ டிரைவர் மீது ஏற்கெனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள 28 வயதான பெண் பிப்ரவ்ரி 12ஆம் தேதி தனது கணவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி நல்லாளம் கூட்டு சாலையில் திண்டிவனம் செல்ல பேருந்திற்காக நின்றிருந்தார். அங்கு வந்த பெருமுக்கல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான முருகன் மகன் சுகன்ராஜ் தான் திண்டிவனம் சவாரி செல்வதாகவும், அங்கு சென்று அந்தப் பெண்ணை விட்டுவிடுவதாகவும் கூறி ஆட்டோவில் ஏறுமாறு கூறியதால் அதனை நம்பி அந்தப் பெண்மணியும் ஆட்டோவில் ஏறி உள்ளார். இதனைப் பயன்படுத்தி ஆட்டோ டிரைவர் சுகன்ராஜ் பெருமுக்கல் மலைக்குச் செல்லும் மண் பாதையை ஒட்டிய முட்புதரில் அந்தப் பெண்மணியை கீழே இறக்கி பாலியல் அத்துமீறலில் முயன்றுள்ளார்.

உடனே அந்த பெண்மணி ஆட்டோ டிரைவரை அடித்து விட்டு அங்கிருந்து தப்பிய நிலையில் கணவருக்கு தகவல் அளித்ததின் பேரில் அங்கு வந்த பெண்ணின் கணவர் அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார்.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் ஆட்டோ டிரைவர் சுகன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். சுகன்ராஜ் மீது ஏற்கெனவே பிரம்மதேசம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

பெற்ற குழந்தையை விற்ற தாய்; ஆம்பூரில் அரங்கேறிய கொடூரம்; பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்
பெற்ற குழந்தையை விற்ற தாய்; ஆம்பூரில் அரங்கேறிய கொடூரம்; பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்
Child Abuse: திருவள்ளூர் 3 வயது குழந்தை ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
திருவள்ளூர் 3 வயது குழந்தை ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
" உன்னை சந்திக்கனும் " நண்பர் தானே என நம்பி வந்த பெண் காவலருக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்
திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலால் இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த பயங்கரம்
திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலால் இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த பயங்கரம்

வீடியோ

Iran US War: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்! குறையும் பெட்ரோல் டீசல் விலை?ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
Mdmk dmk alliance Break : திமுக-வுக்கு டாட்டா? ரூட்டை மாற்றும் வைகோ உடையப்போகும் கூட்டணி?
Singappen Task Force : பெண்ணிடம் சில்மிஷம்! சீறிப்பாய்ந்த சிங்கப்பெண் படை! சிவகாசியில் நடந்த ACTION
Child Abuse : கும்மிடிப்பூண்டி கொடூரம்குழந்தை பாலியல் வன்கொடுமை! உண்மையை உடைத்த காவல்துறை!
Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC shops : சொன்னதை செய்து காட்டிய சிஎம் விஜய்.! மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் - லிஸ்டை வெளியிட்ட தமிழக அரசு
சொன்னதை செய்து காட்டிய சிஎம் விஜய்.! மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் - லிஸ்டை வெளியிட்ட தமிழக அரசு
Child Abuse: திருவள்ளூர் 3 வயது குழந்தை ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
திருவள்ளூர் 3 வயது குழந்தை ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
'ஒபிஎஸ் மீது 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு’ அதிரடி காட்டிய சிபிசிஐடி..!
'ஒபிஎஸ் மீது 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு’ அதிரடி காட்டிய சிபிசிஐடி..!
Diesel Supply : ’பெட்ரோல், டீசல் பெற திடீர் கட்டுப்பாடு?’ மீண்டும் கலக்கத்தில் வாகன ஓட்டிகள்..!
’பெட்ரோல், டீசல் பெற திடீர் கட்டுப்பாடு?’ கலக்கத்தில் வாகன ஓட்டிகள்..!
NEET UG 2026: நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதி- மாற்று வழிகள் என்னென்ன?
NEET UG 2026: நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதி- மாற்று வழிகள் என்னென்ன?
Kia Upcoming SUV: சோனெட், செல்டோஸ் ரெண்டுமே வேண்டாமா? மிடில் பட்ஜெட்டில் கியாவின் புதிய எஸ்யுவி - எப்படி இருக்கு?
சோனெட், செல்டோஸ் ரெண்டுமே வேண்டாமா? மிடில் பட்ஜெட்டில் கியாவின் புதிய SUV - எப்படி இருக்கு?
Ration card : ரேஷன் கார்டு ரெடி.! வீடு தேடி வரும் 46,000 ஸ்மார்ட் கார்டு- உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு
ரேஷன் கார்டு ரெடி.! வீடு தேடி வரும் 46,000 ஸ்மார்ட் கார்டு- உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு
Alto K10 : ‘ஒரு லிட்டருக்கு இவ்வளவு கிலோ மீட்டரா?’ நடுத்த மக்களின் நம்பிக்கை பெற்ற ஆல்டோ K10..!
‘லிட்டருக்கு இவ்வளவு கிலோ மீட்டரா?’ ஆல்டோ K10 சிறப்பம்சங்கள்..!
Embed widget