மேலும் அறிய

காதலனா? காசு? - இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற துணை நடிகை! முன்னாள் காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்!

விழுப்புரம் அருகே காதலித்த குறும்பட இயக்குநரை, துணை நடிகை தனது முன்னாள் காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: திரைப்படப் பாணியில் அரங்கேறிய ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. காதலித்தவரைத் திருமணம் செய்ய மறுத்ததோடு, பண விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் முன்னாள் காதலனுடன் சேர்ந்து இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்த துணை நடிகையின் விபரீத முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சவுக்குத் தோப்பில் அழுகிய சடலம்:

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த மதுரா வேடாளம் கிராமத்தில் உள்ள ஒரு சவுக்குத் தோப்பில், கடந்த 7-ம் தேதி பயங்கர துர்நாற்றம் வீசியது. அங்கு சென்று பார்த்த பொதுமக்கள், முகம் சிதைந்து அழுகிய நிலையில் ஒரு இளைஞரின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அரகண்டநல்லூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

யார் அந்த இளைஞர்?

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் திருநெல்வேலி மாவட்டம், நந்திக்கரை அணை குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 28) என்பதும், அவர் சென்னையில் தங்கி குறும்பட இயக்குநராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

கொலைக்கான பின்னணி - ஐந்து வருட காதல்:

சம்பவ இடத்தில் பதிவான செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது, துணை நடிகையான பூஜா என்பவருடன் ஜெயக்குமாருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பூஜா மற்றும் ஜெயக்குமார் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இடையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பூஜா திடீரென ஜெயக்குமாருடன் பேசுவதைத் தவிர்த்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார், காதலித்த காலத்தில் பூஜாவிற்குத் தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். மேலும், தன்னையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் போலீஸில் புகார் அளிப்பேன் அல்லது கொலை செய்துவிடுவேன் என்றும் பூஜாவை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் காதலனுடன் தீட்டிய ஸ்கெட்ச்:

ஜெயக்குமாரின் தொல்லை தாங்க முடியாமல் போனதால், அவரைத் தீர்த்துக்கட்ட பூஜா முடிவு செய்தார். இதற்காகத் தனது முன்னாள் காதலனான கடப்பேரியைச் சேர்ந்த தேவா என்பவரின் உதவியை நாடினார். இருவரும் சேர்ந்து ஜெயக்குமாரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர்.

திட்டமிட்டபடி கடந்த 3-ம் தேதி மாலை, சமாதானம் பேசுவதாகக் கூறி ஜெயக்குமாரை பில்ராம்பட்டு சவுக்குத் தோப்புப் பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு மறைந்திருந்த பூஜா, தேவா மற்றும் அவர்களது கூட்டாளிகள் ஜெயக்குமாரைச் சூழ்ந்துகொண்டு கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர் அடையாளங்கள் தெரியாமல் இருக்கச் சடலத்தைச் சிதைத்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.

9 பேர் அதிரடி கைது:

செல்போன் சிக்னல் மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில் போலீஸார் தீவிர வேட்டை நடத்தினர். இதில் துணை நடிகை பூஜா, அவரது முன்னாள் காதலன் தேவா, மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த ஐயப்பன், துர்கா, குப்புசாமி, சடையாண்டி, பூங்காவனம், ஹரிகரன், சீனிவாசன் மற்றும் இரண்டு சிறுவர்கள் என மொத்தம் 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு மற்றும் தடயங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சினிமா வாய்ப்புக்காகச் சென்னைக்கு வந்த இளைஞர், ஒரு துணை நடிகையின் மோகத்தால் உயிரை இழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget