மேலும் அறிய

‛பார்ட் டைம் கஞ்சா சேல்’ சூர்யா-தமன்னா கைது!

இருவரும் ஜோடியாக சென்று கஞ்சா விற்பனை செய்தால் காவல் துறையினருக்கு சந்தேகம் வராது என்பதாலும், ஊரடங்கு காலம் என்பதால் செவிலியர் எனக்கூறி எங்கும் சென்று வரலாம் எனவும் திட்டமிட்டு இருந்துள்ளனர்.

கோவை பீளமேடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காதல் ஜோடியை கைது செய்த காவல் துறையினர், 2.25 கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.

கோவை பீளமேடு பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து அதிகளவில் கஞ்சா விற்பனை நடப்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பீளமேடு காவல் துறையினர் குற்றச் செயல்களை தடுப்பதற்கான நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது நேரு நகர் அருகேயுள்ள வீரியம்பாளையம் சாலையில் பீளமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்குமார் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அங்குள்ள மின்சார அலுவலகம் அருகே காலி இடத்தில் ஒரு இளம்பெண்ணுடன் ஒரு வாலிபர் நின்று பேசிக் கொண்டிருப்பதை பேசிக் கொண்டு இருந்துள்ளார். சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த ஜோடி பேசிக் கொண்டிருந்ததால், அவர்களிடம் உதவி ஆய்வாளர் விசாரித்துள்ளார். விசாரணையின் போது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கையில் வைத்திருந்த பையினை வாங்கி சோதனை செய்துள்ளார். அதில் பொட்டலங்களாக 2 கிலோ 250 கிராம் கஞ்சா வைத்து இருப்பது தெரியவந்தது.

PUBG Madan: ‛பப்ஜி முதல் கப்சிப் வரை’ மதன் மன்மதனாகி மாட்டிய கதை!


‛பார்ட் டைம் கஞ்சா சேல்’ சூர்யா-தமன்னா கைது!

இதையடுத்து இருவரையும் பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமன்னா என்கிற விநோதினி (21) என்பதும், டிப்ளமோ நர்சிங் படிப்பு படித்திருப்பதும் தெரியவந்தது. மேலும் விநோதினி ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததும், அவருடன் இருந்த வாலிபர் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சூர்ய பிரசாத் (21) என்பதும் தெரியவந்தது. சூர்ய பிரசாத் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டே, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலர்கள் என்பதும், காதலுடன் கஞ்சா தொழிலையும் வளர்க்க திட்டமிட்டதும் தெரியவந்தது. காந்தி மாநகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த இருவரும் ஜோடியாக சென்று கஞ்சா விற்பனை செய்தால் காவல் துறையினருக்கு சந்தேகம் வராது என்பதாலும், ஊரடங்கு காலம் என்பதால் செவிலியர் எனக்கூறி எங்கும் சென்று வரலாம் எனவும் திட்டமிட்டு இருந்துள்ளனர். இதனிடையே காதல் ஜோடி கையும், களவுமாக காவல் துறையினரிடம் பிடிபட்டுள்ளனர்.


‛பார்ட் டைம் கஞ்சா சேல்’ சூர்யா-தமன்னா கைது!

இதையடுத்து விநோதினி மற்றும் சூரிய பிரசாத்தினை கைது செய்த காவல் துறையினர், 2 கிலோ 250 கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வேறு எதேனும் கஞ்சா வழக்கில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், கஞ்சா எங்கியிருந்து வாங்கினர் என்பது குறித்தும் பீளமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கில் வருவாய்க்காக இது போன்ற குற்றச் செயலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explains: சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
ADMK alliance: பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explains: சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
ADMK alliance: பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
Embed widget