மேலும் அறிய

தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களிடையே மோதல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் இடையே தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவது தொடர்பாக மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார், சந்திரபாடி, திருமுல்லைவாசல், மடவாய்மேடு உள்ளிட்ட கிராமங்களில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலை கொண்டு மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவ கிராமங்கள் மீது மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 


தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களிடையே மோதல்!

இந்த சூழலில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி கோரி சுருக்கு மடி வலையை பயன்படுத்தும் பூம்புகார், திருமுல்லைவாசல், சந்திரபாடி, மடவமேடு உள்ளிட்ட மீனவர்கள் கடந்த மாதம் ரேஷன் கார்டு ஒப்படைக்கும் போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டனர். இரண்டு தரப்பும் மீனவர்களும் மாறி மாறி போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் தடையை மீறி தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தது அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி பிடித்த மீன்கள், மீன்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், மீன்பிடி படகுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அதனையடுத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தாமல் இருந்தனர்.


தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களிடையே மோதல்!

இந்நிலையில் தடையை மீறி தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்காக பூம்புகார், சந்திரபாடி ஆகிய கிராம மீனவர்கள் விசைப்படகு மூலம் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இதனை அறிந்த தரங்கம்பாடி, சின்னங்குடி, புதுப்பேட்டை, மாணிக்கபங்கு, சின்னமேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள் தடுத்து நிறுத்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கடலுக்குள் சென்றனர். இதனால் நடுக்கடலில் 2 மீனவர் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

சுருக்கு மடி வலை அனுமதி: 21 மீனவ கிராம மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

இதனையடுத்து தரங்கம்பாடி விரைந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு மீனவ பஞ்சாயத்து தலைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மோதலைத் தவிர்க்க தரங்கம்பாடி மற்றும் சந்திரபாடி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் தடை செய்யப்பட்ட சுறுக்கு வழியை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு விசைப்பலகை நடுக்கடலில்  தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் மாவட்ட மீனவ கிராமங்கள் இடையே பெரும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட மீனவர்கள் மூன்று மாவட்ட தலைமை மீனவ கிராமமான நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையில் அவசர ஆலோசனை கூட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Embed widget