மேலும் அறிய

தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களிடையே மோதல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் இடையே தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவது தொடர்பாக மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார், சந்திரபாடி, திருமுல்லைவாசல், மடவாய்மேடு உள்ளிட்ட கிராமங்களில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலை கொண்டு மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவ கிராமங்கள் மீது மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 


தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களிடையே மோதல்!

இந்த சூழலில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி கோரி சுருக்கு மடி வலையை பயன்படுத்தும் பூம்புகார், திருமுல்லைவாசல், சந்திரபாடி, மடவமேடு உள்ளிட்ட மீனவர்கள் கடந்த மாதம் ரேஷன் கார்டு ஒப்படைக்கும் போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டனர். இரண்டு தரப்பும் மீனவர்களும் மாறி மாறி போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் தடையை மீறி தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தது அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி பிடித்த மீன்கள், மீன்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், மீன்பிடி படகுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அதனையடுத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தாமல் இருந்தனர்.


தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களிடையே மோதல்!

இந்நிலையில் தடையை மீறி தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்காக பூம்புகார், சந்திரபாடி ஆகிய கிராம மீனவர்கள் விசைப்படகு மூலம் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இதனை அறிந்த தரங்கம்பாடி, சின்னங்குடி, புதுப்பேட்டை, மாணிக்கபங்கு, சின்னமேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள் தடுத்து நிறுத்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கடலுக்குள் சென்றனர். இதனால் நடுக்கடலில் 2 மீனவர் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

சுருக்கு மடி வலை அனுமதி: 21 மீனவ கிராம மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

இதனையடுத்து தரங்கம்பாடி விரைந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு மீனவ பஞ்சாயத்து தலைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மோதலைத் தவிர்க்க தரங்கம்பாடி மற்றும் சந்திரபாடி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் தடை செய்யப்பட்ட சுறுக்கு வழியை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு விசைப்பலகை நடுக்கடலில்  தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் மாவட்ட மீனவ கிராமங்கள் இடையே பெரும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட மீனவர்கள் மூன்று மாவட்ட தலைமை மீனவ கிராமமான நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையில் அவசர ஆலோசனை கூட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MI Vs PBKS: ஜெயிச்சாலே போதும், டாப் 2 கன்ஃபார்ம் - இன்று பஞ்சாபை பந்தாடுமா மும்பை? ஜெய்பூரில் மழையா?
MI Vs PBKS: ஜெயிச்சாலே போதும், டாப் 2 கன்ஃபார்ம் - இன்று பஞ்சாபை பந்தாடுமா மும்பை? ஜெய்பூரில் மழையா?
KL Rahul: எல்லாம் மறந்துட்றீங்க? கில்லால் கடுப்பான கே.எல். ராகுல்? பிசிசிஐயின் கேப்டன்சி முடிவால் அதிருப்தி?
KL Rahul: எல்லாம் மறந்துட்றீங்க? கில்லால் கடுப்பான கே.எல். ராகுல்? பிசிசிஐயின் கேப்டன்சி முடிவால் அதிருப்தி?
IPL 2025 KKR vs SRH: நடப்பு சாம்பியன் கொல்கத்தா படுதோல்வி.. பிரம்மாண்ட வெற்றியுடன் பொட்டிய கட்டிய ஹைதரபாத்..
IPL 2025 KKR vs SRH: நடப்பு சாம்பியன் கொல்கத்தா படுதோல்வி.. பிரம்மாண்ட வெற்றியுடன் பொட்டிய கட்டிய ஹைதரபாத்..
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MI Vs PBKS: ஜெயிச்சாலே போதும், டாப் 2 கன்ஃபார்ம் - இன்று பஞ்சாபை பந்தாடுமா மும்பை? ஜெய்பூரில் மழையா?
MI Vs PBKS: ஜெயிச்சாலே போதும், டாப் 2 கன்ஃபார்ம் - இன்று பஞ்சாபை பந்தாடுமா மும்பை? ஜெய்பூரில் மழையா?
KL Rahul: எல்லாம் மறந்துட்றீங்க? கில்லால் கடுப்பான கே.எல். ராகுல்? பிசிசிஐயின் கேப்டன்சி முடிவால் அதிருப்தி?
KL Rahul: எல்லாம் மறந்துட்றீங்க? கில்லால் கடுப்பான கே.எல். ராகுல்? பிசிசிஐயின் கேப்டன்சி முடிவால் அதிருப்தி?
IPL 2025 KKR vs SRH: நடப்பு சாம்பியன் கொல்கத்தா படுதோல்வி.. பிரம்மாண்ட வெற்றியுடன் பொட்டிய கட்டிய ஹைதரபாத்..
IPL 2025 KKR vs SRH: நடப்பு சாம்பியன் கொல்கத்தா படுதோல்வி.. பிரம்மாண்ட வெற்றியுடன் பொட்டிய கட்டிய ஹைதரபாத்..
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மாஸ் Vs க்ளாஸ்..தக் லைஃப்க்கு போட்டியாக ப்ரோமோஷன் செய்கிறதா கூலி படக்குழு ?
மாஸ் Vs க்ளாஸ்..தக் லைஃப்க்கு போட்டியாக ப்ரோமோஷன் செய்கிறதா கூலி படக்குழு ?
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
4 மாநிலங்கள்.. 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்.. பாஜகவுக்கு சவால் அளிக்குமா இந்தியா கூட்டணி?
4 மாநிலங்கள்.. 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்.. பாஜகவுக்கு சவால் அளிக்குமா இந்தியா கூட்டணி?
Stalin Criticize EPS: “சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
“சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
Embed widget