மேலும் அறிய

சுருக்கு மடி வலை அனுமதி: 21 மீனவ கிராம மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

சுருக்கு மடி வலைக்கு அனுமதி வழங்க கோரி 21 மீனவ கிராமங்களை சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் அந்தந்த கிராமங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கடலில் மீன்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மீன்வளத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக கடற்கரையில் தடைசெய்த மீன்பிடி வலையான சுருக்குமடி வலை மற்றும் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் படித்து வருகின்றனா். இதுபோன்ற அரசால் தடை செய்த வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடும்போது, அதிக கடற்பரப்பு மீன் பிடிப்புக்கு உள்படுத்தப்படுகிறது. அத்துடன், பல்வேறு வகையான சிறு மீன்கள் உட்பட அதிக அளவில் மீன்கள் பிடிபடுவதுடன், கடலின் அடிப்பகுதியில் உள்ள இயற்கை சூழ்நிலையும் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்பட்டு, மொத்த மீன் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. அதேபோல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதால், மீனவா்களிடையே பல்வேறு பிரச்னைகள் மற்றும் மீனவா்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், மீன்வளமும் அழிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.


சுருக்கு மடி வலை அனுமதி: 21 மீனவ கிராம மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

இதைக் கருத்தில்கொண்டே மீனவா்கள் சுருக்கு மடி, இரட்டை மடி உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்ட  வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி வருகிறது. மேலும், மீனவா்கள் எவரேனும் தடை செய்த மீன்பிடி வலையான சுருக்கு மடி வலை, இரட்டைமடி வலைகள் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட மீன்வளத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒப்படைக்கத் தவறும் பட்சத்திலும், எதிா்வரும் காலங்களில் தடைசெய்த மீன்பிடி வலையான சுருக்குமடி வலை மற்றும் இரட்டைமடி வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பது தெரியவரும் பட்சத்திலும், தடைசெய்யப்பட்ட இந்த வலைகளை மறைமுகமாக பெரிதும் லாபம் தரும் நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மீனவா்களுக்கு விற்பனை மற்றும் விநியோகம் செய்வோா் மீதும் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சுருக்கு மடி வலை அனுமதி: 21 மீனவ கிராம மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

இந்நிலையில், மீன்பிடி ஒழுங்கு முறை சட்டம் படி தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள 21 வகை யான வலைகளை தடை செய்யாமல் சுருக்குமடி வலையை மட்டும்  தடை செய்துள்ளதாகவும். தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும்  மற்ற மீனவர்களுக்கு அரசு அனுமதித்து வருவதாகவும். எனவே, சுருக்கு மடி மீனவர்களையும் கடலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறி மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சுருக்கு மடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் அவர் கிராமங்களில் இன்று  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


சுருக்கு மடி வலை அனுமதி: 21 மீனவ கிராம மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

