மேலும் அறிய

Covai: கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்- நடந்தது என்ன?

Covai Encounter: கோவையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.

Covai Encounter: கோவையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.

சுட்டு பிடிக்கப்பட்ட 3 பேர்:

கோவை விமான நிலையம் பகுதியில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு, 3 பேர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், 3 பேரையும் போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். காயமடைந்த குணா தவசி,சதிஸ் மற்றும் கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் காலில் சுட்டுப் பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களது காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடந்தது என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 10 மணியளவில், பிருந்தாவன் நகர் பகுதியில்  கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிக்கு வந்த 3 பேர் காரில் இருவர் இருந்ததை கவனித்துள்ளனர். இதையடுத்து காரின் கதவை தட்டி திறக்குமாறு மிரட்டியுள்ளனர். இதனால் காரில் இருந்த அந்த ஜோடி அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் அச்சத்தால் அவர்கள் கதவை திறக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் அரிவாளால் காரின் கண்ணாடியை வெட்டி உடைத்து, காதலனுடன் இருந்த கல்லூரி மாணவியை வெளியே இழுத்துள்ளனர். ஆனாலும் அந்த பெண் தனது காதலனை வலுவாக பிடித்துக்கொண்டு கத்தி கூச்சல் போட்டுள்ளார். உடனே அந்த கும்பல் காதலனின் தலையில் அரிவாளால் வெட்ட, படுகாயமடைந்த நபர் மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று, 3 பேரும் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறைக்கு தகவல்:

இதனிடையே, மயக்கத்தில் இருந்து தெளிந்த அந்த இளைஞர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர தேடுதலுக்குப்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவியை மீட்டனர். அந்த மாணவனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு இருவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

காவல்துறை விசாரணை:

கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்ட சம்பவம், கோவையை கடந்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுத்தது. இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற குற்றவாளிகளை தேடி வந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அவர்களை அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தான் துடியலூர் பகுதியில் மூவரும் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அவர்களை சுற்றி வளைத்துள்ளனர். அப்போது தப்பிச் செல்ல முயலவே, மூவரையும் போலீசார் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
காதலனா? காசு? - இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற துணை நடிகை! முன்னாள் காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்!
காதலனா? காசு? - இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற துணை நடிகை! முன்னாள் காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்!
கூடுவாஞ்சேரியில் சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
கூடுவாஞ்சேரி சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
Embed widget