மேலும் அறிய

காதலனா? காசு? - இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற துணை நடிகை! முன்னாள் காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்!

விழுப்புரம் அருகே காதலித்த குறும்பட இயக்குநரை, துணை நடிகை தனது முன்னாள் காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: திரைப்படப் பாணியில் அரங்கேறிய ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. காதலித்தவரைத் திருமணம் செய்ய மறுத்ததோடு, பண விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் முன்னாள் காதலனுடன் சேர்ந்து இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்த துணை நடிகையின் விபரீத முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சவுக்குத் தோப்பில் அழுகிய சடலம்:

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த மதுரா வேடாளம் கிராமத்தில் உள்ள ஒரு சவுக்குத் தோப்பில், கடந்த 7-ம் தேதி பயங்கர துர்நாற்றம் வீசியது. அங்கு சென்று பார்த்த பொதுமக்கள், முகம் சிதைந்து அழுகிய நிலையில் ஒரு இளைஞரின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அரகண்டநல்லூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

யார் அந்த இளைஞர்?

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் திருநெல்வேலி மாவட்டம், நந்திக்கரை அணை குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 28) என்பதும், அவர் சென்னையில் தங்கி குறும்பட இயக்குநராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

கொலைக்கான பின்னணி - ஐந்து வருட காதல்:

சம்பவ இடத்தில் பதிவான செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது, துணை நடிகையான பூஜா என்பவருடன் ஜெயக்குமாருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பூஜா மற்றும் ஜெயக்குமார் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இடையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பூஜா திடீரென ஜெயக்குமாருடன் பேசுவதைத் தவிர்த்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார், காதலித்த காலத்தில் பூஜாவிற்குத் தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். மேலும், தன்னையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் போலீஸில் புகார் அளிப்பேன் அல்லது கொலை செய்துவிடுவேன் என்றும் பூஜாவை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் காதலனுடன் தீட்டிய ஸ்கெட்ச்:

ஜெயக்குமாரின் தொல்லை தாங்க முடியாமல் போனதால், அவரைத் தீர்த்துக்கட்ட பூஜா முடிவு செய்தார். இதற்காகத் தனது முன்னாள் காதலனான கடப்பேரியைச் சேர்ந்த தேவா என்பவரின் உதவியை நாடினார். இருவரும் சேர்ந்து ஜெயக்குமாரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர்.

திட்டமிட்டபடி கடந்த 3-ம் தேதி மாலை, சமாதானம் பேசுவதாகக் கூறி ஜெயக்குமாரை பில்ராம்பட்டு சவுக்குத் தோப்புப் பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு மறைந்திருந்த பூஜா, தேவா மற்றும் அவர்களது கூட்டாளிகள் ஜெயக்குமாரைச் சூழ்ந்துகொண்டு கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர் அடையாளங்கள் தெரியாமல் இருக்கச் சடலத்தைச் சிதைத்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.

9 பேர் அதிரடி கைது:

செல்போன் சிக்னல் மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில் போலீஸார் தீவிர வேட்டை நடத்தினர். இதில் துணை நடிகை பூஜா, அவரது முன்னாள் காதலன் தேவா, மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த ஐயப்பன், துர்கா, குப்புசாமி, சடையாண்டி, பூங்காவனம், ஹரிகரன், சீனிவாசன் மற்றும் இரண்டு சிறுவர்கள் என மொத்தம் 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு மற்றும் தடயங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சினிமா வாய்ப்புக்காகச் சென்னைக்கு வந்த இளைஞர், ஒரு துணை நடிகையின் மோகத்தால் உயிரை இழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காதலனா? காசு? - இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற துணை நடிகை! முன்னாள் காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்!
காதலனா? காசு? - இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற துணை நடிகை! முன்னாள் காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்!
கூடுவாஞ்சேரியில் சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
கூடுவாஞ்சேரி சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
டிவியில் பிடித்த பாடலை போடாத கணவர்.. ஆத்திரத்தில் மனைவி விபரீத முடிவு: அதிர்ச்சியில் ஆத்தூர் - நடந்து என்ன?
டிவியில் பிடித்த பாடலை போடாத கணவர்.. ஆத்திரத்தில் மனைவி விபரீத முடிவு: அதிர்ச்சியில் ஆத்தூர் - நடந்து என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
Senthil Balaji: தப்பு தப்பா சொல்லாதீங்க..! சிபிஐ சம்மன், நான் ரெடியா இருக்கேன் - செந்தில் பாலாஜி விளக்கம்
Senthil Balaji: தப்பு தப்பா சொல்லாதீங்க..! சிபிஐ சம்மன், நான் ரெடியா இருக்கேன் - செந்தில் பாலாஜி விளக்கம்
Gold and silver rate today : திடீரென ரூ.10,000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஷாக்- ஒரு சவரன் எவ்வளவு.?
திடீரென ரூ.10,000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஷாக்- ஒரு சவரன் எவ்வளவு.?
China Vs Israel America: ஈரானுக்கு ஆதரவாக நுழைந்த சீனா; இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ஈரானுக்கு ஆதரவாக நுழைந்த சீனா; இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TN Roundup: கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை, சிஎம் ஸ்டாலினுக்கு கடிதம், செந்தில் பாலாஜி ட்வீட் -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை, சிஎம் ஸ்டாலினுக்கு கடிதம், செந்தில் பாலாஜி ட்வீட் -தமிழகத்தில் இதுவரை
Cylinder Issue Hotels Closed: என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
Trump Furious Warning: “மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
“மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
Embed widget