சுருக்கு மடி வலைக்கு ஆதரவு தெரிவித்து நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் உள்ளிட்ட 10 மீனவ கிராம மீனவர்கள் அந்தந்த கிராமங்களிலேயே  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை தலைமையாக கொண்ட  திருமுல்லைவாசல், மடவாமேடு உள்ளிட்ட 21 மீனவ கிராம மீனவர்கள் அந்தந்த கிராமங்களிலேயே  உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தங்களது போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவ குடும்பத்தினர் நாளை தங்களது குடும்ப அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். மீனவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக மீனவர்கள் அல்லாத கிராமத்தினர்  போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மீனவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில்  உள்ள வணிகர்கள் தங்கள் கடையை அடைத்து ஆதரவு தெரித்துள்ளனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 MI vs RR: ஐபில் ராஜா மும்பை! ராஜஸ்தானை சிதறவிட்டு கதறவிட்டு வெற்றி! ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
IPL 2025 MI vs RR: ஐபில் ராஜா மும்பை! ராஜஸ்தானை சிதறவிட்டு கதறவிட்டு வெற்றி! ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
TVK Vijay: கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? விஜய் முன்புள்ள மாபெரும் சவால்!
TVK Vijay: கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? விஜய் முன்புள்ள மாபெரும் சவால்!
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பு பாமக வெற்றி.. முதலமைச்சர் பொய் சொல்லக்கூடாது - அன்புமணி பரபரப்பு பேட்டி
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பு பாமக வெற்றி.. முதலமைச்சர் பொய் சொல்லக்கூடாது - அன்புமணி பரபரப்பு பேட்டி
முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் – தொண்டர்களுக்கு வைத்த அன்பு கோரிக்கை
முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் – தொண்டர்களுக்கு வைத்த அன்பு கோரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Kamakoti Peetam | காஞ்சிபுரம் சங்கர மடத்தின் புதிய பீடாதிபதி..!யார் இந்த கணேச சர்மா?Ajith Health Condition | அட கடவுளே AK-க்கு என்னாச்சு? மருத்துவமனை REPORT AIRPORT-ல் நடந்த சம்பவம்! | ShaliniMadurai Child Death : ’’என் பிள்ளை போச்சு பள்ளி நிர்வாகம் தான் காரணம்’’கதறும் சிறுமியின் தந்தைTamil Nadu Cabinet Reshuffle: மனோ தங்கராஜ் RE-ENTRY! அமைச்சரவையில் மாற்றம்! ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 MI vs RR: ஐபில் ராஜா மும்பை! ராஜஸ்தானை சிதறவிட்டு கதறவிட்டு வெற்றி! ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
IPL 2025 MI vs RR: ஐபில் ராஜா மும்பை! ராஜஸ்தானை சிதறவிட்டு கதறவிட்டு வெற்றி! ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
TVK Vijay: கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? விஜய் முன்புள்ள மாபெரும் சவால்!
TVK Vijay: கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? விஜய் முன்புள்ள மாபெரும் சவால்!
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பு பாமக வெற்றி.. முதலமைச்சர் பொய் சொல்லக்கூடாது - அன்புமணி பரபரப்பு பேட்டி
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பு பாமக வெற்றி.. முதலமைச்சர் பொய் சொல்லக்கூடாது - அன்புமணி பரபரப்பு பேட்டி
முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் – தொண்டர்களுக்கு வைத்த அன்பு கோரிக்கை
முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் – தொண்டர்களுக்கு வைத்த அன்பு கோரிக்கை
யார் ஆட்சிக்கு வந்தாலும் டிரான்ஸ்பர்தான்.. நேர்மையின் மறுபெயர் அசோக்.. யார் இந்த ஐஏஎஸ் அதிகாரி? 
அதிகார வர்க்கத்தை அலறவிட்ட ஐஏஎஸ் அதிகாரி.. முடிவுக்கு வந்த சகாப்தம்.. யார் இந்த அசோக்?
MTC Route Number: சென்னை எம்டிசி பஸ்ல போறவங்களா நீங்க.. அப்போ இந்த முக்கிய மாற்றம் பத்தி தெரிஞ்சுக்கோங்க...
சென்னை எம்டிசி பஸ்ல போறவங்களா நீங்க.. அப்போ இந்த முக்கிய மாற்றம் பத்தி தெரிஞ்சுக்கோங்க...
Trump's Success: சாதித்த ட்ரம்ப்.. சாய்ந்த உக்ரைன்.. கையெழுத்தான ஒப்பந்தம்.. இனி ரஷ்யாவுக்கு சிக்கல் தான்...
சாதித்த ட்ரம்ப்.. சாய்ந்த உக்ரைன்.. கையெழுத்தான ஒப்பந்தம்.. இனி ரஷ்யாவுக்கு சிக்கல் தான்...
IPL 2025: விராட் கோலிக்கே பிடிச்ச பாட்டு சிம்பு பாட்டுதானாம்! என்ன பாட்டு தெரியுமா?
IPL 2025: விராட் கோலிக்கே பிடிச்ச பாட்டு சிம்பு பாட்டுதானாம்! என்ன பாட்டு தெரியுமா?
Embed widget