மேலும் அறிய

முழு அலர்ட்டில் காஞ்சிபுரம்..! ஏடிஎம் கொள்ளை எதிரொலி..! குற்றவாளியை சுத்து போடும் போலீஸ்..!

தொடர் ஏடிஎம் கொள்ளை எதிரொலி காஞ்சியில் உள்ள லாட்ஜ்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 இடங்களில் தடுப்பு வைத்து வாகன சோதனையில் 460 காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் அடுத்தடுத்து தொடர்ந்து நான்கு ஏடிஎம் களில் மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டு ஏடிஎம் களில் இருந்த ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் தமிழகத்தில் உலுக்கி சென்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்த நிலையில் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
 
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பெயரில் காஞ்சிபுரம் எல்லைப் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்கள் என 24 இடங்களில் தடுப்புகள் வைத்து 460 போலீசார் ரோந்து மட்டும் வாகன சோதையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மேலும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள 50-க்கும் மேற்பட்ட விடுதிகளில் சந்தேகத்துக்கு இடமான  யாரேனும் விடுதியில் தங்கி கொண்டார்களா என 20க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை செய்து வருகின்றனர். மக்கள் அதிகம் கொடுமுள்ள பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
 
திருவண்ணாமலையில் அடுத்தடுத்து கொள்ளை.. ஏ.டி.எம் மையங்களில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு!
 
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள தண்டராம்பட்டு சாலை தேனீமலை அருகே இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஏடிஎமில் மர்ம கொள்ளையர்கள் முதலில் கொள்ளை அடித்துக் கொண்டு, அதன் பின்னர் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் 10-வது தெருவில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மில் மர்ம கொள்ளையர்கள் கொள்ளையடித்துகொண்டு பின்னர் ஆந்திரா மாநிலத்திற்கு தப்பி செல்லும் வழியில் உள்ள கலசப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இயங்கி வரும் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்துக்கொண்டு மற்றும் போளூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையத்தில் மர்ம கொள்ளையர்கள் கொள்ளையடித்துக்கொண்டு கண்ணமங்கலம் வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.


முழு அலர்ட்டில் காஞ்சிபுரம்..! ஏடிஎம் கொள்ளை எதிரொலி..! குற்றவாளியை சுத்து போடும் போலீஸ்..!

 

 

ஆந்திரா மாநில கொள்ளையர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர்.நான்கு ஏடிஎம் இயந்திரத்திதை உடைப்பதற்கு கேஸ் வெல்டிங் மிஷினை பயண்படுத்தி 4 ஏடிஎம்மை உடைத்து அதில் இருந்த ரூ 56 லட்ச பணத்தை எடுத்துக் கொண்ட கொள்ளையர்கள் 4 ஏ டி எம் மையத்துடைய சிசிடிவி கேமராவையும் உடைத்துள்ளனர். மேலும் ஆதாரங்களை அழிக்கும் நோக்கோடு கேஸ் வெல்டிங் நெருப்பைக் பயண்படுத்தி தீயிட்டு கொளுத்தி உள்ளனர். குறிப்பாக சிசிடிவி காட்சிகள் பதிவாகவும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை தீயிட்டு கொளுத்தி அளித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

 

முழு அலர்ட்டில் காஞ்சிபுரம்..! ஏடிஎம் கொள்ளை எதிரொலி..! குற்றவாளியை சுத்து போடும் போலீஸ்..!

 

 

இதனைத் தொடர்ந்து மாரியம்மன் கோவில் 10வது தெரு, தேனிமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூர் பேருந்து நிலையம் ஆகிய நான்கு ஏ.டி.எம் மையங்களில் தடய அறிவியல் துறையினர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.நான்கு ஏ.டி.எம் மையங்களில் இருந்து தடய அறிவியல் துறையினர் மாதிரிகளை சேகரிக்கப்பட்டு சென்னை ஆய்யோகத்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து நகரில் பல்வேறு இடங்களில் சந்தேகத்திற்கு உரிய நபர்கள் யாரேனும் உள்ளார்களா எனவும், திருவண்ணாமலை நகருக்கு வரும் அனைத்து சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். மேலும் ஆந்திரா மாநிலத்திற்கு எஸ்பி தலைமையில் ஒரு தனிப்பட்டையும் , தெலுங்கனா மாநிலத்திற்கு ஒரு தனிப்பட்டையினர் , கர்நாடக மாநிலத்திற்கு ஒரு தனிப்பட்டை என 3 எஸ்பி தலைமையில் மூன்று மாநிலத்திற்கு விசாரணைக்கு சென்றுள்ளனர்.

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.